மேலும் அறிய

கவரிங்கை வைத்து ‛கவர்’ செய்த வங்கி காசாளர்கள் கைது: 400 சவரன் நகை மீட்பு!

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிக் கிளையில் அடகு வைத்த நகைகளுக்கு மாற்றாக கவரிங் நகைகளை மாற்றி மோசடி செய்த இரு காசாளர்கள்கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிக் கிளையில் அடகு வைத்த நகைகளுக்கு மாற்றாக கவரிங் நகைகளை மாற்றி மோசடி செய்த இரு காசாளர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்ட 400 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. புதுச்சேரி லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் நகர கூட்டுறவு வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் 1,500க்கும் மேற்பட்டோர் தங்களது நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர்.

கடந்த 18ம் தேதி ஆறுமுகம் என்பவர் தான் அடகு வைத்த நகைகளை மீட்க சென்றார். லாக்கரில் இருந்து எடுத்து வரப்பட்ட அவரது கடன் அட்டைக்கான நகை பையில் அவரது நகைக்கு பதிலாக வேறு நகைகள் இருந்துள்ளன. அதுவும் போலி நகையாக இருந்ததால் மேலாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து கூட்டுறவு தலைமை வங்கி அதிகாரிகள் லாஸ்பேட்டை வங்கியில் அடமானம் வைத்த நகைகளை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர். இதில் நகை மோசடி செய்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி வங்கியின் தலைமை காசாளரான கணேசன், உதவி காசாளாரான விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


கவரிங்கை வைத்து ‛கவர்’  செய்த வங்கி காசாளர்கள் கைது: 400 சவரன் நகை மீட்பு!

இது பற்றி காவல் ஆய்வாளர் வெங்கடா ஜலபதி இன்று கூறுகையில், வங்கியில் அடமானம் வைக்கப்படும் நகைகளை லாக்கரில் வைத்து பாதுகாப்பது வழக்கம். லாக்கரை திறக்க காசாளர்கள் செல்லும்போது வங்கி மேலாளர் மேகநாதன் உடன் செல்வார். அவர் விடுமுறை எடுத்தால் உதவி மேலாளர் பிரதீபாவிடம் வங்கி லாக்கர் சாவிகள் இருக்கும். பிரதீபா பொறுப்பில் இருக்கும் போது லாக்கர் திறக்கும் போது காசாளரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் லாக்கர் சாவிகளை தருவது வழக்கம்.


கவரிங்கை வைத்து ‛கவர்’  செய்த வங்கி காசாளர்கள் கைது: 400 சவரன் நகை மீட்பு!

அதை பயன்படுத்திக் கொண்ட கணேசன், விஜயகுமார் இருவரும் வங்கியில் அடமானம் வைக்கப்படும் நகைகளை எடுத்து விட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து விடுவார்கள். தங்க நகைகளை வங்கியிலிருந்து எடுத்துக்கொண்டு வெளியில் சென்று வேறு இடங்களில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். வங்கியில் அடமானம் வைத்தோர் தங்க நகைகளை திருப்ப வரும்போது குறிப்பிட்ட நாளில் வருமாறு கூறி வெளியில் இருக்கும் நகைகளை எடுத்து வந்து லாக்கரில் வைத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.


கவரிங்கை வைத்து ‛கவர்’  செய்த வங்கி காசாளர்கள் கைது: 400 சவரன் நகை மீட்பு!

அண்மையில் ஆறுமுகம் என்பவர் நகைகளை அவசரமாக திருப்ப வந்த போது காசாளர்கள் மாட்டியுள்ளனர். லாக்கரில் இருந்த அடமான நகைகளில் 80 பைகளில் இருந்த 400 பவுன் நகைகளை வெளியில் அடமானம் வைத்திருந்தனர். அந்த நகைகள் அனைத்தும் மீட்டுள்ளோம். இதன் மதிப்பு ரூ.1.19 கோடி. நகைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வங்கியில் ஒப்படைப்போம். பொதுமக்கள் நகைகள் அனைத்தும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. இதனால் நகை அடகு வைத்தவர்கள் அச்சப்படத் தேவையில்லை. மேலும் இருவர் மீதும் 4 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Nadda Vs Karge: “அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
“அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
Chennai Power Shutdown: சென்னையில ஆகஸ்ட் 6-ம் தேதி புதனன்று மின் தடை ஏற்படப் போகும் இடங்கள் எவை தெரியுமா.?
சென்னையில ஆகஸ்ட் 6-ம் தேதி புதனன்று மின் தடை ஏற்படப் போகும் இடங்கள் எவை தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Nadda Vs Karge: “அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
“அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
Chennai Power Shutdown: சென்னையில ஆகஸ்ட் 6-ம் தேதி புதனன்று மின் தடை ஏற்படப் போகும் இடங்கள் எவை தெரியுமா.?
சென்னையில ஆகஸ்ட் 6-ம் தேதி புதனன்று மின் தடை ஏற்படப் போகும் இடங்கள் எவை தெரியுமா.?
Seeman: கிங்டம் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது.. சீமானின் கோபத்திற்கு காரணம் என்ன?
Seeman: கிங்டம் படத்தை தமிழ்நாட்டில் திரையிடக் கூடாது.. சீமானின் கோபத்திற்கு காரணம் என்ன?
மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங்கா?.. சக்சஸ் பார்ட்டியில் ரகசியம் சொன்ன நடிகை.. வைரல் வீடியோ
மிருணாள் தாகூருடன் தனுஷ் டேட்டிங்கா?.. சக்சஸ் பார்ட்டியில் ரகசியம் சொன்ன நடிகை.. வைரல் வீடியோ
அய்யய்யோ... 3 மகள்களும் வெட்டிக்கொலை.. தந்தை தற்கொலை - நாமக்கல்லில் நடந்தது என்ன?
அய்யய்யோ... 3 மகள்களும் வெட்டிக்கொலை.. தந்தை தற்கொலை - நாமக்கல்லில் நடந்தது என்ன?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2025): கேரள லாட்டரியில் இன்னிக்கு லக் யாருக்கு? 500 பேரின் கனவு நனவாகுமா?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2025): கேரள லாட்டரியில் இன்னிக்கு லக் யாருக்கு? 500 பேரின் கனவு நனவாகுமா?
Embed widget