மேலும் அறிய

திருவண்ணாமலை: கடன் பிரச்னையால் மனைவியை கொன்று கணவன் தற்கொலை - அனாதையான 3 குழந்தைகள்

ஆரணி அருகே குடும்ப தகராறில் மனைவியை சுத்தியலால் தாக்கி கொலை செய்த விவசாயி, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால் 3 குழந்தைகள் ஆதரவு இன்றி அனாதையாக உள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - வந்தவாசி நெடுஞ்சாலையில் ஆகாரம் ஊராட்சிக்குட்பட்ட வாரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (47), இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (41). இவர்களுக்கு திருமணமாகி யோகேஸ்வரி (16), ஹேமமாலினி (9) ஆகிய 2 மகள்களும், கவுரிசங்கர் (6) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் மூவரும் அங்கு உள்ள அரசினர் பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மூர்த்தியின் மாமனாரான ஆரணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கலைச்செல்வி, தனது கணவரிடம் கூறி, தன்னுடைய வீட்டு பத்திரத்தை தந்தை ஏழுமலையிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர் பத்திரத்தை அடமானம் வைத்து கடனாக பணத்தை பெற்றுள்ளார். அதன் பிறகு நீண்ட நாட்களாகியும் கலைச்செல்வியின் தந்தை ஏழுமலை அடமானம் வைத்த பத்திரத்தை மீட்டு கொடுக்கவில்லை.

திருவண்ணாமலை: கடன் பிரச்னையால் மனைவியை கொன்று கணவன் தற்கொலை - அனாதையான 3 குழந்தைகள்

இதனால் கணவன், மனைவி இருவருக்கும்  இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி தனது குழந்தைகளின் முன்னிலையிலேயே, மனைவி கலைச்செல்வியை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார் இதனால் தலையில் இரத்தம் தெரித்துள்ளது சம்பவ இடத்திலேயே மயக்கம் கீழே விழுந்துள்ளார். சென்று அருகில் பார்த்த மூர்த்தி மூச்சு இல்லாமல் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பிறகு கலைச்செல்வியை நாம் தான் கொலை செய்துள்ளோம் என எண்ணி மனவேதனை அடைந்துள்ளார். கலைச்செல்வி இறந்ததும், மூர்த்தி வீட்டின் அருகில் தனது நிலத்திற்கு வேகமாக  சென்று  அங்குள்ள  மரத்தில் மன வேதனையுடன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

திருவண்ணாமலை: கடன் பிரச்னையால் மனைவியை கொன்று கணவன் தற்கொலை - அனாதையான 3 குழந்தைகள்

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், தாலுகா காவல் நிலைய  ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மனைவியை கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்டதால் 3 குழந்தைகள் அனாதையாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் Sneha Suicide Prevention helpline – 044-2464000 State suicide prevention helpline – 104 ,iCall Pychosocial helpline – 022-25521111 

தலைப்பு செய்திகள்

தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஒரு வாரம் சிக்கன் விற்பனை நிறுத்தம்.. எப்போ தெரியுமா?
DMK vs CM Vijay : வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க - விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக
வெறும் வாயில் வடை சுடாதீங்க, ரீல்ஸ் மூலம் ஆய்வு செய்யாதீங்க - விஜய் அரசை வெளுத்தெடுத்த திமுக
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Embed widget