மேலும் அறிய

Crime : கன்னத்தில் அறைந்த 12ம் வகுப்பு மாணவி..! பாலியல் வன்கொடுமை செய்து எரித்த இளைஞர்கள்...! உ.பி.யில் கொடூரம்..!

உத்தரபிரதேசத்தில் 12ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து இளைஞர்கள் தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பிலிபட் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளது மதோடன்டா கிராமம். இந்த கிராமத்தில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அந்த மாணவியின் தந்தை விவசாய பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் 12ம் வகுப்பு மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலே இருந்து ஓய்வு எடுத்து வந்துள்ளார்.

மாணவி வீட்டில் இருந்த அன்று மாணவியின் தந்தை விவசாய பணிக்காக வெளியில் சென்றிருந்தார். மாணவியின் தாயாரும் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில், மாணவியின் தந்தை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அப்போது, அங்கே மாணவி தீயில் கருகி உயிருக்கு போராடிய நிலையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.


Crime : கன்னத்தில் அறைந்த 12ம் வகுப்பு மாணவி..! பாலியல் வன்கொடுமை செய்து எரித்த இளைஞர்கள்...! உ.பி.யில் கொடூரம்..!

இதையடுத்து, உடனடியாக மாணவியை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12ம் வகுப்பு மாணவிக்கு நேற்றுதான் சுயநினைவு திரும்பியுள்ளது. சுயநினைவு திரும்பிய மாணவி அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

16 வயதான மாணவி பள்ளிக்குச் செல்லும் வழியில் அந்த பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் சிலர் மாணவியை கேலியும், கிண்டலும் செய்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 2-ந் தேதி பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது இளைஞர்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த 12ம் வகுப்பு மாணவி அவரை கிண்டல் செய்த தினேஷ் யாதவ் என்பவரை கன்னத்தில் அறைந்துள்ளார்.


Crime : கன்னத்தில் அறைந்த 12ம் வகுப்பு மாணவி..! பாலியல் வன்கொடுமை செய்து எரித்த இளைஞர்கள்...! உ.பி.யில் கொடூரம்..!

அனைவர் முன்பும் மாணவி தன்னை அறைந்ததால் தினேஷ்யாதவ் ஆத்திரமடைந்துள்ளார். மேலும், தினேஷ்யாதவ் நண்பர்களும் அவரை கேலி செய்துள்ளனர். இதனால், அந்த மாணவியை பழிவாங்க தினேஷ்யாதவ் திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக, தனது நண்பர் அமர்சிங்கிடம் உதவி கோரியுள்ளார். இருவரும் மாணவியை பழிவாங்க தக்கசமயம் எதிர்பார்த்து காத்திருந்தனர்,

இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி மாணவி வீட்டில் தனியாக இருப்பதை இருவரும் அறிந்துள்ளனர். இதையடுத்து, வீட்டில் யாரும் இல்லாததை உறுதி செய்த தினேஷ்யாதவ் மற்றும் அமர்சிங் இருவரும் மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்களை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் வாயில் துணி வைத்து இருவரும் கட்டியுள்ளனர். பின்னர், தினேஷ்யாதவ் மற்றும் அமர்சிங் இருவரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதன்பின்னரும், ஆத்திரம் அடங்காத இருவரும் அங்கே இருந்த பெட்ரோலை எடுத்து மாணவி மீது ஊற்றி தீ வைத்துள்ளனர். மாணவி வாயில் துணியால் கட்டியதால் மாணவியால் கத்த முடியாமல் வலியில் துடித்துள்ளார்.

பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்த தந்தை மகளின் நிலை கண்டு பதறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது, மாணவி பிலிபட் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது வரை மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், போலீசார் தினேஷ்யாதவ், அமர்சிங் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க : வேறு சாதி இளைஞரை காதலித்த மகள்..! கழுத்தை நெரித்து கொன்று எரித்த தந்தை..! உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget