மேலும் அறிய

crime: பிறந்து சில நாட்களே ஆன குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை - கம்பத்தில் பரபரப்பு

பிறந்து சில நாட்களே ஆன குழந்தை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு கிடந்ததால் பரபரப்பு. 

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது 23. இவர் அப்பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அவருடைய மனைவி சினேகா வயது 19. இவருக்கு, கடந்த 20 நாட்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையுடன், கம்பம் கிராமசாவடி தெருவில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் சினேகா இருந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் அவருடைய பாட்டி சரஸ்வதியும், சினேகா மட்டும் இருந்தனர். அவருடைய பெற்றோர் கேரளா மாநிலத்துக்கு வேலைக்கு சென்று விட்டனர்.


crime: பிறந்து சில நாட்களே ஆன குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை - கம்பத்தில் பரபரப்பு

இந்தநிலையில் காலை 11.30 மணியளவில் வீட்டுக்கு அருகே உள்ள கடைக்கு பாட்டி சென்ற நிலையில் வீட்டில் சினேகா தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்து விட்டு கழிப்பறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது தொட்டிலில் குழந்தை இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் பதறியடித்தபடி அக்கம்பக்கத்தினரிடம் குழந்தையை காணவில்லை என்று கூறினார். இதுகுறித்து அவர்கள் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் மதுகுமாரி, காவல் ஆய்வாளர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில், குழந்தையை காணாமல் போன நேரத்தில் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறினர். இதைத்தொடர்ந்து கம்பம் பகுதியில் உள்ள குடுகுடுப்பைக்காரர்களை பிடித்து கிடுக்கிப்படி விசாரணை நடத்தினர்.


crime: பிறந்து சில நாட்களே ஆன குழந்தை நீரில் மூழ்கடித்து கொலை - கம்பத்தில் பரபரப்பு

ஆனால் எந்த துப்பும் கிைடக்கவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அவற்றில் குழந்தையை யாரும் எடுத்து சென்றதைப்போல் காட்சி பதிவாகவில்லை. இந்த சம்பவத்தில் போலீசாருக்கு சரியான தகவல் கிடைக்காமல் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தநிலையில் வீட்டில் தேடி பார்க்க போலீசார் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து சினேகாவின் வீட்டுக்கு போலீசார் சென்றனர். வீட்டில் தேடியபோது தண்ணீர் பிடித்து வைத்திருந்த பால்கேனில் குழந்தை இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது, குழந்தை அசைவற்ற நிலையில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக கூறினர். இதைத்தொடர்ந்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். இதற்கிடையே குழந்தையின் தந்தை மணிகண்டன், தாய் சினேகா, பாட்டி சரஸ்வதி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பிறந்து 20 நாட்களே ஆன குழந்தை பால்கேன் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதி போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS on DMK: “நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“நீங்க கூட்டணியை நம்புறீங்க… நான் மக்களை நம்புறேன்…’’ திமுக குறித்து இபிஎஸ் நெத்தியடி விமர்சனம்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
Chennai Power Shutdown(09.07.25): சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Minister on Buses: பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Embed widget