மேலும் அறிய

Pocso On Sivashankar | சுஷில் ஹரி ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு..!

சிவசங்கர் பாபா வழக்கில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் திட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளராக இருந்து வந்த சிவசங்கர் பாபா ,அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கு கடந்த 13-ஆம் தேதி ,சென்னை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. முன்னாள் மாணவிகள் பலர் புகார் அளித்த நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லியில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ,சிறையில் அடைக்கப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட, சிவசங்கர் பாபாவிற்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டதை, தொடர்ந்து சிவசங்கர் பாபா தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்த சிவசங்கர் பாபா சிகிச்சையில் இருந்து நலம் பெற்ற பிறகு சிவசங்கர் பாபாவை புழல் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவசங்கர் பாபாவிடம் இருந்து பல திடுக்கிடும் வாக்குமூலங்களை சிபிசிஐடி போலீசார் பெற்றிருந்தனர்.

Pocso On Sivashankar | சுஷில் ஹரி  ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு..!

இந்நிலையில் சிவசங்கர் பாபா மூன்று மாணவிகள் கொடுக்கப்பட்ட புகார்களை போக்சோ வழக்காக பதிவு செய்வதற்காக சட்ட வல்லுநர்களுடன் சிபிசிஐடி ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா அளித்த வாக்குமூலம் மற்றும் சட்ட வல்லுனர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது போக்சோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 முன்னாள் மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், 3 போக்சோ வழக்கு போடப்பட்டு தற்பொழுது சென்னை நீதிமன்ற சிறை காவலில் சிவசங்கர் பாபா இருந்துவருகிறார்.

அதேபோல் சிவசங்கர் பாபாவிற்கு உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர் . இதில்  முன்னாள் மாணவி மற்றும் பள்ளியில் ஆசிரியரான சுஷ்மிதா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இதனையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தனர்.

Pocso On Sivashankar | சுஷில் ஹரி  ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு..!

இந்நிலையில் சென்னை சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவின் வழக்கில் பல்வேறு ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பள்ளியில் இருக்கும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக மூன்று ஆசிரியர்கள் உட்பட ஐந்து நபர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். சம்மன் அனுப்புவதற்கான பணிகளை தற்போது சிபிசிஐடி போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு அவர்களிடம் சிபிசி ஏறினார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE:  கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Breaking News LIVE: கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!Jagan Mohan Reddy joins Congress : DK சிவகுமாருடன் ரகசிய ஆலோசனை?காங்கிரஸில் இணையும் ஜெகன்!Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தெற்கில் இருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்" - ஸ்டாலினுக்கு நன்றி கூறிய ராகுல் காந்தி!
Breaking News LIVE:  கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Breaking News LIVE: கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Paris 2024 Olympics: ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையில் களம்.. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு..!
Stock Market: ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; 620 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Jobs: பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
பிளஸ் 2 தேர்ச்சி போதும்; சென்னை இளைஞர்‌ நீதி குழுமத்தில்‌ வேலை- விண்ணப்பிப்பது எப்படி?
S S Rajamouli : ஆஸ்கர் விருதுக்குழுவில்  உறுப்பினராக இணைந்த இயக்குநர் ராஜமொளலி..
S S Rajamouli : ஆஸ்கர் விருதுக்குழுவில் உறுப்பினராக இணைந்த இயக்குநர் ராஜமொளலி..
"எமர்ஜென்சி பற்றி இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வது முக்கியம்" - பிரதமர் மோடி!
Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: 29 பேர் போட்டி!
Embed widget