மேலும் அறிய

19 ஆண்டுகள் தலை மறைவு...! கழுகு போல் காத்திருந்த போலீஸ்..! விமான நிலையத்தில் சிக்கியது எப்படி ?

19 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை விமான நிலையத்தில் கைது.

தஞ்சாவூர் போலீசால் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடுதல் உட்பட 5  பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்டு வந்தவர், 19 ஆண்டுகளுக்குப் பின்பு, சென்னை விமான நிலையத்தில் கைது. பஹ்ரைனில் இருந்து விமானத்தில் வந்தவரை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, தஞ்சாவூர் போலீசில் ஓப்படைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திராவிடமணி (43). இவர் மீது தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு போலீசில், 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பயங்கர ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடுதல், கொலைமுயற்சி, குற்றம் செய்ய துாண்டுதல் உட்பட 5 பிரிவுகளில், கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
தொடர்ந்து தலைமறைவு
 
அந்த வழக்கில் கைது செய்வதற்காக, திராவிடமணியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து திராவிடமணியை, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேடப்படும்  தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டிருந்தது. ஆனாலும் திராவிட மணி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
 
19 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி
 
இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இருந்து, கல்ப் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை  அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தனர். இந்த விமானத்தில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த திராவிட மணியும் வந்தார். அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது திராவிடமணி, தஞ்சாவூர் மாவட்ட போலீசாரால் தேடப்படும், 19 ஆண்டுகள் தலை மறைவு குற்றவாளி என்பது தெரிய வந்தது.
 
இதையடுத்து திராவிட மணியை வெளியில் விடாமல், குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து, ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீஸ்க்கு தகவல் கொடுத்து, திராவிட மணிக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அதோடு தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, குடியுரிமை அதிகாரிகள்  தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் தஞ்சை மாவட்ட தனிப்படை போலீசார், திராவிட மணியை கைது செய்து தஞ்சாவூர் கொண்டு செல்வதற்கு, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
TN Rain Alert:ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
Embed widget