மேலும் அறிய

திருடரை தாக்கிய பொதுமக்கள்; கைது செய்ய மறுத்த காவல்துறை - சேலத்தில் பரபரப்பு

"நீ புகார் கொடுத்தால் நீதான் வெற்றி பெறுவாய்" என்று காவலர்கள் யோசனை கூறியதாக, பொதுமக்கள் கூறிக் கொண்டு, காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபருக்கு காவல்துறையினர் உதவுவதாகக் கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள கீரைகார தெருவில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் தினேஷின் வீட்டில் அவரது மனைவி மற்றும் தாய் இருந்த போதும் முன்பின் தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் நுழைந்து உள்ளார். வீட்டில் இருந்த நபர்கள் யார் என்று விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். உடனே திருட வந்ததை உணர்ந்து கொண்ட தினேஷின் மனைவி அருகில் இருந்த பொதுமக்கள் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பிடிபட்ட வாலிபரை பிடித்து வந்து காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர். 

திருடரை தாக்கிய பொதுமக்கள்; கைது செய்ய மறுத்த காவல்துறை - சேலத்தில் பரபரப்பு

அவரிடம் காவல்துறையினர் பேசிக்கொண்டிருந்தபோது, பொதுமக்கள் ஒரு சிலர் இந்த வாலிபரை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் பிடிபட்ட வாலிபரிடம், "நீ புகார் கொடுத்தால் நீதான் வெற்றி பெறுவாய்" என்று காவலர்கள் யோசனை கூறியதாக, பொதுமக்கள் கூறிக் கொண்டு, காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட வாலிபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (24) என்றும், கோவில் திருவிழாக்களில் ராட்டினம் இயக்கும் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறை இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, சமீபத்தில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணை கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் அழிந்தது, இந்த நிலையில் இன்று திருடன் என கூறப்பட்ட பிரசாந்தை பலமுறை காவல்துறையினர் எச்சரித்தும் பொதுமக்கள் அவரை கடுமையாகத் தாக்கினர். இதனால் அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு காவல்துறையினரே காரணம். அதனால்தான் பிடிபட்ட திருடனை கைது செய்யாமல் விசாரணை நடத்தினோம். பொதுமக்கள் அதை புரிந்துகொள்ளாமல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

திருடரை தாக்கிய பொதுமக்கள்; கைது செய்ய மறுத்த காவல்துறை - சேலத்தில் பரபரப்பு

சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், வீட்டில் பெண்கள் தனியாக இருந்தபோது திடீரென வீட்டிற்குள் நுழைந்து "என்னை தெரியவில்லையா" என்று உரிமையோடு கேட்டுள்ளார். பின்னர் நாங்கள் திருடன் என கண்டறிந்த பின் அரிசி வாங்க வந்ததாக கூறியுள்ளார். பொதுமக்களை அழைத்து திருடனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் காவல்துறையினர் அஜாக்கிரதையாக திருடரிடம் பேசிக்கொண்டு புகார் அளித்த அவர்கள் மீது புகார் கொடுக்கச் சொன்னார் என்று கூறினார். இதனால் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Bonus: பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
பொங்கல் போனஸ்.! தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்- முதலமைச்சர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பெருகும்! 11,809 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு, இளைஞர்களுக்கு கொண்டாட்டம்!
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
TOP Car Launch 2025: இந்திய சந்தையை புரட்டிபோட்ட கார்கள்.. 2025ல் சம்பவம் செய்த மாடல்கள், SUV-க்களின் ஆதிக்கம்
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
’’காலம்தான் கடக்கிறது; ஓய்வுபெறும் நிலைக்கே வந்துவிட்ட ஆசிரியர்கள்’’ விடிவுதான் எப்போது? எழும் கேள்விகள்!
Udhayanidhi Stalin Interview : ’திமுகவிற்கு எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
’திமுகவின் எதிர்கட்சி எது? இளைஞரணிக்கு எத்தனை சீட்’ உதயநிதி Open Talk..!
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
இன்று முதல் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்.! எழும்பூரில் எந்தெந்த ரயில்.? எத்தனை மணிக்கு புறப்படும் தெரியுமா.?
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Happy New Year 2026: புத்தாண்டை வரவேற்ற வானிலை.. சென்னையில் கொட்டிய கனமழை.. தமிழக நிலவரம்
Gold rate today: தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
தங்கம் சவரனுக்கு 5,280 ரூபாய் குறைந்தது.! 4 நாட்களில் தலைகீழ் மாற்றம் - சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நகை பிரியர்கள்
Embed widget