மேலும் அறிய

பெற்றோருக்கு பணத்தாசை காட்டி குழதை தொழிலாளிகளாக மாற்றிய 4 இடைத்தரகர்கள் கைது...!

ஜவ்வாது மலையில் வாழ் மக்களிடையே பணத்தாசையை காட்டி பள்ளி மாணவ மாணவிகளை குழந்தை தொழிலாளர்களாக மாற்றி வந்த 4 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் ஒன்றாக திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. பெற்றோர்களின் அறியாமை, பெற்றோரின் பேராசை, குடும்பத்தின் வறுமை, முதலாளியின் மனிதநேயமின்மை மற்றும் பெற்றோரின் தியாக மனப்பான்மை அற்ற செயல் ஆகிய காரணங்களால் அதிகப்படியான குழந்தைகள் கல்வியை தொடர முடியாமல் தொழிலாளர்களாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வசிக்கின்றனர். கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொது முடக்கத்தால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், வறுமையில் இருக்கும் குடும்பங்களில் வசிக்கும் குழந்தைகளை கண்டறிந்து, மாணவ, மாணவிகளை வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு அனுப்பும் வேலையை சில இடைத்தரகர்கள் செய்து வருகின்றனர்.  

இதற்காக சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து  ஏராளமான இடைத்தரகர்கள் அடிக்கடி ஜவ்வாதுமலைக்கு வருகின்றனர் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த இடைத்தரகர்கள், வறுமையில் வாடும் பெற்றோரை கண்டறிந்து அவர்களுக்கு பண ஆசை காட்டி குறிப்பிட்ட தொகையை கொடுத்து 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பருத்தித்தோட்டம், மரவள்ளிக்கிழங்கு பிடுங்குதல், கடைகள் மற்றும் பனியன் கம்பெனிகளுக்கு குழந்தை தொழிலாளர்களாக அனுப்பி வைப்பதாகத் தெரியவந்துள்ளது.

 

பெற்றோருக்கு பணத்தாசை காட்டி குழதை தொழிலாளிகளாக மாற்றிய 4 இடைத்தரகர்கள் கைது...!

 

ஜவ்வாதுமலை கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்களை கணவன், மனைவி உள்பட 4 இடைத்தரகர்கள் கடத்தி செல்வதாகவும் அதே பகுதியைச் சேர்ந்த 3 பெண் குழந்தைகளை ஈரோடு அருகில் உள்ள தனியார் பனியன் கம்பெனிக்கு கடத்தி செல்வதாகவும் புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்றன. அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சைல்டு லைன் அமைப்பினர் ஜமுனாமரத்தூருக்கு விரைந்தனர். அவர்கள் பேருந்து நிலையத்தில் சோதனை நடத்தியபோது 7 குழந்தை தொழிலாளர்களுடன் நின்றிருந்த தம்பதி உள்பட 4 இடைத்தரகர்களை அவர்கள் மடக்கிப்பிடித்து, ஜமுனாமரத்தூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பெற்றோருக்கு பணத்தாசை காட்டி குழதை தொழிலாளிகளாக மாற்றிய 4 இடைத்தரகர்கள் கைது...!

காவல்துறையினர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் வெங்கலாபுரத்தைச் சேர்ந்த ஹரி (46), அவரின் மனைவி கற்பகம் வயது (32), சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (41), பெரம்பலூர் மாவட்டம் பாதாங்கி கிராமத்தைச் சேர்ந்த அழகுவேல் (40) ஆகியோர் என்பதும் இவர்கள் சிறுவர்களை கடத்தி சென்று குழந்தை தொழிலாளர்களாக பருத்தித்தோட்டம், பனியன் கம்பெனி ஆகியவற்றில் வேலைக்குச் சேர்க்கும் இடைத்தரகர்களாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். கடத்தப்பட்ட 7 குழந்தைகளை மீட்டு காவல்துறையினர் மற்றும் சைல்டு லைன் அமைப்பினர் அவர்களின் பெற்றோரிடம் சிறுவர்களை ஒப்படைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget