மேலும் அறிய

சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!

திருவள்ளூரைச் சேர்ந்த இளைஞர் திருமணம் முடிந்து 5 நாட்களிலே மர்மமான முறையிலே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காசிரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் தாம்பரத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஆந்திர மாநிலம் பிள்ளையார்கண்டி பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணுக்கும் கடந்த 2ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் பெரியோர்கள் முன்னிலையில் நடந்தது. 

மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை:

திருமணம் முடிந்த நிலையில் புதுமாப்பிள்ளை உதயகுமார் தனது மனைவி பவித்ராவுடன் அவரது மாமனார் வீட்டிற்கு கடந்த 5ம் தேதி மறுவீடு சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த 6ம் தேதி காலையில் அங்கிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றில் புறப்பட்டு வெளியில் சென்றுள்ளார். அப்போது, அவரிடம் அவரது மனைவி பவித்ரா எங்கே செல்கிறீர்கள்? என்று கேட்டுள்ளார். 

அப்போது, உதயகுமார் தான் தனது நண்பர்களை காண்பதற்காக செல்வதாக தெரிவித்துள்ளார். காலையில் சென்ற கணவன் மதியம் கடந்து மாலை ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், அவரது மனைவி பவித்ரா போன் செய்துள்ளார். அப்போது, அவரது போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்துள்ளது. தொடர்ந்து முயற்சித்தும் போன் சுவி்டச் ஆஃப் என்றே வந்துள்ளது. இதனால், பவித்ரா பதற்றம் அடைந்துள்ளார். 

சாலையில் கிடந்த மாப்பிள்ளை:

கணவனை தொடர்ந்து தொடர்பு கொள்ள முடியாத மனைவி பவித்ரா தனது குடும்பத்தினரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனால், அவர்களும் பதற்றம் அடைந்துள்ளனர். பின்னர், தொடர்ந்து உதயகுமாருக்கு முயற்சித்தபோது அவரது செல்போன் ஆன் செய்யப்பட்டு ரிங் சென்றுள்ளது. 

அப்போது, அவரது போனை வேறு ஒரு நபர் எடுத்துள்ளார். அவர் இந்த போனை கொண்டு வந்தவர் சாலையில் விழுந்து கிடப்பதாகவும், தனது காரில் போனை சார்ஜ் போட்டு தற்போது பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

இளைஞர் மரணம்:

இதனால், பவித்ராவும் அவரது குடும்பத்தினரும் பதறியுள்ளனர். மேலும், சுயநினைவில்லாமல் இருக்கும் உதயகுமாரை ஊத்துக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பவித்ராவின் குடும்பத்தை ஊத்துக்கோட்டை மருத்துவமனைக்கு வருமாறும்  தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

பின்னர், உதயகுமாருக்கு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருவள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், உதயகுமாரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

பெரும் சோகம்:

இதனால், பவித்ரா அதிர்ச்சியில் உறைந்துள்ளார். மேலும், பவித்ராவின் குடும்பத்தினரும், தகவல் அறிந்த உதயகுமாரின் குடும்பத்தினரும் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், உதயகுமாருக்கு நிகழ்ந்தது விபத்தா? உதயகுமார் யாரைச் சந்திக்கச் சென்றார்? என்ற பல கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 நாளிலே புது மாப்பிள்ளை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமும், இளம்பெண் தனது கணவனை இழந்ததும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
காவல் நிலையம் முன்பு பிளேடால் கையை கிழித்த பெண் !! கஞ்சா வழக்கு கைது பின்னணி என்ன ?
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
சிறுமி கொலை வழக்கின் எதிரொலி? - கோவை சிறையில் கார்த்திக் மீது தாக்குதல்...
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
விழுப்புரத்தில் கொடூரம்: 4 வயது குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
புதிய கட்சி தொடங்குவது உறுதி.! 2 நாட்களில் அறிவிப்பு.? அண்ணாமலை டெல்லி சென்றதன் பின்னணி.!
CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
Annamalai: பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
பாஜக கொடியை கழற்றிய அண்ணாமலை; புதிய கட்சி தொடக்கமா.? டெல்லி செல்லும் முன் பரபரப்பு பேட்டி
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
Embed widget