மேலும் அறிய

ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி: சினிமா பாணியில் மடக்கி கைதான குற்றவாளிகள்!

மூன்று நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மேம்பாலத்தின் மேலிருந்து கீழே குதித்தனர். இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஊறுகாய் கம்பெனி மேலாளரின் காரை வழிமறித்து கத்தி முனையில் 30 இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி: சினிமா பாணியில் மடக்கி கைதான குற்றவாளிகள்!

சேலம் மாவட்டம் தலைவாசல் அடுத்த சார்வாய்புதூர் பகுதியில் முகமதுஜுன்னா(37) என்பவர் ஊறுகாய் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் மேலாளராக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜா(30), என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி காலை தலைவாசலில் இருந்து ராஜா மற்றும் அதே பகுதியை சேர்ந்த கேசியர் நிதி சக்கரவர்த்தி(28), கார் ஓட்டுனர் மணக்காடு பகுதியை சேர்ந்த ராஜி மகன் கிருஷ்ணன்(24), ஆகியோர் மரக்காணம், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளரிப்பிஞ்சு வாங்கி ஊறுகாய் தயாரிப்பதற்காக 30 லட்சம் ரூபாய் காரில் எடுத்துக்கொண்டு பெருமுக்கல் அருகே உள்ள பண்ணையில் விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதற்காக எடுத்துச் சென்றனர்.



ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி: சினிமா பாணியில் மடக்கி கைதான குற்றவாளிகள்!

அப்போது பெருமுக்கல் பேருந்து நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த 8 மர்ம நபர்கள் காரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் 8 பேரும் காரின் கண்ணாடிகளை உடைத்து ராஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து பையில் வைத்திருந்த 30 லட்சம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதா, ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் தனிப்படை போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.


ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி: சினிமா பாணியில் மடக்கி கைதான குற்றவாளிகள்!

 

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சார்வாய் புதூர் கிராமத்திலிருந்து 30 லட்சம் ரூபாய் காரில் எடுத்துச் செல்லப்படுவதாக முக்கிய குற்றவாளிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார் உட்பட 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 12லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதான 4 பேரிடம் மேற்கொண்ட விசாரணையில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளை 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இதில் திண்டிவனம் மரக்காணம் சாலை சிறுவாடி பேருந்து நிறுத்தம் அருகே பிரம்மதேசம் ஆய்வாளர் சீனிபாபு மற்றும் உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மேலும் இரண்டு முக்கிய குற்றவாளிகளை கைது செய்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மீதமுள்ள 5 முக்கிய குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.


ஊறுகாய் கம்பெனி மேலாளரிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி: சினிமா பாணியில் மடக்கி கைதான குற்றவாளிகள்!

இந்நிலையில் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் சர்வீஸ் சாலையில் பிரம்மதேசம் ஆய்வாளர் சீனிபாபு தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாமல் சென்ற காரை நிறுத்த முயன்றனர். அப்போது அதில் வந்த மூன்று நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக மேம்பாலத்தின் மேலிருந்து கீழே குதித்தனர். இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் செய்த விசாரணையில் சென்னை பொலிச்சனூர் பகுதியை சேர்ந்த கோயில்ராஜ் மகன் சஜித்(28), செங்கல்பட்டு நாவல் நெடுஞ்செழியன் நகரை சேர்ந்த குமார் மகன் அசோக்(26) மற்றும் செங்கல்பட்டு ஊரப்பாக்கத்தை சேர்ந்த வாசு மகன் அரவிந்த்(27) என்பதும் இவர்கள்

பெருமுக்கல் பேருந்து நிறுத்தத்தில் காரை வழிமறித்து கத்தி முனையில் 30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர்.  அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 3 பைக், கார், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுவரை கைதானவர்களிடம் இருந்து 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தலைப்பு செய்திகள்

கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thai Maman Thanga Mothiram : குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ரெடி.? 4.41 லட்சம் ஒரு கிராம் மோதிரத்திற்கு டெண்டர்- அசத்தும் விஜய் அரசு
BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
ARUN IPS: தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
தூக்கி அடிக்கப்பட்ட அருண் ஐபிஎஸ் - 2 மாதங்களில், இவ்ளோ காரணங்கள் இருக்கா? யார் இந்த மகேஷ்வரி?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்? மழை? தமிழக வானிலை அறிக்கை
Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்
Gold and silver rate today : ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
ரூ.5000 குறைந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை நிலவரம் இதோ...
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Embed widget