மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

திருவாரூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 31 சவரன் தங்க நகைகள் கொள்ளை காவல்துறையினர் தீவிர விசாரணை.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே வடக்கு மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவருடைய மனைவி அமுதா வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். அதில் முதல் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்று கணவர் வீட்டில் வசித்து வருகிறார். இரண்டாவது பெண் கும்பகோணத்தில் உள்ள விடுதியில் தங்கி பயின்று வருகிறார். வீட்டில் துணைக்கு யாரும் இல்லாததால் அமுதா தனது எதிர் வீட்டில் உள்ளவர்களுடன் இரவில் மட்டும் அங்கு சென்று தங்கி வருவது வழக்கம்.
 
இந்த நிலையில் எப்பொழுதும் போல் நேற்று இரவு எதிர் வீட்டில் அமுதா தங்கி விட்டு இன்று காலை வீட்டை வந்து பார்க்கும்பொழுது வீட்டின் முன்பக்க கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு வீட்டில் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகைகள் ஐம்பதாயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது தெரியவந்துள்ளது. அதனையடுத்து கொரடாச்சேரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கைரேகை நிபுணர்களுடன் சோதனை நடத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை
 
இந்த நிலையில் வடபாதிமங்கலம் அருகே நெடுங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் லெட்சுமாங்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி மற்றும் கனிஷ்கா என்கிற ஒன்பது வயதில் ஒரு மகள் ஆகியோருடன் தனது வீட்டில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருத்துறைப்பூண்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன்பக்க கதவு கடப்பாரையால் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. அதனையடுத்து வடபாதிமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் வீட்டின் பூட்டை கடப்பாரையால் உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த இரண்டு சம்பவங்களையும் ஒரே கும்பல் நடத்தி இருக்கலாமா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LSG vs DC LIVE Score: டெல்லிக்கு அதிர்ச்சி; மெக்கர்க் அவுட்; நம்பிக்கை கொடுக்கும் லக்னோ பவுலிங்!
LSG vs DC LIVE Score: டெல்லிக்கு அதிர்ச்சி; மெக்கர்க் அவுட்; நம்பிக்கை கொடுக்கும் லக்னோ பவுலிங்!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul Gandhi on Modi | ‘’அதானிக்கு 7 ஏர்போர்ட்..டெம்போல பணம் வந்துச்சா மோடி?” ராகுல் THUGLIFE!Banana Farming | தருமபுரியில் கொளுத்தும் வெயில்! காய்ந்து விழுந்த வாழை மரங்கள்! விவசாயிகள் வருத்தம்Felix Gerald House Raid | FELIX வீட்டில் அதிரடி சோதனைடென்ஷன் ஆன மனைவிபோலீசாருடன் கடும் வாக்குவாதம்Sanjiv goenka scolding KL Rahul | CSK-வில் ராகுலா? பதறிய பயிற்சியாளர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LSG vs DC LIVE Score: டெல்லிக்கு அதிர்ச்சி; மெக்கர்க் அவுட்; நம்பிக்கை கொடுக்கும் லக்னோ பவுலிங்!
LSG vs DC LIVE Score: டெல்லிக்கு அதிர்ச்சி; மெக்கர்க் அவுட்; நம்பிக்கை கொடுக்கும் லக்னோ பவுலிங்!
Savukku Sankar: சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு ; ஜாமீன் மனு ஒத்திவைப்பு
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Radhika Sarathkumar : இதனாலதான் அரசியலில் பெண்கள் முன்னேறல.. நச் பதிலளித்த ராதிகா
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
Kovai Sarala : சுதந்திரமா இருக்க முடியாதுன்னு, கல்யாணம் பண்ணிக்கல.. கோவை சரளா பளிச்
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. மூச்சுத்திணறலால் ஒருவர் உயிரிழப்பு!
டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் தீ விபத்து.. தலைநகரில் பரபரப்பு!
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
நெஞ்சம் நிறைந்து தருகிறோம்... விலை குறைத்து கேட்காதீர்கள்: கீரை விவசாயியின் உருக்கமான வேண்டுகோள்
Fact Check : அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
அகிலேஷ் யாதவ் மீது செருப்பு வீசப்பட்டதா? தீயாய் பரவும் வீடியோ உண்மையா?
TN Weather Update: கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
கன்னியாகுமரிக்கு ஆரஞ்சு அலர்ட்.. அடுத்த 5 நாட்களுக்கு எங்கெல்லாம் கனமழை ?
Embed widget