மேலும் அறிய

நெல்லையில் மூட்டை மூட்டையாக வயல்வெளியில் பதுக்கி வைத்திருந்த 23 டன் ரேசன் அரிசி பறிமுதல்

சுமார் 566 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் சுமார் 23 டன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

நெல்லை மாநகர பகுதியான அருகன்குளம் பகுதியில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.  அதன்படி நெல்லை சரக குடிமைப்பொருள் வளங்கள் குற்றப் புலனாய்வுத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் போலீசார் அருகன் குளம் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக அங்குள்ள வயல்வெளியில் ரேசன் அரிசி பதுக்குவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கும் தீவிர சோதனை செய்தனர். அப்போது அங்குள்ள ஒரு வயல்வெளி பகுதியில் பிளாஸ்டிக் சாக்கு பைகளில் மூட்டை மூட்டையாக அரிசி இருந்தது தெரிய வந்தது.

அதனை சோதனை செய்த போது அனைத்து மூட்டைகளிலும் பொதுமக்களுக்கு விநியோகிக்கக்கூடிய ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது. சுமார் 566 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் சுமார் 23 டன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  தொடர்ந்து இது குறித்து குடிமைப் பொருட்கள் வளங்கள் குற்றப்புலனாய்வுத்துறை காவல் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அருகன் குளத்தை சார்ந்த சின்னதுரை மற்றும் அவரது தம்பி கணேசன் ஆகியோர் சேர்ந்து அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.  மேலும் பதுக்கி வைத்திருக்கும் ரேசன் அரிசியை கேரளாவில் உள்ள நிஜாம் என்பவருக்கு விற்பதற்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.

மேலும் இதில் தொடர்புடைய கலைஞர் என்ற கருணாநிதி, மகாராஜன், சாலை மாரியப்பன், சப்பானி முத்து, கணேசன், மூக்கன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 566 பிளாஸ்டிக் சாக்கு பைகளில் இருந்த 2050 கிலோ மொத்தமாக 23 டன்  ரேஷன் அரிசியை புட்செல் போலீசார் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட கலைஞர் என்ற கருணாநிதி, மகாராஜன், சாலை மாரியப்பன், கணேசன், சப்பாணி முத்து, மூக்கன் ஆகியோரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அருகிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கள் சம்பந்தமாக தீவிரமாக ரோந்து  பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை அருகே வயல் வெளிகளில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget