மேலும் அறிய

விஷம் கலந்த தோசை... மகனை கொன்ற தாய், கள்ளக்காதலி - நடந்தது என்ன?

மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதால் விஷம் கலந்த தோசையை கொடுத்து கொன்றதாக வாக்குமூலம்.

விழுப்புரம்: மது குடிக்க பணம் கேட்டு அடித்து துன்புறுத்தியதால் விஷம் கலந்த தோசையை கொடுத்து வாலிபரை கொன்று நாடகமாடிய கள்ளக்காதலி, தாய் கைது செய்யப்பட்டனர்.

கார் டிரைவர் கொலை

விழுப்புரத்தை அடுத்த குமளம் அருகே சீனிவாசபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் விஸ்வலிங்கம் (வயது 29), கார் டிரைவர். இவர் கடந்த 17-ந்தேதி மாலை அவரது வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடைய மார்பு, கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ரத்தக்காயங்கள் இருந்தன.

இதுகுறித்த தகவலின்பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், விஸ்வலிங்கத்தை யாரோ அடித்துக்கொலை செய்திருப்பதை உறுதி செய்தனர். மேலும் விசாரணையில், திருக்கோவிலூர் அருகே மேலத்தாழனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி (25) என்பவரை விஸ்வலிங்கம் திருமணம் செய்துகொள்ளாமலே அவரை தனது வீட்டில் தங்கவைத்து கணவன்- மனைவிபோல் குடும்பம் நடத்தி வந்ததும், விஸ்வலிங்கம் கொலை செய்யப்பட்டதற்கு பிறகு செல்வி அங்கு இல்லாததும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸ் 

இதன் அடிப்படையில் விஸ்வலிங்கத்தை செல்வி கொலை செய்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்ட போலீசார், செல்வியை பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர். இந்த சூழலில் நேற்று திருக்கோவிலூர் பகுதியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற செல்வியை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்கள்....

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வலிங்கம், திருக்கோவிலூர் மேலத்தாழனூர் பகுதிக்கு கார் சவாரிக்காக சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த செல்விக்கும், விஸ்வலிங்கத்திற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதலாக மலர்ந்தது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தனர். பின்னர் செல்வியை விஸ்வலிங்கம் திருமணம் செய்து கொள்ளாமல் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று கணவன்- மனைவிபோல் குடும்பம் நடத்தி வந்தார்.

விஸ்வலிங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு செல்வியிடமும், தனது தாய் முனியம்மாளிடமும் (64) தகராறு செய்து வந்துள்ளார். மேலும் விஸ்வலிங்கம், அவ்வப்போது மது குடிக்க பணம் தரும்படி கேட்டு செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரையும் தகாத வார்த்தையால் திட்டி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். விஸ்வலிங்கத்தின் தொந்தரவை தாங்கிக்கொள்ள முடியாமல் துன்பப்பட்ட செல்வி, விஸ்வலிங்கத்தை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார். அதற்கு, தனது மகன் என்றுகூட பாராமல் முனியம்மாளும் ஒப்புக்கொண்டார்.

விஷம் கலந்த தோசை

இந்நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த விஸ்வலிங்கம், தனது தாய் முனியம்மாள் மற்றும் செல்வி ஆகிய இருவரிடமும் தகராறு செய்து அடித்து துன்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருவரும் வீட்டில், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து தோசை மாவில் கலந்து தோசை சுட்டு விஸ்வலிங்கத்துக்கு கொடுத்துள்ளனர். போதையில் இருந்த அவரும் விஷம் கலந்திருப்பது தெரியாமல் அந்த தோசையை சாப்பிட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் வாயில் நுரைத்தள்ளி இறந்துள்ளார். 

அதன் பிறகு இந்த கொலையை மறைக்க செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரும் திட்டம் போட்டனர். அப்போதுதான், சம்பவம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் விஸ்வலிங்கத்திற்கும் அவரது உறவினர்கள் சிலருக்கும் கடும் தகராறு ஏற்பட்டுள்ளதை நினைவில் கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய இருவரும், தகராறில் ஈடுபட்ட அந்த உறவினர்கள்தான் விஸ்வலிங்கத்தை கொலை செய்து விட்டதாக அனைவரையும் நம்ப வைக்கும் வகையில், விஸ்வலிங்கம் இறந்ததற்கு பிறகு அவரது உடலில் மார்பு, கழுத்து, கன்னம், தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் கிழித்து நாடகம் ஆடியுள்ளனர்.

மேற்கண்ட தகவல் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையே செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரும் கொடுத்த வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்தனர்.

கள்ளக்காதலி, தாய் கைது

இதையடுத்து செல்வி, முனியம்மாள் ஆகிய இருவரின் மீதும் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை, விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தலைப்பு செய்திகள்

"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
Embed widget