மேலும் அறிய

தனியாக வசிக்கும் மூதாட்டி தான் டார்கெட்... பிளான் போட்டு திருடும் கில்லாடி லேடிக்கு போலீஸ் வலைவீச்சு..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் பெண், தற்போது கலசபாக்கம் பகுதியில் மூதாடியிடம் 35 பவுன் நகை கொள்ளையடித்து தப்பித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே காஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வசித்து வருபவர் புஷ்பராணி வயது (75). இவருடைய கணவர் கண்ணன், இவர் ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். இதில் கண்ணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் புஷ்பராணி காஞ்சியில் தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று பகல் 12 மணி அளவில் ஒரு பெண் ஒருவர் காரில் புஷ்பராணியின் வீட்டுக்கு வந்துள்ளார். அந்த பெண் புஷ்பராணியிடம் உங்களின் கணவர் இறந்ததை ஏன் எனக்கு தெரியப்படுத்தவில்லை என்றும், நான் அவருடன் பணிபுரிந்த ஆசிரியை என்று கூறி அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். மேலும் அவரது மனதை கவரும் வகையில் பேசி விட்டு வீட்டிற்கு கிளம்புவதாக அந்த மர்ம பெண் கூறியுள்ளார். 

 


தனியாக வசிக்கும்  மூதாட்டி தான் டார்கெட்... பிளான் போட்டு திருடும்  கில்லாடி லேடிக்கு போலீஸ் வலைவீச்சு..!

 

அப்போது புஷ்பராணி அந்த பெண்ணுக்கு பீரோவில் இருந்த ஜாக்கெட் மற்றும் குங்குமம், மஞ்சளை எடுத்து கொடுத்துள்ளார். இதனை பெற்றுக் கொண்ட அவர் வெளியில் வந்தார். அவரை வழி அனுப்புவதற்காக புஷ்பராணியும் வெளியில் வந்தார். அதன்பிறகு அந்த பெண் எனக்கு சற்று வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சற்று கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு உள்ளே சென்றுள்ளார். ஆனால் அந்தப் பெண் கழிவறைக்கு செல்லாமல் பீரோ உள்ள அறைக்கு சென்று பீரோவை திறந்து, அதிலிருந்த 35 பவுன் தங்க நகைகளை திருடிக் கொண்டு வெளியே வந்துள்ளார். அதன் பிறகு அந்த மர்ம பெண் காரில் ஏறி தப்பி சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து புஷ்பராணி திறந்த பீரோவை மூடுவதற்காக சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் கலைந்து கிடந்ததையும், பீரோவில் இருந்த 35 பவுன் நகைகள் காணாமல் போனதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக புஷ்பராணி சென்னையில் உள்ள மகன்களுக்கு தொலைபேசியில் அழைத்து நகைகள் திருடுபோனதை கூறியுள்ளார். மேலும் அவர் உடனடியாக கடலாடி காவல்நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவல் அறிந்த கடலாடி காவல்துறையினர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

 


தனியாக வசிக்கும்  மூதாட்டி தான் டார்கெட்... பிளான் போட்டு திருடும்  கில்லாடி லேடிக்கு போலீஸ் வலைவீச்சு..!

 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மர்ம பெண்ணையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் பகுதியில் கணவனை இழந்து தனிமையில் ஒரு மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அந்த மூதாட்டியிடம் 5 நாட்களுக்கு முன்பு ஒரு மர்ம பெண் காரில் வந்து இறங்கி மூதாட்டியிடம் சென்று குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். மூதாட்டி வீட்டின் உள்ளே சென்று தண்ணீர் எடுத்துகொண்டு வருவதற்குள், அந்த மர்ம பெண் வீட்டின் உள்ளே சென்று மூதாட்டி போட்டு இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு காரில் ஏறி தப்பித்து சென்றுள்ளனர். இந்த மர்ம பெண் தனியாக வசிக்கும் மூதாட்டிகளை கண்டு அவர்களை நோட்டமிட்டு அவர்களிடம் இருந்து நகைகளை கொள்ளையடித்து செல்கிறாரா என்று சந்தேகமடைந்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget