மேலும் அறிய

மயிலாடுதுறை உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லையில் தீவிரம் காட்டியது அம்பலம்! மேலும் இரு மாணவிகள் புகார்!

மயிலாடுதுறையில் இரு தினங்களுக்கு முன்பு மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைதான உடற்கல்வி ஆசிரியர் மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

சென்னயிஜ் பிரபல தனியார் பள்ளியின் பாலியல் ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து கராத்தே பயிற்சி மாஸ்டர் கெபிராஜ் மற்றும் பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன்  என தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் பெறப்பட்டுள்ளன. பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று அவரது செல்போன் நம்பர் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப் வாயிலாக 100 புகார்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ளன. 


மயிலாடுதுறை உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லையில் தீவிரம் காட்டியது அம்பலம்! மேலும் இரு மாணவிகள் புகார்!

இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் நூற்றாண்டுகள் பழமையான ஒரு பள்ளியில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை 6 ம் வகுப்பில் இருந்து 12 ம் வகுப்பு வரை படித்துள்ளார்.  விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவரும் அண்ணாதுரையிடம் பயிற்சி பெற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளதாகவும், பயிற்சி அளித்த ஆசிரியர் அண்ணாத்துரை இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், உடல் ரீதியாக சீண்டல்களில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். 


மயிலாடுதுறை உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லையில் தீவிரம் காட்டியது அம்பலம்! மேலும் இரு மாணவிகள் புகார்!

2018-ஆம் ஆண்டு அந்த மாணவியை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வதற்கு தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளதாகவும், தற்போது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாலியல் தொந்தரவு குறித்து வெளியில் சொல்ல முடியாமல் இருந்த மாணவி சமீபத்தில் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் அளித்து வருவதும் அதனை அடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்படுவதையும் அறிந்து தைரியம் அடைந்து தற்போது காவல்நிலயத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பையும், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


மயிலாடுதுறை உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லையில் தீவிரம் காட்டியது அம்பலம்! மேலும் இரு மாணவிகள் புகார்!

மயிலாடுதுறை மாணவி அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து கடந்த மூன்று தினங்களாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை கைது செய்யப்பட்ட தகவல் அறிந்து, அந்த ஆசிரியர் தங்களுக்கும் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி மேலும் 2 மாணவிகள் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். 2010-ஆம் ஆண்டு முதல் 2018-ஆம் ஆண்டு வரை படித்த மற்றொரு மாணவியும், 2008-ஆம் ஆண்டுமுதல் 2011-ஆம் ஆண்டு வரை படித்த மற்றொரு மாணவியும் இந்த திடுக்கிடும் புகாரை அளித்தனர். இதையடுத்து, மேலும் இரண்டு மாணவிகளின் சாட்சிகளை கொண்டு அனைத்து மகளிர் காவல்நிலைய காவலர்கள் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரையை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


மயிலாடுதுறை உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொல்லையில் தீவிரம் காட்டியது அம்பலம்! மேலும் இரு மாணவிகள் புகார்!

இந்த சூழலில் அந்த பள்ளியில் படித்த பல மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ந்து போய் உள்ளனர். மேலும் இந்த பாலியல் குற்றச்சாட்டு இந்த மூன்று மாணவியுடன் முடியுமா? அல்லது இன்னும் பல மாணவிகளுக்கு  புகார் கொடுக்க வருவார்களா என அச்சத்தில் உறைந்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Lok Sabha Election LIVE : தூத்துக்குடியில் போலீஸ் வேன் கண்ணாடி உடைப்பு - பெரும் பதற்றம்
TN Lok Sabha Election LIVE : தூத்துக்குடியில் போலீஸ் வேன் கண்ணாடி உடைப்பு - பெரும் பதற்றம்
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Anbumani casts vote : ”தமிழகத்தில் அமைதி புரட்சி ஆரம்பம்” வாக்களித்த பின் அன்புமணி பேட்டிAnbumani Daughter : ’’முதல்முறை ஓட்டு போட்ருக்கேன்..ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ அன்புமணி மகள் பேட்டிAnnamalai casts vote  : Lok Sabha Elections 2024 :  படையெடுத்து வந்த திரைப் பிரபலங்கள்..வரிசையில் நின்று வாக்குப்பதிவு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Lok Sabha Election LIVE : தூத்துக்குடியில் போலீஸ் வேன் கண்ணாடி உடைப்பு - பெரும் பதற்றம்
TN Lok Sabha Election LIVE : தூத்துக்குடியில் போலீஸ் வேன் கண்ணாடி உடைப்பு - பெரும் பதற்றம்
TVK Vijay Vote: சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கூட்டத்துக்குள் நீந்திச்சென்று வாக்களித்த தவெக தலைவர் விஜய்!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Watch Video: பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி- சுவாரஸ்ய வீடியோ!
Lok Sabha Election 2024: மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
மக்களே.. சோஷியல் மீடியாவுல போஸ்ட் போட்டது போதும்..! களத்துக்கு போய் ஓட்டு போடுங்க..!
Nainar Nagendran: தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
தர்மத்திற்கும், அதர்மத்திற்குமான போட்டி மகாபாரத போரை போல நன்மையிலேயே முடியும் - நயினார் நாகேந்திரன்
Manipur Firing: மணிப்பூரில் வாக்குப்பதிவு நடக்கும் நாளில் வன்முறை.. வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு!
மணிப்பூரில் வாக்குப்பதிவு நடக்கும் நாளில் வன்முறை.. வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு!
Tamil Nadu Election 2024: இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் - ஜோதிமணி நம்பிக்கை
TN Lok Sabha Election: சேலத்தில் சோகம்.. வாக்கு செலுத்த வந்த 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு
சேலத்தில் சோகம்.. வாக்கு செலுத்த வந்த 2 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Embed widget