மேலும் அறிய

22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?

Crime Affair Murder: தகாத உறவு காரணமாக கணவனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Crime Affair Murder: கணவன் மாரடைப்பு காரணமாக இறந்து கிடந்ததாக மனைவி அளித்த புகாரின் விசாரணை முடிவில் கொலை சதி அம்பலமாகியுள்ளது.

கணவனை கொன்று நாடகமாடிய மனைவி:

ஐதராபாத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து, கணவனை கொலை செய்துவிட்டு அவர் கழிவறையில் இறந்து கிடந்ததாக நாடகமாடியது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் தனியார் பல்கலைக்கழகத்தில் லாஜிஸ்டிக் மேனேஜராக பணியாற்றி வந்துள்ளார். கிழக்கு போடுப்பால் பிருந்தாவன் காலணியை சேர்ந்த 45 வயதான அசோக், மனைவி பூர்ணிமா மற்றும் கூட்டாளிகளால் சேர்ந்து கழுத்தை நெறித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அந்த பெண் தகாத உறவு கொண்டிருந்த 22 வயதான கட்டுமான தொழிலாளி ஒருவருடன், மற்றொரு நபரும் உதவியதாக காவல்துறையின் விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாரடைப்பால் இறந்ததாக புகார்:

தனது கணவன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக குடும்பத்தினரிடம் கூறி திசைதிருப்ப முயன்றுள்ளார். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக மெடிபள்ளி காவல்நிலையத்தில் பூர்ணிமா புகார் ஒன்றும் அளித்துள்ளார். அதில், தனது கணவர் கழிவறையில் சுயநினைவின்றி விழுந்து கிடந்ததாகவும், மல்கஜ்கிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதையும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையும் மேற்கொண்டனர்.

சந்தேகமும்.. அம்பலமான உண்மையும்..

போலீசார் ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்குரிய வகையில் இறந்தவரின் கழுத்து மற்றும் கன்னம் போன்ற உடலின் பல பகுதிகளில் காயம் இருந்தது கண்டறியப்பட்டது. இது காவல்துறைக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதையடுத்து உயிரிழந்தவரின் வீட்டைச் சுற்றி இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை சேகரித்த போலீசார், கொல்லப்பட்டவரின் மனைவி உட்பட 3 பேரை கைது செய்தனர்.

தகாத உறவால் கணவன் கொலை

காவல்துறை விசாரணையின் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பூர்ணிமா தகாத உறவில் இருப்பது குறித்து சந்தேகித்த கணவன் அசோக், பல்வேறு கேள்விகளை எழுப்பி கொடுமைப்படுத்த தொடங்கியுள்ளார். இதனால் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ய மனைவி முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த 11ம் தேதி அசோக் வீடு திரும்பியதும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகள் வீட்டிற்குள் நுழைந்து அவரை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பிரதான குற்றவாளியான மனைவி பூர்ணிமா கணவனின் கால்களை இறுக்கிப் பிடித்து, தாக்குவதற்கு வழிவகை செய்துள்ளார்.

அதன்பிறகு வீட்டில் இருந்த துணியை கொண்டு பெண்ணின் கள்ளக் காதலன், அசோக்கை கழுத்தை நெறுக்கி கொலை செய்துள்ளான். பின்பு திட்டப்படி, கணவனின் உடலில் இருந்த உடைகளை மாற்றிய மனைவி, அவர் குளித்துக் கொண்டு இருந்தபோது இறந்தது போன்ற சூழலை உருவாக்கியுள்ளார் என காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Embed widget