மேலும் அறிய

திருடர்களை ஆட்டோவில் துரத்திப்பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநருக்கு எஸ்.பி பாராட்டு..

அகமது பாட்ஷா மற்றும் பக்தவச்சலம் என்ற இரண்டு திருடர்களும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப் பட்டனர்.

சேலம் அம்மாப்பேட்டை அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவரிடம் செல்போன் பறிக்க முயற்சி நடந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் தப்பிய இருவரை துரத்திச்சென்று பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநரை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் நேரில் அழைத்து பாராட்டினார்.

திருடர்களை ஆட்டோவில் துரத்திப்பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநருக்கு எஸ்.பி பாராட்டு..
சேலம் மாவட்டம் நாம மலை அடிவாரம் பேருந்து நிறுத்தத்தில் கடந்த 28-ஆம் தேதி காலை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர்  அத்த நபரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் செல்போன் கீழே விழுந்ததால் உடனடியாக அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அருகில் இருந்து கவனித்த ஆட்டோ ஓட்டுனர் தங்கதுரை, உடனடியாக தனது ஆட்டோவில் துரத்திச்சென்று கொள்ளையர்களின் இருசக்கர வாகனத்தில் மோதி, அவர்களை கீழே தள்ளிவிட்டு அவர்களில் ஒருவரை பிடித்துள்ளார். மற்றொருவர் தப்பி ஓட முயன்றபோது அங்கிருந்த பொதுமக்கள் அவரை மடக்கிப்பிடித்தனர்.

திருடர்களை ஆட்டோவில் துரத்திப்பிடித்த மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநருக்கு எஸ்.பி பாராட்டு..

இருவரும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் அம்மாபேட்டை அருகிலுள்ள பச்சப்பட்டி பகுதியை சேர்ந்த அகமது பாட்ஷா மற்றும் பக்தவச்சலம் என்பது தெரியவந்தது. பிடிபட்ட நபர்களிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சில்லரை காசுகள் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் மீது, ஏற்கனவே செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்களை விரட்டிப்பிடித்த ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரை காலில் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி. அவரது செயலை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினர். 

ஆட்டோ ஓட்டுனர் தங்கதுரை கூறுகையில், தான் மலை பகுதியிலுள்ள கோவிலுக்கு வாரம் தோறும் சென்று வருவதாகவும், அன்று பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வருடம் செல்போன் பறிக்க முயற்சித்ததால் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர், எனவே உடனடியாக ஆட்டோவை எடுத்துக்கொண்டு அவர்களே பின் தொடர்ந்து துரத்திச்சென்று திருடர்களின் வாகனத்தை ஆட்டோவை கொண்டு இடித்து மடக்கிப் பிடித்ததாக கூறினார். 

செய்தியை அறிந்த சேலம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், கொள்ளையர்களை விரட்டிச்சென்று பிடித்த ஆட்டோ ஓட்டுநர் தங்கதுரையை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டி வெகுமதி வழங்கினார். ஆட்டோ ஓட்டுனர் துணிச்சலுடன் திருடர்களை மடக்கிப் பிடித்துள்ளார் என்பதால் பலர் ஆட்டோ ஓட்டுனர் தங்கதுரையை பாராட்டி வருகின்றனர்.

அகமது பாட்ஷா மற்றும் பக்தவச்சலம் என்ற இரண்டு திருடர்களும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். திருடர்களிடமிருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டதால் வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?
​9 வாரிசுகளை மறைத்துப் பத்திரப்பதிவு: விவசாயியின் நிலத்தை ஆட்டையைப் போடப் பார்த்த நபர் சிக்கியது எப்படி?

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
Embed widget