தந்தை கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு பழி தீர்த்த 17 வயது சிறுவன்! பரபரப்பை ஏற்படுத்திய கொடூர கொலை
தந்தையின் கொலைக்கு பழிவாங்கும் நிலையில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு மகன் கொலை செய்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர்: ஜாமினில் வெளியே வந்தவருக்கு நடத்த விபரீதம்!தந்தை கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு பழி தீர்த்த 17 வயது சிறுவன்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் ஆனந்தராஜ். இவரை கடந்த ஆண்டு அவருடைய நண்பரான சிலம்பரசன் (37) என்பவர் முன்விரதம் காரணமாக பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அதன் காரணமாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து. இந்த நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் தினம் தோறும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று திருப்பத்தூருக்கு வந்திருந்த சிலம்பரசனை ஆனந்தராஜின் மகன் 17 வயதான சிறுவன் அஜய் பார்த்துள்ளார். அப்போது சிலம்பரசன் எங்கெல்லாம் செல்கிறார் என பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் ஏரிக்கோடி பகுதியில் உள்ள மதுபான கடையில் மதுபானத்தை வாங்கிக்கொண்டு இரவு நேரத்தில் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள இருட்டான இடத்தில் அமர்ந்து சிலம்பரசன் மது குடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அஜய் திடீரென பின்புறமாக வந்து சிலம்பரசனின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டு அங்கேயே கொலை செய்தார். பின்னர் அஜய் அங்கிருந்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். பின்னர் இந்த சம்பவம் அறிந்த நகர போலீசார் சிலம்பரசன் உடலை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தந்தையின் கொலைக்கு பழிவாங்கும் நிலையில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு மகன் கொலை செய்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.























