மேலும் அறிய

காதலிக்க மறுத்த பெண்; கதையை முடித்து தானும் தற்கொலை: பெங்களூருவில் சம்பவம் செய்த தமிழ் இளைஞர்!

பெங்களூரு அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்தி படுகொலை செய்த தமிழக வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

காதலிக்க மறுத்தால் ஆசிட் வீசுவது அதிகரித்தது, பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லும் சம்பவங்கள் அதிகரித்தது, தற்போது கத்தியால் குத்தி கொல்லும் சம்பவங்களும் மக்களிடையே பெரும் அச்சத்தை கிளப்பி வருகிறது. காரைக்கால் வினோதினி, சென்னை வித்யா, சோனியா தொடங்கி இப்போது வேளச்சேரி இந்துஜா வரை ஒரு தலைக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன. 2012ல் வெளிவந்த ஒரு சினிமாவில் ஒருதலை காதலால் பெண்ணைப் பழிவாங்க ஆசிட்டை ஒரு ஆயுதமாக தேர்வு செய்யப்பட்டிருக்கும். அந்த வருடத்தில் வினோதினி, வித்யா உள்ளிட்ட பெண்கள் மீது ஒரு தலைக்காதல் காரணமாக ஆசிட் வீச்சு நடந்தது. கடந்த காலங்களில் பல பெண்கள் ஒருதாலை காதலுக்கு பலியாகினர். கடந்த ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் கடந்த ஜூன் 24ம் தேதியன்று பணிக்கு செல்வதற்காக காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்த சுவாதியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிய மர்ம நபரை ஜூலை 1ம் தேதி இரவு கைது செய்ததாகவும், புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் செப்டம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டதாகவும், வழக்கு முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.

காதலிக்க மறுத்த பெண்; கதையை முடித்து தானும் தற்கொலை: பெங்களூருவில் சம்பவம் செய்த தமிழ் இளைஞர்!

தற்போது கர்நாடக மாநிலத்தில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் கன்னடா மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயதாகும் உஷா, பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 30 வயதாகும் கோபாலகிருஷ்ணா என்பவரும் வேலை பார்த்து வந்து இருக்கிறார். இந்தநிலையில் உஷாவும், கோபாலகிருஷ்ணாவும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். அப்போது உஷாவை, கோபாலகிருஷ்ணா ஒரு தலையாக காதலிக்க தொடங்கினார். ஒரு கட்டத்தில் உஷாவிடம், கோபாலகிருஷ்ணா தனது காதலை தெரிவித்த நிலையில், தான் வேறு ஒருவரை காதலித்து வருவதாகவும், அதனால் இனிமேல் தன்னை இந்த விஷயமாக தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் உஷா கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் உஷாவை, கோபாலகிருஷ்ணா சந்தித்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி உள்ளார். 

காதலிக்க மறுத்த பெண்; கதையை முடித்து தானும் தற்கொலை: பெங்களூருவில் சம்பவம் செய்த தமிழ் இளைஞர்!

ஆனால் அதற்கு உஷா எதிர்ப்பு தெரிவித்து அவர் காதலை மறுத்துள்ளார். தன் காதலை ஏற்காததால் கடும் கோபமடைந்த கோபாலகிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உஷாவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த உஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து கோபால கிருஷ்ணா தனது இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்று ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். அங்கு பலியாகி கிடந்த உஷாவின் உடலை மீட்டனர். பின்னர் தற்கொலை செய்துகொண்ட கோபாலகிருஷ்னா உடலையும் மீட்டுள்ளனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியினர் இடையே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
மும்பையிலிருந்து கடத்தல்: தாம்பரத்தில் போதை மாத்திரை விற்ற 4 பேர் கும்பல் அதிரடி கைது!
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget