மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Crime: 2 கிலோ அளவிற்கு தங்க புதையல்; மோசடியில் ஈடுபட முயன்ற வட மாநிலத்தவர் இருவர் சிக்கியது எப்படி?

தங்க முலாம் பூசியிருப்பதை அறிந்து சந்தேகமடைந்த தங்கராஜ் இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் தங்கராஜ் (37). இவர் சிவகிரி பஜாரில் அரிசி கடை வைத்து  நடத்தி வருகிறார். இந்த நிலையில் வட நாட்டை சேர்ந்த சுனில்(42), மற்றும் கிஷன் (63) ஆகிய இருவரும் தங்கராஜிடம் கடந்த சில நாட்களாக பழகி வந்துள்ளனர். அதோடு தங்களுக்கு தங்க  தோரணங்கள் கொண்ட புதையல் கிடைத்திருக்கிறது. அது சுமார் 2 கிலோ அளவில் இருக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும் இதனை வேறு யாருக்கும் கொடுக்க முடியாது. நீங்கள் எங்களிடம் நன்றாக பழகியவர் என்பதால் உங்களுக்கு தருகிறோம், அதை வைத்துக்கொண்டு அவசர தேவைக்காக முன் பணமாக ரூ.5 லட்சம் தாருங்கள் என்று கூறியுள்ளனர். அதோடு உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால் சேம்பிலாக தருகிறோம் என்று இரண்டு குண்டுமணி அளவில்  தங்க முலாம் பூசி்யதை கொடுத்துள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட தங்கராஜ் முன்பணமாக இருவருக்கும் 2500 ரூபாய் கொடுத்துள்ளார்.

பின் தங்க முலாம் பூசியிருப்பதை அறிந்து சந்தேகமடைந்த தங்கராஜ் இது குறித்து சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் சண்முக லட்சுமி இருவரையும் கையும், களவுமாக பிடிக்க முயன்றார், அதன்படி  காவல்துறையினர் தங்கராஜ் உதவியுடன் காத்திருந்து இருவரையும் வரவழைத்து அவர்களை  அமுக்கி பிடித்தனர். அப்போது அவர்களிடம் இருந்த தங்க முலாம் பூசிய போலி தங்கத்தை பறிமுதல் செய்து சிவகிரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது, அதாவது பிடிபட்ட சுனில் மற்றும் கிஷன் ஆகிய இருவரும் குஜராத் அருகே அகமதாபாத் டக்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், 20 நாட்களுக்கு முன்னர் கடையநல்லூர் பகுதிக்கு குடும்பத்துடன் வந்தவர்கள் அங்கு தங்கியிருந்து இது போன்று பழகி மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. பின் காவல்துறையினர் அவர்கள் கூடாரம் அமைத்து தங்கியிருந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அவர்கள் சொன்ன குடும்பத்தினர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் இதே யுக்தியை பயன்படுத்தி கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இலட்சக்கணக்கில் மோசடி செய்து பணத்தை பெற்றுக்கொண்டு தப்பியோடியதும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரே யுக்தியை பயன்படுத்தி மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதோடு கைதான சுனிலின் முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது மனைவி லட்சுமிகா என்பவர் கடந்த 2022 இல் 5 பேர் கொலை வழக்கு ஒன்றில் கர்நாடகா சிறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சுனில், கிஷன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த  வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தது தொடர்பாக புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் காவலர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். அதோடு இது போன்று புதையல் இருப்பதாக கூறி வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய நபர்களிடம் ஏமாந்தவர்கள் வெக்கப்பட்டு புகார் அளிக்க தயங்குகின்றனர். அதனை சாதகமாக பயன்படுத்தி இது போன்று மோசடி பேர்வழிகள் காவல்துறையினரிடம் சிக்காமல் தொடர்ந்து இதே வேலையை செய்கின்றனர். எனவே இது போன்று சந்தேகப்படும் படியான நபர்களை கண்டறிந்தால் பொதுமக்கள் தைரியமாக உள்ளூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், வெளிமாநில ஆசாமிகளிடம் ஏமாற வேண்டாம் என்றும் கூறியதோடு, பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். புதையல் இருப்பதாக கூறி பணம் பறிக்க முயன்ற வட மாநிலத்தவர் இருவர் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
P Chidambaram:
"காங்கிரசுக்கே தார்மீக வெற்றி! நாங்கள் கொண்டாடுவதில் பாஜகவுக்கு ஏன் பொறாமை?" ப.சிதம்பரம்
"நீதி வேண்டும்! புதியதாக யாரும் உருவாக அண்ணாமலை விரும்பவில்லை" பா.ஜ.க. நிர்வாகி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

PM Modi : ஜனாதிபதியை சந்தித்த மோடி..ஜூன் 9 பதவியேற்பு!MK Stalin MASTER PLAN : திமுக எம்.பிக்கள் கூட்டம்..முதல்வரின் அதிரடி முடிவு!ஆட்டம் ஆரம்பம்Annamalai become MP? : மத்திய அமைச்சர் அ.மலை?பறிபோகிறதா மாநில பதவி?அதிரடி காட்டும் மோடிMamata Banerjee vs Modi : மம்தாவிடம் SURRENDER ஆன 3 பாஜக எம்பி-க்கள்? கலக்கத்தில் மோடி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
Modi Swearing-in Guests: மோடி 3.0 பதவியேற்பு! வரப்போகும் தலைவர்களும், 200 சாதாரண குடிமக்களும்!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
வலுவான, நிலையான அரசை பாஜக கூட்டணி அமைக்கும்: பிரதமர் மோடி பேச்சு!
P Chidambaram:
"காங்கிரசுக்கே தார்மீக வெற்றி! நாங்கள் கொண்டாடுவதில் பாஜகவுக்கு ஏன் பொறாமை?" ப.சிதம்பரம்
"நீதி வேண்டும்! புதியதாக யாரும் உருவாக அண்ணாமலை விரும்பவில்லை" பா.ஜ.க. நிர்வாகி குற்றச்சாட்டு
Yogi Babu : ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்... தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு...
ஃபேஸ்புக்கில் மலர்ந்த காதல்....தம்பியின் காதலை சேர்த்து வைத்த யோகி பாபு
T20 World Cup: மீண்டும் மீண்டுமா! பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்புவைக்க காத்திருக்கும் இந்தியா!
மீண்டும் மீண்டுமா! பாகிஸ்தான் அணியின் சூப்பர் 8 சுற்றுக்கு ஆப்புவைக்க காத்திருக்கும் இந்தியா!
Anjaamai Review: நீட் தேர்வும் நீடிக்கும் அவலங்களும்! அஞ்சாமை படம் கற்றுத்தரும் பாடம்!
நீட் தேர்வும் நீடிக்கும் அவலங்களும்! அஞ்சாமை படம் கற்றுத்தரும் பாடம்!
3-வது முறை பிரதமர்! நரேந்திர மோடியை ஆட்சியமைக்க அழைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு!
3-வது முறை பிரதமர்! நரேந்திர மோடியை ஆட்சியமைக்க அழைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு!
Embed widget