மேலும் அறிய

சொந்த சகோதரியை திருமணம் செய்த சம்பவத்தால் பரபரப்பு.. அதிர்ச்சி காரணம்.. பதிவான எஃப்.ஐ.ஆர்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சொந்த சகோதரர் ஒருவர் தன்னுடைய சகோதரியை திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களில் பெண் குழந்தைகளுக்கான திருமணங்களுக்கு பல திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் தாலிக்கு தங்கம் என்ற திட்டம் மிகவும் பிரபலமான ஒன்று. அந்தவகையில் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற திட்டங்கள் அமலில் உள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் பெண்ணின் திருமணம் தொடர்பாக ஒரு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்திற்காக ஆசைப்பட்டு ஒருவர் செய்த காரீயம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சம்யூக் விவாஹ் யோஜனா திட்டம் என்ற ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் திருமணம் நடைபெறும் தம்பதிகளுக்கு 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படும். அதாவது 20 ஆயிரம் ரூபாய் மணமகளின் பெயரில் வங்கியில் செலுத்தப்படும். அத்துடன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தரப்படும். கடந்த 11ஆம் தேதி இத்திட்டத்தின் கீழ் 51 ஜோடிகளுக்கு துண்ட்லா பகுதியில் திருமணம் நடைபெற்றுள்ளது.


சொந்த சகோதரியை திருமணம் செய்த சம்பவத்தால் பரபரப்பு.. அதிர்ச்சி காரணம்.. பதிவான எஃப்.ஐ.ஆர்

இந்த திருமணத்தில் ஃபிரோசாபாத் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியும் திருமணம் செய்துள்ளது. அந்த ஜோடி அரசின் திட்ட உதவியை பெற வந்தபோது அவர்கள் செய்த போலியான செயல் அனைவருக்கும் தெரியவந்தது. அதாவது அந்த தம்பதியாக இருந்த மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் உண்மையில் அண்ணன்-தங்கை என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். கிராம மக்களின் புகாரை ஏற்று அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நபரின் ஆதார் கார்டு விவரம் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த போலி தம்பதிகளுக்கு வழங்க இருந்த திட்டம் சார்ந்த உதவிகளையும் அதிகாரிகள் தற்போது ரத்து செய்துள்ளனர். அத்துடன் அந்த நபர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மாநில அரசின் திட்ட உதவியை பெறுவதற்காக ஒரு சொந்த அண்ணன் தங்கையை திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று அரசு திட்டங்களை பெற பலர் சமீபத்தில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகளை பலரும் தொடர்ந்து முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

மேலும் படிக்க: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 101% எங்கள் வெற்றி உறுதி.. அம்ரிந்தர் சிங் பாஜகவுடன் கூட்டணி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Breaking News LIVE: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பரப்புரை ஓய்ந்தது
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget