மேலும் அறிய

சீரழியுது திருச்சி... வாலிபர்களிடம் இருந்த பொருளால் போலீஸ் அதிர்ச்சி

சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்பொழுது அவர்களிடம் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் இருந்தது தெரிய வந்தது.

தஞ்சாவூர்: திருச்சியில் இரண்டு வாலிபர்களிடம் போதை ஊசி சிக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களிடம் இருந்து போதை மருந்துகள் மற்றும் போதை ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம் போதைப் பொருட்கள் மற்றும் குட்கா பொருட்களை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில திருச்சியில் கடந்த சில நாட்களாக கஞ்சா, போதை மருந்துகள் போலீசாரின் அதிரடி சோதனையில் சிக்கி வருகிறது.

இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் மேலபுலிவார்டு ரோடு நடுகுஜிலி தெரு பகுதியில் கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு சந்தேகப்படும் படி 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த 2 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்பொழுது அவர்களிடம் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் திருச்சி தென்னூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த பிரவீன் கார்த்தி (24) சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (24) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்கள் இரண்டு பேரும் போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. இந்த இரண்டு ரவுடிகளும், போதை மாத்திரையை எங்கிருந்து யாரிடம் வாங்கினார்கள் என்பது குறித்தும், போதை மாத்திரைகளை யாரிடம் கொடுக்க இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி வாலிபர்கள் மத்தியில் தற்போது போதைக்கலாச்சாரம் விஷச்செடி போல் வேரூன்றி வருகிறது. இதை கண்டுபிடித்து போதை மருந்துகள், போதை ஊசிகளை தயாரிப்பவர்கள் முதல் அனைவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் திருச்சியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இதேபோல் கடந்த 2 வாரத்திற்கு முன்பு தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து இலங்கைக்கு அனுப்ப இருந்த 330 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். மேலும் திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கை மக்கள் மத்தியில் பாராட்டை பெறும் அதே வேளையில் போதைப்பொருட்களை முழுமையாக அழிக்கும் வகையில் மாநில எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும். வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி பின்னரே அனுப்ப வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் இந்த போதைமருந்து கலாச்சாரத்திற்கு அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget