மேலும் அறிய

தாய், மகனை கடத்தி சொத்தை அபகரிக்க முயற்சி - 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

1.50 லட்சம் ரூபாயை கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பி செலுத்திய நிலையில் நிலத்தின் பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் அபகரிக்கும் நோக்கில் தாய், மகனை கடத்தியது விசாரணையில் அம்பலம்

சேலம் அருகே சொத்தை அபகரிக்கும் பொருட்டு தாய் மற்றும் மகனை கடத்தி துன்புறுத்திய வழக்கில் 5 பேருக்கு 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஆயுள் தண்டனை விதித்து சேலம் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய், மகனை கடத்தி சொத்தை அபகரிக்க முயற்சி - 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள மேல் அழகாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த மேட்டூர் நீதிமன்ற முன்னாள் ஊழியரான கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் தனது நிலப்பத்திரத்தை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார். வட்டியுடன் சேர்த்து கடனாக பெற்ற ரூபாய் 1.50 லட்சம் ரூபாயை கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பி செலுத்தப்பட்ட நிலையில் நிலத்தின் பத்திரத்தை திருப்பி கொடுக்காமல் அபகரிக்கும் நோக்கில் நிலத்தின் உரிமையாளர் அசோக் குமார் மற்றும் அவரது தாயார் ஆகியோரை கிருஷ்ணமூர்த்தி கடத்தி அடித்து துன்புறுத்தியதாக கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்காடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தாய், மகனை கடத்தி சொத்தை அபகரிக்க முயற்சி - 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

ஆள் கடத்தல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் கலைவாணன், சக்திவேல், ராஜா, சுபேஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சேலம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு விசாரணையையும் கேட்ட நீதிபதி ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஐந்து பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 1,000 அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, வழக்கில் தண்டனை பெற்ற சக்திவேல் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்திற்கு மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டு உடனடியாக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், கிருஷ்ணமூர்த்தி, கலை வாணன், ராஜா மற்றும் சுபேஸ் ஆகிய நான்கு பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

தாய், மகனை கடத்தி சொத்தை அபகரிக்க முயற்சி - 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் 5 பேரும் தண்டிக்கப்பட்ட தால் பாதிக்கப்பட்ட அசோக் குமார் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget