மேலும் அறிய

Crime: ராணுவ வீரருடன் செல்போனில் சதித்திட்டம் தீட்டிய விவகாரம் - 2 பேர் கைது

ஆரணி அடுத்த படவேட்டில் ராணுவ வீரருடன் செல்போனில் சதித்திட்டம் தீட்டிய விவகாரத்தில் ராணுவ வீரரின் மைத்துனர் ஜீவா மற்றும் உதயா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குமார் என்பவர் தரை வாடகைக்கு எடுத்து அதில் கட்டிடம் கட்டி செல்வமூர்த்தி என்பவரிடம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 9 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு மாத வாடகை 3000 ரூபாய்க்கு கடையை விட்டுள்ளார். மேலும் கடந்த ஆண்டு குமார் இறந்து விட்டார். அதன் பிறகு அவருடைய மகனான ராமு கடையை எடுத்து நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அவர்களிடம் சென்று ராமு தங்களிடம் கடையை ஒப்படைக்குமாறு செல்வமுர்த்தியிடம் கேட்டுள்ளார். அதன் பிறகு செல்வமுர்த்தி கடையை ஒப்படைக்க முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் ராமு கிராமத்தில் உள்ள முக்கிய நபர்களிடம் வைத்து பேச்சுவார்த்தை நடத்தி கடை வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் செல்வமுர்த்தி கடையை ஒப்படைக்காமல் செல்வமூர்த்தியின் மகன்கள் ஜீவா மற்றும் உதயா ஆகியோர் ராமுவிடம் தகறாரில் ஈடுபட்டு கத்தியால் ராமுவை தலையில் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ராமுவை அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தன் மனைவி அடித்து துன்புறுத்தியதாக ராணுவத்தில் பணியாற்றும் பிரபாகரன் என்பவர் தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் முதற்கட்ட விசாரணை நடத்தி ராணுவ வீரரின் மனைவிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் ராணுவ வீரர் பிரபாகரன் அவரது நண்பர் வினோத் என்பவரிடம் தொலைபேசியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் ராணுவ வீரர் பிரபாகரன் பேசியது, தான் செய்துள்ள காரியம் தமிழ்நாடு அளவில் பெரியதாக பேசப்படும் என்றும், தான் வெளியிட்ட வீடியோவை சுமார் ஆறு கோடிக்கு மேற்பட்ட நபர்களுக்கு மேல் பார்த்துள்ளார்கள் என்றும், தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கட்சியை சேர்ந்த நபர்கள் தன்னிடம் பேசி வருகிறார்கள் என்றும், இந்த வீடியோவை குறித்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் போன்றவைகள் எல்லாம் நடைபெறும் என்றும், தன் மனைவியை அடிபட்டதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரக்கோரியும் , இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரியதாக போகிறது, நடைபெறும் சம்பவம் ஒன்றுக்கு இரண்டாக வெளியில் சொல்லுங்கள் எனவும், எங்கு சென்றாலும் ஒன்றுக்கு இரண்டாக பேச வேண்டும் என தனது நண்பருடன் பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த ஆடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராணுவ வீரர் பிரபாகரன், அவருடைய மனைவி கீர்த்தி மற்றும் மைத்துனர்கள் உதயா, ஜீவா ஆகியோருடன் சதி திட்டம் தீட்டியதாக செல்போனில் பேசிய வினோத் உள்ளிட்டோர் மீது சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதில் ராணுவ வீரருடன் செல்போனில் சதி திட்டம் தீட்டிய வழக்கில், பிரபாகாரனுடன் போனில் உரையாடிய வினோத்தை சந்தவாசல் போலீசார் கைது செய்தனர். வழக்கு பதிவு செய்ததை அறிந்த ராணுவ வீரரின் மைத்துனர் உதயா, ஜீவா ஆகியோர் தலைமறைவாகியிருந்தனர். அவர்களை காவல்துறையினர் தனிப்பட்டை அமைத்து இருவரை தேடி வந்தனர். இன்று அவர்கள் இருவரையும் தனிப்பட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | Crime

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
IPL 2025 Schedule: ஐபிஎல் போட்டி அட்டவணை ரிலீஸ்! முதல் போட்டி யாருக்கு? சிஎஸ்கே-விற்கு முதல் போட்டி யாருடன்?
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
WhatsApp: வாட்ஸ் அப்பில் சாட் தீம் மாற்றுவது எப்படி? வெளியான புதிய அப்டேட்!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.