மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
ஊத்துக்கோட்டையில் டியூஷன் முடிந்து சென்ற பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக போதை ஆசாமியை அடித்து வெளுத்த பொதுமக்கள்.

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டையில் டியூஷன் முடிந்து சென்ற பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக போதை ஆசாமியை சட்டை பிடித்து தாய் அடித்த நிலையில், பொது மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இது தொடர்கதையாகவே இருக்கிறது. அரசும் காவல்துறையை கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் குறையாத வண்ணமே இருக்கிறது. போக்சோ சட்டம் வந்தாலும், அதைக்கூட பொருட்படுத்தாமல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் டியூஷன் முடிந்து தாயுடன் சென்ற +2 மாணவியை அங்கிருந்த போதை ஆசாமி ஒருவர் இடித்து அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனைத்தொடர்ந்து, மாணவியின் தாயார் அந்த நபரை சட்டையை பிடித்து அடித்த நிலையில், அங்கிருந்த பொது மக்கள் அந்த நபரை தர்ம அடி கொடுத்து ஊத்துக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் பேரண்ட்டூர் பகுதியை சேர்ந்த ராஜா(42) என தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















