மேலும் அறிய

Crime: போலீசுக்கு தெரியாமல் வீட்டில் ஆன்லைன் சூதாட்டம்; பல கோடி மோசடி - 2 பேர் கைது

வந்தவாசி, செங்கல்பட்டில் இருந்தபடி ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை (Tiruvannamalai news) வந்தவாசி, செங்கல்பட்டில் இருந்தபடி ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். 

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் குட்டிநாயுடு தெருவைச் சேர்ந்தவர் அருண் என்கிற அருணாச்சலம் வயது (50). இவரது வீட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் அருணாச்சலத்தின் பங்களாவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் கணினி மூலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.அப்போது அவருடன் ஆன்லைனில் தொடர்பில் இருந்தவர் குறித்து விசாரித்தனர். அதில் அவர், செங்கல்பட்டு மாவட்டம் கோகுலபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சையத் இப்ராஹிம் வயது (44) என்பதும் அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சையத் இப்ராஹிம், அருணாச்சலம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.


Crime: போலீசுக்கு தெரியாமல் வீட்டில் ஆன்லைன் சூதாட்டம்; பல கோடி மோசடி  -  2 பேர் கைது

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரிடம் தீவிர விசாரணை

இந்த விசாரணையில், சையத் இப்ராஹிம் கடந்த 6 ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் என்பதால், அருணாச்சலம், அவரை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடத்தியுள்ளார். சையத்இப்ராஹிம் செங்கல்பட்டில் இருந்தபடியும், அருணாச்சலம் வந்தவாசியில் இருந்தவாறும், ஆன்லைன் மூலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்தி கோடிக்கணக்கான பணத்தை சுரண்டியுள்ளனர் என தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் சிறையில் அடைத்தனர் 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லேப்டாப், 6 செல்போன்கள் ரூ.48.50 லட்சம் பணம், 82 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் காவல்துறையினர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து கைப்பற்றிய 6 செல்போன் தொடர்புகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வந்தவாசியை சேர்ந்த முக்கியமான நபர்களின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களும் அதில் சிக்குவார்கள் எனத்தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு முக்கியமான நபரை காவல்துறையினர் இன்று காலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget