மேலும் அறிய

ஆதிதிராவிட பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவிகளை மறைந்திருந்து போட்டோ எடுத்த 4 முன்னாள் மாணவர்கள் கைது

’’புகைப்படங்கள் ஒருவேளை அழிக்கப்பட்டதா அல்லது வேறு நபர்களுக்கு பரப்பப்பட்டதா என்ற விபரங்கள் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்’’

திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 24 மாணவிகள் உட்பட 68 மாணவ மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தங்கி படிக்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி பிற்பகல்  3.45 மணி அளவில் 10 ஆம் வகுப்பு மாணவிகள் 3 நபர்கள் இயற்கை உபாதைக்காக பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கழிவறையில் உள்ள சிமெண்ட் ஜன்னல்களில் உள்ள துளைகளை பயன்படுத்தி அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் வினோத் (20), திருமலை (18), சுதேஷ் (16), கமலக்கண்ணன் (20), ஆகிய 4 மாணவர்களும் பள்ளி கழிவறையில் மாணவிகள் இயற்கை உபாதை கழிக்கும் போது அவர்கள் வைத்து இருந்த தொலைபேசியில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அந்த மாணவிகள் உடனடியாக பள்ளி தலைமையாசிரியர் முத்து சரவணனிடம் புகார் அளித்துள்ளார். 

ஆதிதிராவிட பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவிகளை மறைந்திருந்து போட்டோ எடுத்த 4 முன்னாள் மாணவர்கள் கைது

விரைந்து வந்த தலைமையாசிரியர் முத்துசரவணன் பள்ளி கழிவறையின் பின்புறம் ஒட்டி உள்ள புதரில் மறைந்திருந்த வினோத், திருமலை மற்றும்  சுதேஷ், கமலக்கண்ணன் ஆகிய நான்கு இளைஞர்களையும் பிடிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். எனவே, மாணவிகளின் கழிப்பறையை செல்போனில் அந்த வாலிபர்கள் படம் பிடித்திருக்கலாம். அப்போது, செல்போன் பிளாஸ் லைட் வெளிச்சம் வெளியாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதன் பிறகு  வீட்டிற்கு சென்ற பாதிக்கப்பட்ட பள்ளி மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் நடந்த சம்பவத்தை பற்றி புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியருக்கு பாதிக்கப்பட்ட பெற்றோர் தரப்பில் இருந்து கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்று வெறையூர் காவல் துறையினர் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நல அலுவலர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் புகார் கூறப்பட்ட 4 இளைஞர்களை நேரில் அழைத்து பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர்.


ஆதிதிராவிட பள்ளியில் கழிவறைக்கு சென்ற மாணவிகளை மறைந்திருந்து போட்டோ எடுத்த 4 முன்னாள் மாணவர்கள் கைது

இதில் நான்கு மாணவர்களும் தவறை ஒப்புக் கொண்டதால் இவர்கள் நான்கு நபர்களையும் வெறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் இருந்த தொலைபேசிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை சைபர் கிரைம் பிரிவுக்கு அனுப்பியுள்ளனர். அதில், பள்ளி கழிப்பறைகள் பதிவாகியுள்ளதா எனவும், காட்சி ஒருவேளை அந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டு அழிக்கப்பட்டதா அல்லது வேறு நபர்களுக்கு பரப்பப்பட்டதா என்ற விபரங்கள் சைபர் கிரைம் விசாரணையின் முடிவில் தெரியவரும் என காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவித்தனர். இயற்கை உபாதைக்கு கழிவறைக்கு சென்ற பள்ளி மாணவிகளுக்கு தொலைபேசியில் மறைந்திருந்த இளைஞர்கள் படம் எடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
NIA Raid: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. சர்ச்சைக்குரிய புத்தகங்கள் பறிமுதல்!
NIA Raid: தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை.. சர்ச்சைக்குரிய புத்தகங்கள் பறிமுதல்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!
Embed widget