மேலும் அறிய

crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் நேற்று முன்தினம் பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் காவல்துறையினர் நள்ளிரவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனை ஈடுபட்டு வந்தனர்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

அப்பொழுது கேரள பதிவு கொண்ட காரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது, அவர்களிடம் முதலில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெரியகுளம் காவல்துறையினர் வாகனத்தையும், வாகனத்தில் பயணித்த மூவரையும், விசாரணைக்காக பெரியகுளம்  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  விசாரணை மேற்கொண்ட போது,  முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகனத்தை முழுமையாக சோதனை மேற்கொண்ட பொழுது  வாகனத்தில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் 30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட கொடைக்கானல் சேர்ந்த ஆரிப் என்ற நபரிடம் தொடர் விசாரணையின் போது  தொடர்புடைய மேலும் ஏழு நபர்களின் விவரம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து  ஆரிப் சிறையில் அடைக்கப்பட்டார்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத்  உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு மெத்தபெட்டமைன் போதைப் பொருள் மொத்த விற்பனையாளர் யார்? மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு யார் உடந்தை, முக்கிய குற்றவாளி யார்?  தமிழகத்தில் எந்தெந்த நகரங்களில் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தனிப்படையினர் மேலும் கோவை, ஈரோடு, கம்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  மேகு மேலும் 3 இளைஞர்களை கைது செய்து காரையும் பறிமுதல் செய்து நேற்று இரவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்டனர்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

இதில் கம்பம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கொடைக்கானலில் சொந்தமாக காட்டேஜ் வைத்து நடத்தி வரும் நிலையில் கொடைக்கானல் வரும்  வெளி மாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு மெத்தப்பட்டம்மைன், கொக்கையின், என் எஸ் டி ஸ்டாம்ப், உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது .

மேலும் விகாஷ் ஷியாம், ஆரிப், ஆனந்த், யாசர் முக்தார், அன்பழகன் ஆகிய ஐந்து நபர்களும் போதைப் பொருட்களை  கேரளா மற்றும் பெங்களூர் பகுதியில் இருந்து வாங்கி வந்து ராம்குமாரிடம் கொடுப்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சர்வதேச சந்தையில் கிடைக்கும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கேரளாவைச் சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் தனிப்படையினர்  தேடி வருகின்றனர்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

மேலும் இதுவரையில் சர்வதேச போதை பொருள் கடத்தல் வழக்கில்  மொத்தம் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் அடிப்படையில்  பெரியகுளம் வடகரை காவல்துறை ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு போதைப் பொருள் விற்பனையாளர் மற்றும் கடத்தலுக்கு உதவியாளர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget