மேலும் அறிய

ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி: சினிமா பாணியில் மடக்கி கைதான குற்றவாளிகள்!

மூன்று நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மேம்பாலத்தின் மேலிருந்து கீழே குதித்தனர். இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஊறுகாய் கம்பெனி மேலாளரின் காரை வழிமறித்து கத்தி முனையில் 30 இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி: சினிமா பாணியில் மடக்கி கைதான குற்றவாளிகள்!

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த சார்வாய்புதூர் பகுதியில் முகமதுஜுன்னா(37) என்பவர் ஊறுகாய் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் மேலாளராக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா(30), என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி காலை தலைவாசலில் இருந்து ராஜா மற்றும் அதே பகுதியை சேர்ந்த கேசியர் நிதி சக்கரவர்த்தி(28), கார் ஓட்டுனர் மணக்காடு பகுதியை சேர்ந்த ராஜி மகன் கிருஷ்ணன்(24), ஆகியோர் மரக்காணம், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளரிப்பிஞ்சு வாங்கி ஊறுகாய் தயாரிப்பதற்காக 30 லட்சம் ரூபாய் காரில் எடுத்துக்கொண்டு பெருமுக்கல் அருகே உள்ள பண்ணையில் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றனர்.



ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி: சினிமா பாணியில் மடக்கி கைதான குற்றவாளிகள்!

அப்போது பெருமுக்கல் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 8 மர்ம நபர்கள் காரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் 8 பேரும் காரின் கண்ணாடிகளை உடைத்து ராஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து பையில் வைத்திருந்த 30 லட்சம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதா, ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.


ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி: சினிமா பாணியில் மடக்கி கைதான குற்றவாளிகள்!

 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சார்வாய் புதூர் கிராமத்திலிருந்து 30 லட்சம் ரூபாய் காரில் எடுத்துச் செல்லப்படுவதாக முக்கிய குற்றவாளிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார் உட்பட 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 12லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதான 4 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளை 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இதில் திண்டிவனம் மரக்காணம் சாலை சிறுவாடி பேருந்து நிறுத்தம் அருகே பிரம்மதேசம் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மேலும் இரண்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மீதமுள்ள 5 முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.


ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி: சினிமா பாணியில் மடக்கி கைதான குற்றவாளிகள்!

இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் பிரம்மதேசம் ஆய்வாளர் சீனிபாபு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாமல் சென்ற காரை நிறுத்த முயன்றனர். அப்போது அதில் வந்த மூன்று நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மேம்பாலத்தின் மேலிருந்து கீழே குதித்தனர். இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் செய்த விசாரணையில் சென்னை பொலிச்சனூர் பகுதியை சேர்ந்த கோயில்ராஜ் மகன் சஜித்(28), செங்கல்பட்டு நாவல் நெடுஞ்செழியன் நகரை சேர்ந்த குமார் மகன் அசோக்(26) மற்றும் செங்கல்பட்டு ஊரப்பாக்கத்தை சேர்ந்த வாசு மகன் அரவிந்த்(27) என்பதும் இவர்கள்

பெருமுக்கல் பேருந்து நிறுத்தத்தில் காரை வழிமறித்து கத்தி முனையில் 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.  அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 3 பைக், கார், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுவரை கைதானவர்களிடம் இருந்து 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
அதிகாரிகளை எதிர்த்த டி.எஸ்.பி சுந்தரேசனுக்கு மீண்டும் பணி: நீலகிரி டி.எஸ்.பியாக பொறுப்பேற்பு...
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
சீர்காழி அருகே பரபரப்பு: மதுபான கடை வாசலில் வாலிபர் சுருண்டு விழுந்து உயிரிழப்பு - கள்ளமது விற்பனையால் நேர்ந்த விபரீதமென உறவினர்கள் குற்றச்சாட்டு..
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
Loan Recovery Agent ஆபாச பேச்சு !! தட்டி தூக்கிய போலீசார் !! நடந்தது என்ன ?
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs WI: தடுமாறிய இந்திய பவுலிங்! பொளந்து கட்டிய பவல்-ஹோல்டர்.. ரெக்கார்ட் சேஸ் செய்வார்களா சூர்யா படை
IND Vs WI: தடுமாறிய இந்திய பவுலிங்! பொளந்து கட்டிய பவல்-ஹோல்டர்.. ரெக்கார்ட் சேஸ் செய்வார்களா சூர்யா படை
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
ஜாக்கெட் இல்லாமல் நடித்தது எப்படி இருந்தது? மனம் திறந்த நீலிமா ராணி
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
அமெரிக்க எம்பிஏ கனவு கலையுமா? இந்திய மாணவர் சேர்க்கையில் 45% சரிவு! மாற்று வழிகள் என்ன?
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
பட்டியலின மாணவர்களுக்கு கொடுமை: தனியார் மருத்துவக் கல்லூரிகள் அராஜகம்! அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி ஆவேசம்
Embed widget