மேலும் அறிய

Crime : சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத தந்தை...குழந்தையை கொலை செய்த கொடூரம்..!

உத்தரகாண்டில் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் தந்தையே தனது மூன்றரை வயது மகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது உத்தம்சிங் நகர் மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது தாரிக். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், இவரது மூன்றரை வயதே ஆன இரண்டாவது மகனை காணவில்லை என்று கடந்த செவ்வாய்கிழமை போலீசில்  புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில், அவரது மகனை தேடிய போலீஸ் அருகில் உள்ள பரெய்லி மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள புதர்கள் மண்டிய கால்வாயில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர். இதையடுத்து, அந்த குழந்தை உயிரிழந்தது எப்படி என்று போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த, போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தையின் சடலத்தை தூக்கிக்கொண்டு தந்தை மொகது தாரிக் செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.


Crime : சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத தந்தை...குழந்தையை கொலை செய்த கொடூரம்..!

இதையடுத்து, மொகது தாரிக்கிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் தனது மகனை தானே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக உத்தம்சிங்நகர் காவல் கண்காணிப்பாளர் மம்தாவோரா கூறியதாவது, “மொகது தாரிக்கிற்கு சொந்தமாக ட்ரக் உள்ளது. அவர் அந்த ட்ரக்கை ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். ஆனால், அதற்கான வேலை தொடர்ந்து வராமல் இருந்ததால் கடந்த சில காலமாகவே அவர் கடுமையான பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். மேலும், தனது ட்ரக்கிற்கு இ.எம்.ஐ. கட்ட முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மேலும் படிக்க : அமெரிக்காவில் காணாமல் போன சிறுமி: 2 ஆண்டுகளுக்குப்பின் படிக்கட்டு அடியில் இருந்து கண்டுபிடிப்பு!

மேலும் படிக்க : Crime : சென்னை தொழிலதிபரிடம் பெண்குரலில் பேசி ரூபாய் 14 லட்சம் மோசடி...! வடமாநில சகோதரர்கள் கைது...!

அதுமட்டுமின்றி, உயிரிழந்த அவரது மகனுக்கு பிறந்ததில் இருந்தே ஹீமோபிலியா எனப்படும் அரியவகை ரத்த குறைபாடு நோய் இருந்துள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க அதிகளவில் பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்காக அவர் வாங்கிய தொகையும் அவரை மேலும் கடனாளி ஆக்கியுள்ளது. இதனால், தனது மகனின் சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாமலும், போதிய வருவாய் இன்றி கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மொகது தாரிக் தனது மகனை தானே கொலை செய்துள்ளார்” எனறு கூறியுள்ளார்.


Crime : சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத தந்தை...குழந்தையை கொலை செய்த கொடூரம்..!

மகனின் மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாத தந்தை, தான் பெற்ற மகனையே கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
மானாமதுரை இளைஞர் மரணம் ; போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது !
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget