மேலும் அறிய

Crime : தண்ணீர் குடித்த பட்டியலினப் பெண்.. கோமியத்தால் சுத்தம் செய்யப்பட்ட தொட்டி.. தொடரும் தீண்டாமை கொடூரம்..

பட்டியலினப் பெண், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் சேமிப்பு தொட்டியில் இருந்து தண்ணீரை குடித்ததால் தொட்டியை சுத்தம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது

பட்டியலினப் பெண், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் சேமிப்பு தொட்டியில் இருந்து தண்ணீரை குடித்ததால் தொட்டியை சுத்தம் செய்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வேறொரு இடத்தைச் சேர்ந்த பட்டியலினப் பெண், ஹெக்கடோரா கிராமத்திற்கு வந்து, ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் சேமிப்பு தொட்டியில் இருந்து தண்ணீர் குடித்தார். இதனால் அந்த பகுதியை சேர்ந்த ஒரு சில ஆதிக்க சாதியின கிராம மக்கள் பொது சேமிப்பு தொட்டியில் இருந்து குடிநீரை வெளியேற்றிவிட்டு, மாட்டு சிறுநீரைக் கொண்டு "சுத்திகரித்தனர்" என தகவல் வெளியாகியுள்ளது

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, தாசில்தார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். “கடந்த வெள்ளிக்கிழமை, அந்த  கிராமத்தில் பட்டியலின சமூகத்தில் ஒரு திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்து கொள்ள ஹெச்.டி.கோட்டிலிருந்து பெண் ஒருவர் வந்தார். பொதுத் தொட்டியில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு அவசரமாக பேருந்தில் ஏறினார். கிராம மக்கள் விரைந்து அந்த பெண்ணை மிகத்தவறான வார்த்தைகளால் திட்டி, தொட்டியை சுத்தப்படுத்த முடிவு செய்தனர்” என்று சம்பவ இடத்தை சேர்ந்த ஒருவர் கூறினார். வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம கணக்கர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து சம்பவத்தை உறுதி செய்தனர். பின்னர் அதிகாரிகள் தாசில்தாரிடம் அறிக்கை அளித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை தாசில்தார் ஐ.இ.பசவராஜு மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் தேக்க தொட்டி பொது சொத்து என்றும், அதில் உள்ள தண்ணீரை அனைவரும் குடிக்கலாம் என்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் தெரிவித்தனர். தாசில்தார் 20 பட்டியலின இளைஞர்களை கிராமத்தில் உள்ள அனைத்து பொது குடிநீர் குழாய்களுக்கும் அழைத்துச் சென்று தண்ணீர் குடிக்க வைத்தனர்.  “சமூக நலத் துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து புகாரைப் பதிவுசெய்ய முயன்று வருகின்றனர். சாமராஜநகர் ஊரக காவல் நிலையத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்” என்று தாசில்தார் பசவராஜு கூறினார்.

மேலும் டொட்டியை சுத்தம் செய்ததை நேரில் கண்ட சாட்சிகள் உறுதிப்படுத்தினர். விரைவில் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து, காவல்துறையில் புகார் அளித்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

இச்சம்பவம் குறித்து பதிலளித்த சாமராஜநகர மாவட்டப் பொறுப்பாளர் வி.சோமண்ணா, இதுபோன்ற பாரபட்சத்தை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
தொப்புள் கொடியோடு சாலையோரம் வீசப்பட்ட குழந்தை; வாணியம்பாடியில் நெஞ்சைப் பதறவைக்கும் கொடூரம்
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்...
அதிகாரிகள் தில்லுமுல்லு..! புதிய அரசுக்கு ஒரு வாரம் டைம்..." கிராம மக்கள் விடுத்த அதிரடி கெடு! 
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மணல்மேடு வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: அண்ணன், தம்பிக்கு நேர்ந்த கதி!
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?
மயிலாடுதுறையில் பரபரப்பு: கடைவீதியில் எஸ்பி தலைமையில் திடீரென நுழைந்த போலீஸ் படை - பின்னணி என்ன?

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget