மேலும் அறிய

தற்கொலை செய்துகொள்ள போவதாக கணவன்.. தகராறில் கணவரைக் கொன்ற பெண் கைது..

திருச்சியில் தனது குழந்தைக்கு வாழைப்பழம் வாங்கி வர மறுத்ததால் கணவனை கத்தியால் குத்தி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்

திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவருடைய மகன் தினேஷ் ராஜசேகரன்(வயது 28). இவர் தென்னூர் பட்டாபிராமன் சாலையில் இருசக்கர வாகன ஷோரூமில் கலெக்‌ஷன் முகவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி லாவண்யா (26). இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.  இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தினேஷ் ராஜசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மனைவியை அடிக்கடி மிரட்டி வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு தனது குழந்தைக்கு வாழைப்பழம் வாங்கி வரும்படி தினேஷ் ராஜசேகரனிடம், லாவண்யா கூறியுள்ளார். ஆனால் தினேஷ் ராஜசேகரன் வாழைப்பழம் வாங்காமல் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த தினேஷ் ராஜசேகரன் சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.


தற்கொலை செய்துகொள்ள போவதாக கணவன்.. தகராறில் கணவரைக் கொன்ற பெண் கைது..
இதனை தொடர்ந்து தனது கணவரிடம் இருந்து லாவண்யா கத்தியை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் கத்தியை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவரும் கத்தியை பிடித்துக்கொண்டு மல்லுகட்டியுள்ளனர். அப்போது, லாவண்யா கத்தியை பறித்த வேகத்தில், தனது கணவரின் நெஞ்சில் வேகமாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்தவெள்ளத்தில் தினேஷ் ராஜசேகரன் மயங்கி சரிந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


தற்கொலை செய்துகொள்ள போவதாக கணவன்.. தகராறில் கணவரைக் கொன்ற பெண் கைது..

மேலும் கொலை வழக்கு இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், தினேஷ்ராஜசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவரை கத்தியால் குத்திய லாவண்யா மீது இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் (கொலை) கீழ் வழக்குப்பதிவு செய்து, லாவண்யாவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

 

தலைப்பு செய்திகள்

கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்.. தாய்மார்கள் ஆக்ரோஷம்..
கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்.. தாய்மார்கள் ஆக்ரோஷம்..
மானாமதுரை வைகையில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை: விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!
மானாமதுரை வைகையில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை: விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!
கல்யாணக் கனவு கலைந்தது! பாலத்தின் தடுப்புக் கட்டையில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப மரணம்!
கல்யாணக் கனவு கலைந்தது! பாலத்தின் தடுப்புக் கட்டையில் கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தில் 3 பேர் பரிதாப மரணம்!
தாம்பரம் அருகே தலைமை காவலரை வெட்டிய ‘ஏ-பிளஸ்’ ரவுடி காலில் துப்பாக்கிச் சூடு – போலீசார் அதிரடி நடவடிக்கை!
தாம்பரம் அருகே தலைமை காவலரை வெட்டிய ‘ஏ-பிளஸ்’ ரவுடி காலில் துப்பாக்கிச் சூடு – போலீசார் அதிரடி நடவடிக்கை!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
போதைப்பொருள் வீடியோ சர்ச்சை: அமைச்சர் சரத்தை பதவியவிட்டு நீக்குங்க- போராட்டத்தில் குதிக்கும் திமுக!
Thirumavalavan: விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
விஜய்க்காக இறங்கி வந்து முட்டுக் கொடுத்த திருமாவளவன்.. “அது முதல்வரின் அதிகாரம்” என பஞ்ச்
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடு: தேர்வர்கள் வாழ்வில் விளையாடுவதா? குவியும் கண்டனங்கள்!
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
UPSC மத்திய அரசு வேலை: 105 குரூப் ஏ, பி பணியிடங்கள்- ஊதியம், தகுதி, விண்ணப்பிப்பது எப்படி?
NTK Seeman: பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
பொது வேட்பாளராகும் சீமான்..! கோட்டைக்காக கொள்கைகளை கைவிடும் நாதக? தவெகவிற்கு லாபம்?
RAIN ALERT: சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூருக்கு மீண்டும் கன மழை.! தேதி குறித்த வானிலை மையம்- எப்போ தெரியுமா.?
Embed widget