மேலும் அறிய

ஹெட் மசாஜ் செய்ய சென்ற 16 வயது சிறுமி: சிலுமிஷம் செய்த சலூன் கடைக்காரர் - சிக்கியது எப்படி?

டெல்லியில் சிறுமியிடம் சிலுமிஷம் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் சிறுமியிடம் சிலுமிஷம் செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லி குருகிராம் பகுதியைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் ஒருவர் தன் கடையில் தலை மசாஜ் செய்துகொள்ள வந்த 16 வயது சிறுமியை தவறான முறையில் சீண்டியுள்ளார்.

அப்போது பயத்தில் அமைதியாக இருந்துவிட்ட சிறுமி பின்னர் வீட்டுக்குச் சென்றதும் தன் தாயிடம் நடந்ததைச் சொல்லி புலம்பியுள்ளார். உடனே சிறுமியின் பெற்றோர் சலூன் கடைக்குச் சென்று சண்டையிட்டுள்ளனர். அப்போது அந்த நபர் உண்மையை ஒப்புக்கொள்ளவில்லை. பின்னர் அவர்கள் போலீஸில் புகார் கொடுத்தனர். போலீஸார் அந்த நபரை கைது செய்துள்ளனர். அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்சோ சட்டத்தின் பொது அம்சங்கள்:

18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்,வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும்.  இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.

மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

குழந்தையின் நலனே பிரதானமாக கொண்டுள்ள போக்சோ சட்டம்

வழக்கின் துவக்கத்திலிருந்து இறுதி வரை - புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விசாரணை, வாக்கு மூலம் பதிவு, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் - பாதிக்கப் பட்ட குழந்தைகளின் நலன் மையமாக இருக்க வேண்டும்.  அதுதான் மிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய அம்சம் என்று இச்சட்டம் கூறுகிறது. உதாரணமாக, பாதிக்கப்பட்ட சிறுமி,சிறுவரின் சாட்சியம் அவர்களின் வீட்டிலோ அல்லது அவர்கள் விரும்புகிற இடத்திலோ தான் பதிவு செய்யப் பட வேண்டும். துணை ஆய்வாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பொறுப்பில் உள்ள பெண் காவல் அதிகாரி தான் பதிவு செய்ய வேண்டும்.  அப்போது காவலர் சீருடையில் அந்த அதிகாரி இருக்கக் கூடாது. இரவு நேரத்தில், அவர்களைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொள்ளக் கூடாது.

குழந்தை எதை எப்படி சொல்லுகிறதோ, அதை அப்படியே அந்த வார்த்தைகளில் பதிவுசெய்ய வேண்டும். மாற்றுத்திறனாளி என்றால், குழந்தை பேசுவதைப் புரிந்து கொண்டு எடுத்துச் சொல்ல சைகை மொழி பேசுபவர் அல்லது குழந்தையின் பெற்றோர், உறவினரின் உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.மருத்துவப் பரிசோதனை, பெற்றோர்,உற்றோரின் முன்னிலையில் செய்யப் பட வேண்டும். பெண் குழந்தை என்றால், பெண் மருத்துவர் செய்ய வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை அளிக்க நேர்கிறபோது, மருத்துவர்கள் காவல் துறை அல்லது நீதி துறையின் உத்தரவைக் கோரக் கூடாது.

வழக்கு நடக்கும்போது, அடிக்கடி குழந்தை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் ஒதுக்க வேண்டும்.விசாரணையோ, வழக்கோ, வாக்கு மூலமோ பாதிக்கப்பட்ட சிறுமி/சிறுவரைத் திரும்ப திரும்ப நடந்ததைச் சொல்ல வற்புறுத்தக்கூடாது. குறுக்கு விசாரணை என்ற பெயரில் சங்கடப்படுத்தும் கேள்விகள் அல்லது நடத்தையை சந்தேகிக்கும் கேள்விகளைக் கேட்கக் கூடாது. என பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனை பிரதானமாக கொண்டுள்ள போக்சோ சட்டம்.
 

தலைப்பு செய்திகள்

Chennai: பணப் பிரச்னை.. இன்ஸ்பெக்டர் மீது புகார்.. 24 மணி நேரத்தில் இளைஞர் கொலை.. சென்னையில் பயங்கரம்!
Chennai: பணப் பிரச்னை.. இன்ஸ்பெக்டர் மீது புகார்.. 24 மணி நேரத்தில் இளைஞர் கொலை.. சென்னையில் பயங்கரம்!
Instagram Reels மோகம்.. 3 - வது காதலியுடன் சிக்கிய பேருந்து டிரைவர் - சுற்றி வளைத்த மனைவிகள்
Instagram Reels மோகம்.. 3 - வது காதலியுடன் சிக்கிய பேருந்து டிரைவர் - சுற்றி வளைத்த மனைவிகள்
கள்ளக் காதலுக்கு இடையூறு !! 2 பிஞ்சுக் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற தாய்
கள்ளக் காதலுக்கு இடையூறு !! 2 பிஞ்சுக் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக் கொன்ற தாய்
நள்ளிரவில் மாஸ் பிளான் போட்ட 3 இளம் பெண்கள் !! ரூ. 2 லட்சம் பொருட்கள் திருட்டு !!
நள்ளிரவில் மாஸ் பிளான் போட்ட 3 இளம் பெண்கள் !! ரூ. 2 லட்சம் பொருட்கள் திருட்டு !!

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - மிசா குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
வீட்ல சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? - மிசா குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்
TN Weather News: வடமாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு? சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
வடமாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு? சென்னை நிலவரம் - தமிழக வானிலை அறிக்கை
TN Railway Project: ஓசூர்- ஓமலூர் & சேலம் - கரூர்-திண்டுக்கல் - 384KM, ரூ.5,474 கோடி - அப்க்ரேடாகும் ரயில் பாதை - முழு விவரம்
ஓசூர்- ஓமலூர் & சேலம் - கரூர்-திண்டுக்கல் - 384KM, ரூ.5,474 கோடி - அப்க்ரேடாகும் ரயில் பாதை - முழு விவரம்
TVK Alliance Name: “மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
“மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி“ - தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் அறிவிப்பு
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
Vinayagar Chaturthi 2026: முதலமைச்சர் விஜய் கெட்டப்பில் விநாயகர் சிலை... விதவிதமாக வந்திறங்கிய பிள்ளையாரப்பா சிலைகள்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Embed widget