மேலும் அறிய

கோவை : வயிற்றில் கேப்ஸ்யூல்.. அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள்.. உகாண்டா நாட்டு பெண் கைது

போதைப்பொருள் வயிற்றில் கரையாதவாறு மாத்திரையாக மாற்றி விழுங்கி கடத்தப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் அப்பெண்ணின் வயிற்றில் இருந்து 81 கேப்சூல்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.

சார்ஜாவில் இருந்து கோவை இடையே ஏர் அரேபியா விமான இயக்கப்படுகிறது. இந்த விமானத்தில் கடந்த 6 ம் தேதியன்று உகாண்டா நாட்டை சேர்ந்த சான்ரா நாண்டேசா என்ற 33 வயது பெண் கோவைக்கு வந்து உள்ளார். கோவை விமான நிலையத்தில் விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனை செய்தனர். அப்போது உகாண்டா நாட்டில் இருந்து வந்த சான்ரா நாண்டேசாவின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சான்ரா நாண்டேசா பிடித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 


கோவை : வயிற்றில் கேப்ஸ்யூல்.. அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள்.. உகாண்டா நாட்டு பெண் கைது

அப்போது அந்த பெண் திருப்பூரில் உள்ள பின்னலாடை தொழில் துறையினரை சந்திக்க வந்ததாக தெரிவித்து உள்ளார். தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால், அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்திய போது, அந்த பெண்ணின் வயிற்றில் போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பெண்ணை ஸ்கேன் செய்து பார்த்த போது, போதை பொருளை மாத்திரை கேப்சூலில் அடைத்து விழுங்கி வயிற்றில் மறைத்து கடத்தி வந்தது அம்பலமானது.  


கோவை : வயிற்றில் கேப்ஸ்யூல்.. அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள்.. உகாண்டா நாட்டு பெண் கைது

இதனையடுத்து உகாண்டா நாட்டு பெண்ணை மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக போதைப் பொருளை மீட்கும் பணிகள் நடந்து வந்தன. போதைப்பொருள் வயிற்றில் கரையாதவாறு மாத்திரையாக மாற்றி விழுங்கி கடத்தப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் அப்பெண்ணின் வயிற்றில் இருந்து 81 கேப்சூல்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து அதனை ஆய்வு செய்த போது, MERTHA MPHETAMINE மெத்தபேட்டைமன் என்ற போதை மருந்தை கடத்தி வந்ததும், இதன் மதிப்பு 4 கோடி ரூபாய் என்பதும் அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. 


கோவை : வயிற்றில் கேப்ஸ்யூல்.. அயன் பட பாணியில் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள்.. உகாண்டா நாட்டு பெண் கைது

நேற்று கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சாண்ட்ரா நாண்டெசா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த போதைப் பொருள் கடத்தலில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது? யாருக்காக போதைப் பொருள் கடத்தப்பட்டது? உள்ளிட்ட விபரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் சாண்ட்ரா நாண்டெசாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து,  கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். சாண்ட்ரா நாண்டெசாவை வருகின்ற 23-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க தனி நீதிபதி லோகேஸ்வரன் உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட சாண்ட்ரா நாண்டெசா வெளிநாட்டவர் என்பதால் சென்னை புழல் சிறைக்கு கொண்டுச் செல்ல காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget