மேலும் அறிய

Crime: 2 குழந்தைகளை கொலை செய்த தந்தை; கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை - வெளிவரும் அதிர்ச்சி தகவல்

தகாத உறவுக்காதலி என கூறப்படும் பெண்ணை பிடித்து நெய்வேலியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவரோ, அசோக்குமாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி உள்ளார்.

சேலம்: கெங்கவல்லி அருகே 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்த நிலையில், மனைவிக்கும், இன்னொரு குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நெய்வேலியில் உள்ள அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு விஜயதாரணி, அருள்பிரகாஷினி, அருள்பிரகாசம் ஆகிய குழந்தைகள் இருந்தனர். அசோக்குமார் நெய்வேலியில் தங்கியிருந்து சரக்கு ஆட்டோ ஓட்டிவந்தார். அங்கேயே தங்கியிருந்தால் அப்பகுதியை சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மனைவி தவமணி, கணவரை கண்டித்துள்ளார். அதே நேரத்தில் மனைவி தவமணி மீதும் கணவர் அசோக்குமாருக்கு சந்தேகம் வந்தது. இது தொடர்பாக கணவன் மனைவியிடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் மகள் விஜயதாரணி, மகன் அருள்பிரகாசம் ஆகியோரை தந்தை அசோக் குமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். மனைவி தவமணி, இன்னொரு மகள் அருள்பிரகாஷினி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்த அசோக்குமார், அவரது தலையில் தனக்கு தானே வெட்டிக்கொண்டார். வீட்டிலிருந்த சற்று தூரத்தில் காயத்துடன் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். அப்போது வேறு ஒருவர் வெட்டிக்கொன்று விட்டதாக கூறி நாடகமாடும் வகையில் தலையில் அவருக்கு தானே வெட்டி கொண்டது தெரியவந்தது.

இதில் பலத்தகாயத்துடன் மனைவி தவமணி, மகள் அருள்பிரகாஷினி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் தலையில் காயத்துடன் அசோக்குமாரும் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறிய நிலையில், கெங்கவல்லி காவல்துறையினர் கடந்த வியாழக்கிழமை அவரை கைது செய்தானர். இதையடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனை டாக்டரிடம் அசோக் குமாரை அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு கூறினார். இதையடுத்து மீண்டும் அசோக்குமாரை போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அசோக்குமாரின் தகாத உறவுக்காதலி என கூறப்படும் பெண்ணை பிடித்து நெய்வேலியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவரோ, அசோக்குமாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி உள்ளார். தொடர் விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வரும் தவமணி கண் விழித்து பேசினால்தான் நடந்தது என்ன? என்ற முழு விவரமும் தெரியவரும்.

தலைப்பு செய்திகள்

கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
கண் தெரியாத தாயை எட்டி உதைத்த கொடூர மகன்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் - நடந்தது என்ன?
" இன்ஸ்டாகிராம் தோழியை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்த வாலிபர் "
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
அப்பா வேலையை வாங்கிய அம்மா.. கூலிப்படையை ஏவி போட்டுத்தள்ளிய மகள்.. செம ஷாக்!
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget