மேலும் அறிய

திருடரை தாக்கிய பொதுமக்கள்; கைது செய்ய மறுத்த காவல்துறை - சேலத்தில் பரபரப்பு

"நீ புகார் கொடுத்தால் நீதான் வெற்றி பெறுவாய்" என்று காவலர்கள் யோசனை கூறியதாக, பொதுமக்கள் கூறிக் கொண்டு, காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபருக்கு காவல்துறையினர் உதவுவதாகக் கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள கீரைகார தெருவில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் தினேஷின் வீட்டில் அவரது மனைவி மற்றும் தாய் இருந்த போதும் முன்பின் தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் நுழைந்து உள்ளார். வீட்டில் இருந்த நபர்கள் யார் என்று விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். உடனே திருட வந்ததை உணர்ந்து கொண்ட தினேஷின் மனைவி அருகில் இருந்த பொதுமக்கள் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பிடிபட்ட வாலிபரை பிடித்து வந்து காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர். 

திருடரை தாக்கிய பொதுமக்கள்; கைது செய்ய மறுத்த காவல்துறை - சேலத்தில் பரபரப்பு

அவரிடம் காவல்துறையினர் பேசிக்கொண்டிருந்தபோது, பொதுமக்கள் ஒரு சிலர் இந்த வாலிபரை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் பிடிபட்ட வாலிபரிடம், "நீ புகார் கொடுத்தால் நீதான் வெற்றி பெறுவாய்" என்று காவலர்கள் யோசனை கூறியதாக, பொதுமக்கள் கூறிக் கொண்டு, காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட வாலிபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (24) என்றும், கோவில் திருவிழாக்களில் ராட்டினம் இயக்கும் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறை இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, சமீபத்தில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணை கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் அழிந்தது, இந்த நிலையில் இன்று திருடன் என கூறப்பட்ட பிரசாந்தை பலமுறை காவல்துறையினர் எச்சரித்தும் பொதுமக்கள் அவரை கடுமையாகத் தாக்கினர். இதனால் அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு காவல்துறையினரே காரணம். அதனால்தான் பிடிபட்ட திருடனை கைது செய்யாமல் விசாரணை நடத்தினோம். பொதுமக்கள் அதை புரிந்துகொள்ளாமல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

திருடரை தாக்கிய பொதுமக்கள்; கைது செய்ய மறுத்த காவல்துறை - சேலத்தில் பரபரப்பு

சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், வீட்டில் பெண்கள் தனியாக இருந்தபோது திடீரென வீட்டிற்குள் நுழைந்து "என்னை தெரியவில்லையா" என்று உரிமையோடு கேட்டுள்ளார். பின்னர் நாங்கள் திருடன் என கண்டறிந்த பின் அரிசி வாங்க வந்ததாக கூறியுள்ளார். பொதுமக்களை அழைத்து திருடனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் காவல்துறையினர் அஜாக்கிரதையாக திருடரிடம் பேசிக்கொண்டு புகார் அளித்த அவர்கள் மீது புகார் கொடுக்கச் சொன்னார் என்று கூறினார். இதனால் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு- 108 பேர் மருத்துவமனையில் அனுமதி!
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
Biggboss Tamil Season 8 LIVE: ஆண்கள் Vs பெண்கள்.. பிக்பாஸில் இது புதுசு.. விஜய் சேதுபதியின் ட்விஸ்ட்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
வான் சாகசத்தில் கூட்ட நெரிசல், பலி; திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடே காரணம்- ஈபிஎஸ் கண்டனம்
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
Quarterly Exam Holiday: 9 நாட்கள் காலாண்டு விடுமுறை முடிந்தது; நாளை பள்ளிகள் திறப்பு - ஆசிரியர்களுக்கு என்ன உத்தரவு தெரியுமா?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
முதல் இரு தரப்பு பயணம்.. டெல்லி வந்த மாலத்தீவு அதிபர் முய்சு.. சீனாவுக்கு செக்?
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகின்றன" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள்.. இந்தியாவை அதிரவிட்ட கடத்தல்.. நடந்தது என்ன?
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Embed widget