மேலும் அறிய

கடனை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல்.. தவெக நகர செயலாளர் மீது பரபரப்பு புகார்

எனக்கு சேர வேண்டிய ரூ.46 லட்சத்தை தருவதாக கூறி எனக்கு முத்திரைத்தாளில் எழுதிக்கொடுத்தார். ஆனால் இதுநாள் வரையிலும் எனக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார்.

விழுப்புரம்: தேர்தல் செலவிற்காக வாங்கிய ரூ.60 லட்சம் பணத்தில் பாதி பணத்தை தராமல் மோசடி செய்து அடியாட்களை வைத்து கோட்டகுப்பம் தமிழக வெற்றி கழக நகர செயலாளர் மிரட்டுவதாக விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட நபர் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கோட்டக்குப்பத்தை சேர்ந்த ஆஷிக்அலி (வயது 31) என்பவர் தனது உறவினர்களுடன் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் பணியாற்றி வருகிறேன். எனது நண்பரான கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒருவர், தொழில் விஷயமாகவும், வீட்டு பராமரிப்பு செலவிற்காகவும் ரூ.60 லட்சம் தரும்படி கேட்டார். சிறுவயதில் இருந்து நாங்கள் நண்பர்களாக பழகி வருவதால் நம்பிக்கையின் பேரில், கடந்த 2023 மார்ச் மாதம் எனது பெயரில் வங்கி கடன் பெற்று ரூ.60 லட்சத்தை அவரிடம் கொடுத்தேன்.

பணத்தைப்பெற்ற அவர், கடன் தொகைக்கு மாத தவணை கட்ட எனக்கு ரூ.20 லட்சத்து 29 ஆயிரத்து 732-ஐ அனுப்பினார். பின்னர் அவர், கடந்த 6 மாதமாக சரியான முறையில் எனக்கு கடன் தொகை கட்ட பணத்தை அனுப்பாமல் ஏமாற்றி வருகிறார். எனது நண்பர் தற்போது தமிழக வெற்றிக்கழகத்தில் உள்ளார்.

ரவுடிகளை வைத்து எனக்கு கொலை மிரட்டல்

அவரிடம் சென்று பணம் தரும்படி கேட்டதற்கு அவர், ரவுடிகளை வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனக்கு சேர வேண்டிய ரூ.46 லட்சத்தை தருவதாக கூறி எனக்கு முத்திரைத்தாளில் எழுதிக்கொடுத்தார். ஆனால் இதுநாள் வரையிலும் எனக்கு சேர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். எனவே அவர் மீது விசாரணை செய்து சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தார்.

த.வெ.க நிர்வாகி பதில்

இதுகுறித்து த.வெ.க நிர்வாகி முகமது கவுஸ்யிடம் கேட்டபோது, பணம் வாங்கியது உண்மைதான். ஆனால் பாதி பணம் கொடுத்து விட்டேன் மீதி பணமும் கொடுத்து விடுவேன். அதற்குள் என் மீது புகார் கொடுத்துள்ளார் என தொலைபேசி வாயிலாக விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget