மேலும் அறிய

திருக்கோவிலூர் : முட்டைகோஸ் மூட்டைகளுக்கிடையே மதுபாட்டில்களை பதுக்கி கடத்திய இருவர் கைது

திருக்கோவிலூர் அருகே லாரியில் முட்டைகோஸ் மூட்டைகளுக்கிடையே கடத்தப்பட்ட 3,840 மது பாட்டில்கள் பறிமுதல் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

திருக்கோவிலூர் அருகே முட்டைகோஸ் மூட்டைகளுக்கிடையே கடத்தப்பட்ட 3,840 மது பாட்டில்கள் பறிமுதல் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

திருக்கோவிலூர் : முட்டைகோஸ் மூட்டைகளுக்கிடையே மதுபாட்டில்களை பதுக்கி கடத்திய இருவர் கைது

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவிவருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. கொரோனா பொது முடக்கம் இருக்கும் சூழலில், ஊரடங்கை மதிக்காமல் இருசக்கர வாகனங்களில் வலம் வருவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். சாலையில் ஆங்காங்கே தடுப்புகளை ஏற்படுத்தி, தவிர்க்க முடியாத காரணங்களுக்காக செல்வோரை மட்டும் அனுமதித்த போலீஸார், மற்றவர்களை திருப்பி அனுப்பினர். வெளியே சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையால், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 காவல் நிலையங்களிலும் சுமார் 200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவிலூர் : முட்டைகோஸ் மூட்டைகளுக்கிடையே மதுபாட்டில்களை பதுக்கி கடத்திய இருவர் கைது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் டாஸ்மார்க் மற்றும் சாராய கடைகள் கொரோனா தொற்று அதிகரிப்பின் காரணமாக மூடப்பட்டது, இந்த நிலையில் கள்ளச்சந்தையில் அதிக அளவில் சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதால் அதிக அளவில் மதுவின் தேவை இருப்பதாகவும், அதை வைத்து தமிழகம்-புதுச்சேரியில் கள்ளச்சந்தை மது விற்பனை செய்ய பெரிய அளவில் ஒரு தரப்பினர் திட்டம் தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தபோவனம் சோதனைச்சாவடியில் அரகண்டநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காய்கனி ஏற்றி வந்த லாரியை சந்தேகத்தின் அடிப்படியில் போலீசார்  மடக்கி பிடித்து சோதனை செய்தனர் சோதனையில் மூட்டைகோஸ் மூட்டைகளுக்கிடையே 80பெட்டிகளில் 3840 குவார்ட்டர் மதுபாட்டில்களை கடத்திச்சென்றது தெரியவந்தது.

திருக்கோவிலூர் : முட்டைகோஸ் மூட்டைகளுக்கிடையே மதுபாட்டில்களை பதுக்கி கடத்திய இருவர் கைது

மேலும் லாரியுடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் லாரியின் உரிமையாளர் சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமானது என்றும் லாரியின் டிரைவர் உளுந்தூர்ப்பேட்டை அருகே கிளியூர் கிராமத்தை சேர்ந்த அய்யனார் மற்றும் கண்டாச்சிபுரம் அடுத்த தணிக்கலாம்பட்டு ரவி என்பதும் தெரியவந்தது. 

திருக்கோவிலூர் : முட்டைகோஸ் மூட்டைகளுக்கிடையே மதுபாட்டில்களை பதுக்கி கடத்திய இருவர் கைது

இவர்கள் பெங்களுரில் இருந்து மதுபாட்டில்களை குறைந்தவிலையில் வாங்கி அதனைக் கடத்திவந்து ஊரடங்கை பயன்படுத்தி கிராமப்புற பகுதிகளில் பலமடங்கு விலையில் விற்பதற்காக கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ரவி, அய்யனார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கொரோனா தொற்று அதிகமானதால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டது. இதனால் குடி பிரியர்கள் ஒரு மது பாட்டிலின் ரூபாய் 500, 800 என அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக இதுபோன்று தடை செய்யப்பட்ட மது பாட்டில்கள் கடத்தி வருகின்றனர். இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Embed widget