மேலும் அறிய

Crime: போலி நகைகளை விற்று அடுத்தடுத்து மோசடி: ஸ்கெட்ச் போட்டு ரவுண்டு கட்டிய போலீஸ்

திருவண்ணாமலையில் ஃபேன்ஸி கடை உரிமையாளரிடம் போலி தங்க நகைகளை விற்பனை செய்து 2 லட்சம் ரூபாய் சுருட்டிய கர்நாடக மாநில இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

 திருவண்ணாமலையில் காலி இடங்களில் கூடாரம் அமைந்து பிளாஸ்டிக் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களில் ஒவ்வொரு பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இந்த பிளாஸ்டிக் பூக்களை மொத்தமாகவும் விற்பனை செய்து வருகின்றனர். அந்த நபர்களை சேர்ந்த மைசூர் மாண்டியா பகுதியை சேர்ந்த ஆர்.ஜே.ராகுல் வயது (24), பிரபு வயது (34), சோயங்கி பவன் வயது (22), அவரது தம்பி சோயங்கி ராகுல் வயது (20), ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்டராம்பட்டு பகுதியில் உள்ள பேன்சி ஸ்டோர் வைத்துள்ள பூங்காவனம் என்பவரின் கடைக்கு சென்று உள்ளனர். அப்போது அந்த கும்பல் தங்களுக்கு கூடாரம் அமைக்கும் போது தங்க புதையலாக குண்டு மணி மாலைகள் கிடைத்ததுள்ளது என்று கூறியுள்ளனர். நாங்கள் தற்போது சொந்த ஊருக்கு செல்ல உள்ளதால் தங்க குண்டு மணிமாலையை நல்ல விலைக்கு விற்றுவிட்டு சென்று விடலாம் என்று பூங்காவனத்திடம் அந்த கும்பல் தொிவித்துள்ளனர். 

 


Crime: போலி நகைகளை விற்று அடுத்தடுத்து மோசடி: ஸ்கெட்ச் போட்டு ரவுண்டு கட்டிய போலீஸ்

 

மேலும் அவர்கள் வைத்து இருந்த ஒரு மாலையில் இருந்து 2 குண்டு மணிகளை பூங்காவனம் கண் எதிரிலேயே பிய்த்து பூங்காவனத்திடம் வழங்கி உள்ளனர். அந்த 2 குண்டு மணிகளை அவர் சோதித்து பார்த்ததில் அது தங்கமாக இருந்து உள்ளது. உடனடியாக பூங்காவனம் அந்த கும்பலிடம் குண்டு மணி மாலைகளுக்கு விலை பேசியுள்ளார். பேரம் பேசப்பட்டு கடைசியாக 2 லட்சம் ரூபாய்க்கு முடிந்தது.அதனைத்தொடர்ந்து கர்நாடக மாநில கும்பல் 2 லட்சத்துடன் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வந்து பணத்தை கொடுத்துவிட்டு குண்டு மணி மாலைகளை வாங்கி செல்லுங்கள் என்று தெரிவித்து உள்ளனர். இதனை நம்பி பூங்காவனம் கடந்த 28-ந்தேதி 2 லட்சத்தை எடுத்து கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த அவர்கள் 4 நபர்களும் பணத்தை பெற்று கொண்டு மாலைகளை கொடுத்து சம்பவ இடத்தில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். மாலை பெற்றுக்கொண்ட பூங்காவனம் மாலையை சோதனை செய்து பார்த்ததில் அந்த மாலைகள் கவரிங் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருவண்ணாமலை குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் அவர்களின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தினர்.

 


Crime: போலி நகைகளை விற்று அடுத்தடுத்து மோசடி: ஸ்கெட்ச் போட்டு ரவுண்டு கட்டிய போலீஸ்

இந்த விசாரணையில் அவர்கள் மற்றொரு நபரை ஏமாற்ற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அந்த நபருக்கு தொடர்பு கொண்டு அவர்கள் கவரிங் நகைகளை கொடுத்து ஏமாற்றும் கர்நாடக மாநில கும்பல் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த கும்பலை பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். காவல்துறையினர் ஆலோசனையின் படி அந்த நபர் அவர்கள் 4 பேரையும் நேற்று மாலை திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வரவழைத்தார். அவர்கள் 4 பேரும் கவரிங் குண்டு மணி மாலைகளை எடுத்து கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அங்கு பதுங்கி இருந்த காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட ஆர்.ஜே.ராகுல், சோயங்கி பவன், சோயங்கி ராகுல், பிரபு ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள கவரிங் குண்டு மணி மாலைகள் மற்றும் 52 ஆயிரம் ரொக்கம் ஆகியவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ENG Semi Final LIVE Score: விராட் கோலி அவுட்.. ஆரம்பமே அதிர்ச்சி!
IND vs ENG Semi Final LIVE Score: விராட் கோலி அவுட்.. ஆரம்பமே அதிர்ச்சி!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ENG Semi Final LIVE Score: விராட் கோலி அவுட்.. ஆரம்பமே அதிர்ச்சி!
IND vs ENG Semi Final LIVE Score: விராட் கோலி அவுட்.. ஆரம்பமே அதிர்ச்சி!
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா, இல்லையா? பிரபாஸ், கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. ஜூலை 3 முதல் அமல்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!
"தமிழ் கலாசாரத்தை வெறுக்கும் INDIA கூட்டணி" செங்கோல் விவகாரத்தில் யோகி ஆதித்யநாத் பரபர குற்றச்சாட்டு!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
OTT - Uppu Puli Karam: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரவேற்பைப் பெறும் உப்பு புளி காரம் தொடர்!
Embed widget