மயிலாடுதுறை நகரில் அனுமதியின்றி செயல்பட்ட 3 பார்களுக்கு சீல்
மயிலாடுதுறையில் 3 இடங்களில் அனுமதி இன்றி இயங்கிய மதுபான பார்களுக்கு சீல் வைத்து டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை

மயிலாடுதுறை நகரில் அரசு அனுமதி இன்றி பல மதுபான பார்கள் இயங்கி வருகிறது. அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும் உரிமம் வாங்காமல் பார் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளர் வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் மயிலாடுதுறை காவல்துறையினர் மயிலாடுதுறையில் உள்ள மதுபான பார்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி செயல்பட்டு வந்த பார்களுக்கு சீல் வைத்துள்ளனர்.

10.5% உள் ஒதுக்கீடு செல்லாது - பலன் பெற்றவர்களின் நிலைமை என்ன..? கேள்வி எழுப்பும் பயனர்கள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 102 அரசு மாதுபான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மயிலாடுதுறை நகர் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அனுமதி பெற்ற மதுபான பார் போன்று அனுமதி இல்லாமல் 3 டாஸ்மாக் கடைகளில் பார்கள் திருட்டுத்னமாக செயல்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் முன்னதாக அதிகாரிகள் சோதனைக்கு வரும் தகவலை அறிந்த உரிமம் இன்றி மதுபான பார் நடத்தியவர்கள் தப்பி சென்றுள்ளார்.

மதுரைகிளை அளித்த அனைத்து கருத்தும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை : மூத்த வழக்கறிஞர் வில்சன்
இதனை தொடர்ந்து அங்குள்ள மது அருந்த திரண்டிருந்த ஏராளமான குடிமகன்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி மதுபான பாரை இழுததுப் பூட்டி சீல் வைத்தனர். மயிலாடுதுறை பேருந்து நிலையம், மயிலாடுதுறை மகாதானத்தெரு மற்றும் மயிலாடுதுறை கூறைநாடு டாஸ்மாக் கடைகளில் நடைபெற்ற சோதனையில் அனுமதியில்லாமல் பார் நடத்திவந்ததும், ஏற்கனவே இந்த பார்களுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததும், வழியை வேறுபக்கம் மாற்றி பாரை வழக்கம் போல் நடத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், அரசு மதுபான கடைகளை குறைக்க வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில், சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமல் மதுபான பார்கள் நடைபெற்று வருவதாகவும், இது அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும் தெரிந்தும் அவர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு தொடர்ந்து அனுமதி இல்லாமல் பார்வைகளை செயல்பட அனுமதித்து வருகின்றனர் என்றும் இதனை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்























