மேலும் அறிய

மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையளிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்த சாமியார்.. உத்தர பிரதேசத்தில் பயங்கரம்..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி 80 வயது நபர் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மஞ்சள் காமாலை பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி 80 வயது சாமியார் ஒருவர் 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் கொடுத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சுபாஷ் என்ற அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் எடாவா மாவட்டத்தில்தான் இச்சம்பவம் நடந்துள்ளது. எட்டாவா மாவட்ட பகேவார் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கண்ணீர்மல்க விவரித்த பாட்டி:

இச்சம்பவம் குறித்து கண்ணீர்மல்க விவரித்த சிறுமியின் பாட்டி, "எனது பேத்திக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தோம். அக்கம்பக்கத்தினர் சொன்னதால் சுபாஷ் என்ற சாமியாரிடம் கூட்டிச் சென்றோம். சுபாஷ், சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி உள்ளே கூட்டிச் சென்றார். அங்கே அவர் எனது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். ஆனால், எனது பேத்தி சுதாரித்துக் கொண்டு குரல் எழுப்பினார். இதனால், நாங்கள் பேத்தியை காப்பாற்றிவிட்டோம். இருந்தாலும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம் " என்றார்.

பகேவார் காவல் நிலையத்தில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர். சுபாஷை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சிறுமியின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

உ.பி.யில் தான் அதிகம்:

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை 2018, 19 காலகட்டத்தில் 7.3% அதிகரித்துள்ளது. நாட்டிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது. அதுவும் குறிப்பாக பட்டியிலினப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடைபெறுகிறது. உத்தரப் பிரதேசத்தில் 2018 19 காலகட்டத்தில் 59,853 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஹரியாணா மாநிலத்தில் குறைந்தளவு வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்களுக்கு மட்டுமல்ல பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் அதிகமான குற்றச்செயல்கள் உத்தரப் பிரதேசத்தில் தான் நடந்துள்ளன. உ.பி.யில்  பட்டியலினப் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக மட்டும் 11,829 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் உன்னாவோ சம்ப்வம், ஹத்ராஸ் சம்பவம், சாஃப்டர்ஜங் சம்பவம் என மறக்கமுடியாத பல பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அட்சி நடைபெறுகிறது. அங்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. உ.பியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதையே எதிர்க்கட்சிகள் பிரதான ஆயுதமாக கையில் எடுத்துள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
Embed widget