மேலும் அறிய

நீச்சல் தெரியாமல் குளிக்க சென்ற நண்பர்கள் இருவரும் மாயம்: தேடுதல் பணியில் தீயணைப்பு துறையினர்..

செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் அருகே குளிக்க சென்ற இருவர்கள் மாயம்

கடந்த ஒரு வருடம் காலமாக பாலாற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. கடந்த பருவமழையின் பொழுது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி அளவிற்கு பாலாற்றில் தண்ணீர் சென்றது. தொடர்ந்து அவ்வப்போது பெய்யும் மழை, பிற மாநிலங்களில் பெய்யும் மழை உள்ளிட்ட காரணங்களால் பாலாற்றில் குறைந்த அளவில் ஆன தண்ணீர் ஒரு வருடங்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கிறது.
 

நீச்சல் தெரியாமல் குளிக்க சென்ற நண்பர்கள் இருவரும் மாயம்: தேடுதல் பணியில் தீயணைப்பு துறையினர்..
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தமிழக ஆந்திர எல்லை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் உள்ள பழைய சீவரம் பாலாற்று தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் செங்கல்பட் மாவட்டம் பாலூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சஞ்சய் (16), சம்பத்குமார் என்பவரின் மகன் சஞ்சய் ( 17) ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல்ல பள்ளியில் படித்து வருகின்றனர். இருவரும் பாலாற்றில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், நண்பர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு பாலாற்றில் குளிக்க சென்ற பொழுது மாயமாகியுள்ளனர். நீண்ட நேரமாக குளிக்கச் சென்ற இருவரும் திரும்பி வராத காரணத்தினால், அப்பகுதியைச் சேர்ந்த அவர்களுடைய நண்பர்கள் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

நீச்சல் தெரியாமல் குளிக்க சென்ற நண்பர்கள் இருவரும் மாயம்: தேடுதல் பணியில் தீயணைப்பு துறையினர்..
 
குறிப்பாக பாலாற்றில் குளிக்கச் சென்ற இருவருக்குமே நீச்சல் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் காண மாயமான இருவர் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து இதுகுறித்து காவல்துறை மூலமாக தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாயமான இருவரை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் காவல் துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். 
 
இரவு என்பதால் தேடுதல் பணி தொய்வு ஏற்பட்டது. மேலும் இன்று மீண்டும் காலை முதல் தேடுதல் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டாலும் இது குறித்து முறையான எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்டவை வைக்கவில்லை, இது குறித்து கண்காணிப்பும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது காரணத்தினால் இதுபோன்ற சம்பவம் . நடைபெறுவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்தனர்.
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 
 

தலைப்பு செய்திகள்

அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
" பேனர் வைப்பதில் தகராறு " ரியல் எஸ்டேட் அதிபர் பட்டப் பகலில் வெட்டிப் கொலை
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
IIT Madras: மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.40,000 உதவித்தொகை- ஐஐடி சென்னை அழைப்பு, விண்ணப்பம், தகுதி- முழு விவரம்
Embed widget