மேலும் அறிய

Crime: ஆரணியில் பொதுமக்களிடம் சீட்டு பணத்தை ஏமாற்றி வந்த தறி தொழிலாளி கைது

ஆரணி பகுதியில் பொதுமக்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் சீட்டு பணத்தை ஏமாற்றி வந்த தறி தொழிலாளியை குற்றப்பிரிவு பொருளாதார போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை ( Tiruvannamalai News) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி லட்சுமி நகரை சேர்ந்தவர் பரசுராமன் வயது (41). இவர் ஆரணியில் பல ஆண்டுகளாக கூலிக்கு தறி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி கொச பாளையத்தை சேர்ந்த சங்கர் என்பவர் நெசவுத்தொழில் மூலமாக அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்தும் வந்துள்ளனர். இதனால் இருவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கர், நானும் எனது மனைவி வெண்ணிலா இருவரும் சேர்ந்து எங்கள் வீட்டில் பட்டு சேலை வியாபாரம் மற்றும் மாத சீட்டு ஆகியவற்றையும் நடத்தி வருகிறோம். இதில் எங்களுக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது என பரசுராமிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி பரசுராமன் சங்கரிடம் சீட்டு கட்டியுள்ளார். மேலும் பரசுராமன் இன்னும் நாங்கள் 5 சீட்டுகள் நடத்தவுள்ளோம் அதில் நம்பிக்கையான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் உங்களுக்கு தெரிந்தவர்களை சேர்த்து விடுங்கள் என பரசுராமன் கூறியுள்ளார். இதனை நம்பி சங்கர் அவருக்கு தெரிந்தவர்கள் சிலர் என மொத்தம் பத்து பேரை சேர்த்துள்ளார்.

 


Crime: ஆரணியில் பொதுமக்களிடம் சீட்டு பணத்தை ஏமாற்றி வந்த தறி தொழிலாளி கைது

சீட்டு பணம் ஏமாற்றியவர் மீது  திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் 

அவர்களும் மாத மாதம் பணத்தை செலுத்தியுள்ளனர். மாதச் சீட்டு முடிவு அடைந்த பின்னர் சீட்டு தொகை செலுத்தியவர்களுக்கு தங்கள் பணத்தை திரும்பி கேட்டபோது சங்கர் பணத்தை திரும்பி தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். அதேபோல் பரசுராமன் மாதம் சீட்டு என ரூபாய் 3, லட்ச 51,ஆயிரத்து 760ஐ தருமாறு சங்கரிடம் சென்று கேட்டுள்ளார். ஆனால் சங்கர் இன்று, நாளை என பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பரசுராமன் சங்கரிடம் சென்று காசோலை மற்றும் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். அதன் பிறகும் சங்கர் பணத்தை தராமல் ஏமாற்ற முயல்வதை அறிந்தவுடன் பரசுராமன் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் பரசுராமன் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார்.


Crime: ஆரணியில் பொதுமக்களிடம் சீட்டு பணத்தை ஏமாற்றி வந்த தறி தொழிலாளி கைது

சீட்டு பணம் ஏமாற்றியவர் கைது 

அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆரணியை சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு நபர்களிடம் சுமார் 27 லட்சத்தி 71 ஆயிரத்து 760 ரூபாய் மாத சீட்டு நடத்தி வசூல் செய்து திரும்பி தராமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் சங்கர் மற்றும் வெண்ணிலா ஆகியோரிடம் சீட்டு பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த நபர்கள் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அலுவலகத்தை அணுகுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
CM Stalin:
"ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை நிறுத்துக” - மத்திய அரசை வலியுறுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
RahulGandhi On EVM : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க சொன்ன மஸ்க்.. ஆதரவுக்கரம் நீட்டிய ராகுல் காந்தி
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
New Fee Refund Policy: கல்லூரிகள் இந்த மாணவர்களுக்கெல்லாம் முழு கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்: யுஜிசி அதிரடி!
Fathers Day History: இன்று தந்தையர் தினமா? முதன்முறையாக எப்போது கொண்டாடப்பட்டது..? வரலாறு தெரியுமா?
இன்று தந்தையர் தினமா? முதன்முறையாக எப்போது கொண்டாடப்பட்டது..? வரலாறு தெரியுமா?
Salem Leopard: திருப்பத்தூரில் பிடிபட்டது சேலத்தில் நடமாடிய சிறுத்தையா? அதிர்ச்சி தகவல்.
திருப்பத்தூரில் பிடிபட்டது சேலத்தில் நடமாடிய சிறுத்தையா? அதிர்ச்சி தகவல்.
Embed widget