மேலும் அறிய

Tiruvannamalai: அரசு அலுவலக சுவரில் ஒட்டியிருந்த போஸ்டர் கிழிப்பு - அதிகாரியை மிரட்டிய அதிமுக பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு

அரசு அலுவலங்களில் போஸ்டரை ஒட்டக்கூடாது என்று அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது.

திருவண்ணாமலை (Tiruvannamalai News) திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே பெரணமல்லூர் ஊராட்சியில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்கி வருகின்றது.‌ இந்த பெரணமல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலராக வெங்கடேசன் என்பவர் பணியாற்றி வருகின்றனர். ஒன்றிய குழு தலைவராக திமுகவை சேர்ந்த இந்திரா இளங்கோ என்பவர் உள்ளிட்ட 16 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். அதில் அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே‌.எஸ்.அன்பழகன் சகோதரர் அறிவழகன் (எ) ஜவகர் என்பவர் அதிமுகவில் நகர துணை செயலாளராக பதவி வகித்து வருகின்றார். இந்த நிலையில், செய்யாற்றில் அதிமுக அண்ணா தொழிற் சங்க மாநில செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் செயல்வீரர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 


Tiruvannamalai: அரசு அலுவலக சுவரில் ஒட்டியிருந்த  போஸ்டர் கிழிப்பு  - அதிகாரியை மிரட்டிய அதிமுக பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு

 

இது சம்மந்தமாக சில தினங்களுக்கு முன்பு பெரணமல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ ஏ‌.கே.எஸ்.அன்பழகன், அதிமுக  வரவேற்பு குறித்து போஸ்டர் ஓட்டியுள்ளார். அப்போது பெரணமல்லூர் அரசு ஓன்றிய அலுவலகம் வளாகத்தில் போஸ்டரை அதிமுகவினர் ஒட்டியுள்ளனர். அரசு அலுவலங்களில் போஸ்டரை ஒட்டக்கூடாது என்று அரசு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து மறுநாள் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டரை அரசு ஊழியர்கள் கிழித்துள்ளனர். இதனை அறிந்த அதிமுக நகர துணை செயலாளர் ஜவகர்  ஆத்திரமடைந்து மீண்டும் மறுநாள் ஜூன் 08-ஆம் தேதி அன்று மீண்டும் அதே போஸ்டரை அதே இடத்தில் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் குறித்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் 

 


Tiruvannamalai: அரசு அலுவலக சுவரில் ஒட்டியிருந்த  போஸ்டர் கிழிப்பு  - அதிகாரியை மிரட்டிய அதிமுக பிரமுகருக்கு போலீஸ் வலைவீச்சு

அதிமுகவை சேர்ந்த ஜவகரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அரசு அலுவலங்களில் ஏன் போஸ்டர் மீண்டும் மீண்டும் ஒட்டி வருகின்றீர்கள் என போனில் கேட்டதற்கு, அப்போது ஜவகர், மிரட்டும் தொனியில்  எவனா இருந்தாலும் வெட்டுவேன் என அதிகாரியை மிரட்டியுள்ளார். இவர்கள் இருவரும் பேசும் ஆடியோ சமூக வளைதலங்களில் வைரலாகி வருகின்றது. அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் கோவிந்தராஜ் ஆகியோர் தனித்தனியாக பெரணமல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 2 புகாரை பெற்ற பெரணமல்லூர் காவல்துறையினர் 5 பிரிவின் அதிமுக பிரமுகர் ஜவகர் மீது கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த அதிமுக பிரமுகர் ஜவகர் தலைமறைவாகியுள்ளார். தற்போது அவரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget