மேலும் அறிய

'மகளின் வாழ்க்கையை சீரழித்ததால் கொன்றோம்’; ஜாமீனில் வந்தவர் கொலையில் பெற்றோர் அதிர்ச்சி வாக்குமூலம்..!

செய்யார் பகுதியில் போக்சோவில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த ஓட்டுநர் வெட்டி கொலை. மகளின் வாழ்க்கை சீரழித்ததால் வெட்டி கொலை செய்தோம் என மாணவியின் குடும்பத்தினர் விசாரணையில் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாண்டியன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுநர் முருகன் வயது (27).  இவர் செய்யார் பகுதியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவியை, பள்ளியை விட்டு வீட்டிற்கு வந்துகொண்டு இருந்த போது மாணவியிடம் முருகன் ஆசைவார்த்தைகள் கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே மாணவியின் பெற்றோர்கள் இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஓட்டுநர் முருகனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து (22.06.2022) அன்று முன் ஜாமின் மூலமாக முருகன் வெளியே வந்தார்.

 


மகளின் வாழ்க்கையை சீரழித்ததால் கொன்றோம்’; ஜாமீனில் வந்தவர்  கொலையில் பெற்றோர் அதிர்ச்சி வாக்குமூலம்..!

மறுநாள் மாணவியின் குடும்பத்தினர் முருகன் வீட்டிற்கு சென்று  ‘உன்னை நாங்கள் கொல்லாமல் விட மாட்டோம்’ என மிரட்டல் விட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் இருந்து முருகன் எங்கு சென்று வருகிறார் ‌என்று மாணவியின் குடும்பத்தினர் கண்காணித்து வந்துள்ளனர்.  இந்நிலையில் சம்பவதன்று காலையில் முருகன் வீட்டின் பின்புறம் உள்ள நீலகிரி தோப்பிற்கு காலைக்கடனை முடிப்பதற்கு சென்றார். அப்போது பாதிப்புக்கு உள்ளான மாணவியின் தந்தை தணிகைமலை , அவருடைய மகன் சுரேஷ் மற்றும் வேல்முருகன் உள்ளிட்டோர் முருகனை பின்தொடர்ந்தது சென்று அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

 


மகளின் வாழ்க்கையை சீரழித்ததால் கொன்றோம்’; ஜாமீனில் வந்தவர்  கொலையில் பெற்றோர் அதிர்ச்சி வாக்குமூலம்..!

அதனைத்தொடர்ந்து வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முருகனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த முருகனின் மனைவி தூசி காவல் நிலையத்தில் தன்னுடைய கணவனை திட்டமிட்டு தணிக்கைமலையும் அவருடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களும் சேர்ந்து கொலை செய்ததாக கூறி புகார் அளித்துள்ளார். மேலும், சிறுமியின் உறவினர்கள் தணிகை மலை (45), வேல்முருகன் (26), தேவிகா (40), சுரேஷ் (21), விக்னேஷ் (19) ஆகிய 5 நபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

 


மகளின் வாழ்க்கையை சீரழித்ததால் கொன்றோம்’; ஜாமீனில் வந்தவர்  கொலையில் பெற்றோர் அதிர்ச்சி வாக்குமூலம்..!

இந்த விசாரணையில்,  ‘முருகனுக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ள நிலையில், அவர் தங்கள் வீட்டு 13 வயதுடைய சிறுமியை காதலிப்பதாக கூறி, அவரின் மனதை கலைத்து, நாங்கள் வீட்டில் இல்லாத நேரத்தை முருகன் பயன்படுத்தி சிறுமி என்று பாராமல் பாலியல் வன்கொடுமை செய்து அவளுடைய வாழ்க்கை சீரழித்து விட்டார். இதனால் நாங்கள் கடந்த 6 மாதங்களாக மனவேதனையில் இருந்தோம். ஆனால் ஜாமினில் வெளியே வந்த முருகன் சுதந்திரமாக வெளியில் சுற்றியதால் எங்களுக்கு உண்டான கோபத்தால், நாங்கள் முருகனை நோட்டமிட்டு வெட்டி கொலை செய்தோம்’ என காவல்துறையினரிடம் அவர்கள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget