மேலும் அறிய

விடாக்கொண்டன்... கொடாக்கொண்டன்... கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

திண்டுக்கல்லில் கைரேகை மூலம் சிக்கிய கொள்ளை கும்பல் தேனி , உசிலம்பட்டி , திண்டுக்கல் உள்ளிட்ட 19 இடங்களில் கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது.

திண்டுக்கலில் விடாக்கொண்டன் கொடாக்கொண்டன் கொள்ளை கும்பலை போலீசார் கூண்டோடு அள்ளிவந்தது பொதுமக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது. ஒரு புதிருக்கு விடை தேடி சென்றவர்களுக்கு 19 புதிர்களுக்கான விடை கிடைத்தது இந்த வழக்கில் கூடுதல் சிறப்பாகும். இந்த ஆண்டு முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திருட்டு கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. எல்லாமே வெவ்வேறு இடங்களில் நடந்தவையாகும். போதிய தடயங்கள் சிக்காததால் போலிசாருக்கு குழப்பமே மிஞ்சியது. சமீபத்தில் திண்டுக்கல் தாலுகா ஸ்டேஷன் எல்லைக்குள் தாடிக்கொம்பு, சென்னமநாயக்கன்பட்டி, குள்ளனம்பட்டி போன்ற புறநகர்ப் பகுதிகளில் 3 கொள்ளைகள் அடுத்தடுத்து நடந்தன. போலிசாருக்கு சவாலான இந்த கொள்ளை சம்பவத்தில் தனிக்கவனம் செலுத்த திண்டுக்கல் எஸ்பி ரவளிப் பிரியா உத்தரவிட்டார்.

விடாக்கொண்டன்... கொடாக்கொண்டன்... கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

 ஜூலை 2ஆம் தேதி இரவு தாடிக்கொம்பு சக்தி முருகன் நகரில் ஓய்வு அரசு ஊழியர் வீட்டில் கொள்ளை நடந்தது. தாலிச்செயின் உட்பட 15 பவுன் நகைகளை திருடிச் சென்றது அந்த கும்பல். போலீசார் கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை துவங்கினர் . முந்தைய பல குற்ற வழக்குகளில் கிடைத்த கைரேகைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர். இதில் ஒரு ரேகை மட்டும் வடமதுரை அருகே கிடைத்த கைரேகையுடன் ஒத்து போனது. சம்பவங்கள் நடந்த பகுதி கேமரா காட்சிகள் அலைபேசி சிக்னல்களை ஆய்வு செய்தனர் அலைபேசி சிக்னல்கள் கை கொடுக்காததால் போலீசார் சோர்ந்தனர். இருப்பினும் கைரேகை கேமரா பதிவுகளின் படி குற்றவாளிகளை போலீசார் ஓரளவு அனுமானித்தனர் அதை உறுதிப்படுத்த சிக்கிய கைரேகை நபரின் அலைபேசி சிக்னலை ஆய்வு செய்தனர். தேனியில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் அலைபேசி ஆப் செய்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த நாளும் நேரமும் தாடிக்கொம்பு சம்பவத்தோடு ஒத்துப்போனது தன்னை புத்திசாலியாக கருதிய திருடன் அலைபேசி ஆப் செய்து விட்டு மீண்டும் திருட திண்டுக்கல் வந்துள்ளான். இதனைக் கணித்த போலிசார் அவனோடு சேர்ந்த கும்பல் தேனி மாவட்டம் காமாட்சிபுரம் தாடி சேரி பகுதியைச் சேர்ந்தது என உறுதி செய்தனர்.

விடாக்கொண்டன்... கொடாக்கொண்டன்... கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

 இரவோடு இரவாக சந்தோஷ் என்பவனை நன்கு கவனித்து விசாரித்ததில் ஒப்புக்கொண்டான். கூட்டாளியை கைது செய்ய முயன்றபோது சிலர் ஒரு அரசியல் கட்சியுடன் சேர்ந்து எதிர்த்து போராட்டம் செய்தனர். போலீசார் எடுத்துக்கூறியும் ஒப்புக்கொள்ளவில்லை. எஸ்பி ரவிப்பிரியா கும்பலை கைது செய்வதில் உறுதியாக இருந்தார் . ஒருகட்டத்தில் இடையூறை மீறி கூட்டாளிகள் அர்ஜுனன், ஐயப்பன் சிக்கினர். 

விடாக்கொண்டன்... கொடாக்கொண்டன்... கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

அவர்களை விசாரித்ததில் அந்த கும்பல் அம்மி, ஆட்டுக்கல் குத்துபவர், தள்ளுவண்டி வியாபாரம் செய்வது போல ஒரு பகுதியை இரண்டு மாதங்களாவது நோட்டமிட்டும் அருகில் உள்ள வீடுகள் அங்கு இருப்போர் விவரங்களை சேகரிப்பது முகமூடி டிரவுசர் அணிந்து சம்பவம் செய்யும் அந்த கும்பல் ஒரே தெருவில் ஐந்து வீடுகள் ஆவது திருட முயற்சிப்பர். இதில் குறிப்பிடத்தக்க ஆட்கள் இல்லாத வீடுகளில் திருடுவதில்லை. இடத்தை முடிவு செய்து இரவு ஏழு மணிக்கெல்லாம் அங்கு ஆஜராகி இரவு முழுவதும் திருடுவர்.2:00 மணிக்கு மேல் முகத்தை மூடிக்கொண்டு ஆயுதங்களோடு வீட்டிற்குள் புகுந்து விடுவர் வீட்டில் இருப்போரை கத்தியை காட்டி மிரட்டி அமரச்செய்து நிதானமாக கொள்ளையடிப்பது  தடையங்களை விட்டுவைக்காமல் சுருட்டி விடுவர்.

விடாக்கொண்டன்... கொடாக்கொண்டன்... கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

 இவர்கள் சிக்கிய இதற்கு முக்கிய காரணம் இவர்கள் ஒரே ஸ்டைலில் நடத்திய கொள்கைகள்தான் திண்டுக்கல்லில் 5  கொள்ளை சம்பவங்கள் வேடசந்தூரில் 3 கொள்ளை சம்பவங்கள் வத்தலகுண்டு, நிலக்கோட்டையில் 8 சம்பவங்கள்,உசிலம்பட்டியில் 2 என 19 இடங்களில் நடந்த கொள்ளைகள் ஒரே விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தன. கொள்ளையடித்த நகைகளை விற்க எளிதாக இருக்கும் என்பதால் கொள்ளை அடித்த நகைகளை உருக்கி தங்க கட்டியாக மாற்றிவிடுவர்.

விடாக்கொண்டன்... கொடாக்கொண்டன்... கொள்ளை கும்பல் சிக்கியது எப்படி?

இது குறித்து காவல் துறையினர் கூறுகையில், கொள்ளையின் போது முரட்டுத்தனமாக நடக்கும் கும்பலை கைது செய்ய முற்படும் போது பல்வேறு சிக்கல்கள் கிளம்பின. புகார் அளித்தவர்களுக்கு பதில் கூற வேண்டும் நகையை பறிமுதல் செய்ய வேண்டும் என கூறியபோது நாங்கள் அவர்களை மிரட்டியதாக சித்தரித்து கட்சியினருடன் சேர்ந்து எங்களை கண்டித்து போராட்டம் நடத்தினர் . அவர்கள் வீட்டில் நடந்து இருந்தால் இப்படி எதிர்ப்பாளர்களா எனவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லை எனில் போலீசார் எப்படி குற்றவாளிகளை பிடிக்க முடியும் என்று புலம்புகின்றனர் போலிசார்.

தலைப்பு செய்திகள்

"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை
வேலை தேடிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் !! நகையை பறித்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Seeman Emotional : ’பெரியப்பா இருக்கேண்டா - இயக்குநர் செழியன் மறைவு | சீமான் செய்த செயல்’ நெகிழ்ச்சி பதிவு..!
’இயக்குநர் செழியன் மறைவு – சீமான் செய்த செயல்’ நெகிழ்ச்சி பதிவு..!
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Embed widget