மேலும் அறிய

Crime: 2 குழந்தைகளை கொலை செய்த தந்தை; கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை - வெளிவரும் அதிர்ச்சி தகவல்

தகாத உறவுக்காதலி என கூறப்படும் பெண்ணை பிடித்து நெய்வேலியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவரோ, அசோக்குமாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி உள்ளார்.

சேலம்: கெங்கவல்லி அருகே 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்த நிலையில், மனைவிக்கும், இன்னொரு குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நெய்வேலியில் உள்ள அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு விஜயதாரணி, அருள்பிரகாஷினி, அருள்பிரகாசம் ஆகிய குழந்தைகள் இருந்தனர். அசோக்குமார் நெய்வேலியில் தங்கியிருந்து சரக்கு ஆட்டோ ஓட்டிவந்தார். அங்கேயே தங்கியிருந்தால் அப்பகுதியை சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மனைவி தவமணி, கணவரை கண்டித்துள்ளார். அதே நேரத்தில் மனைவி தவமணி மீதும் கணவர் அசோக்குமாருக்கு சந்தேகம் வந்தது. இது தொடர்பாக கணவன் மனைவியிடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் மகள் விஜயதாரணி, மகன் அருள்பிரகாசம் ஆகியோரை தந்தை அசோக் குமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். மனைவி தவமணி, இன்னொரு மகள் அருள்பிரகாஷினி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்த அசோக்குமார், அவரது தலையில் தனக்கு தானே வெட்டிக்கொண்டார். வீட்டிலிருந்த சற்று தூரத்தில் காயத்துடன் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். அப்போது வேறு ஒருவர் வெட்டிக்கொன்று விட்டதாக கூறி நாடகமாடும் வகையில் தலையில் அவருக்கு தானே வெட்டி கொண்டது தெரியவந்தது.

இதில் பலத்தகாயத்துடன் மனைவி தவமணி, மகள் அருள்பிரகாஷினி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் தலையில் காயத்துடன் அசோக்குமாரும் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறிய நிலையில், கெங்கவல்லி காவல்துறையினர் கடந்த வியாழக்கிழமை அவரை கைது செய்தானர். இதையடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனை டாக்டரிடம் அசோக் குமாரை அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு கூறினார். இதையடுத்து மீண்டும் அசோக்குமாரை போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அசோக்குமாரின் தகாத உறவுக்காதலி என கூறப்படும் பெண்ணை பிடித்து நெய்வேலியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவரோ, அசோக்குமாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி உள்ளார். தொடர் விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வரும் தவமணி கண் விழித்து பேசினால்தான் நடந்தது என்ன? என்ற முழு விவரமும் தெரியவரும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
மதுரையில் 2 பள்ளி மாணவிகளை கடத்தி வழக்கு.. 4 பேருக்கு ஆயில் தண்டனை உறுதி செய்த உயர்நீதிமன்றம் !
Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
Salem: பள்ளிக்குள் ஆசிரியை வெட்டிக்கொலை.. குழந்தையுடன் கணவர் எடுத்த விபரீத முடிவு!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக்கொலை! கதறிய மாணவர்கள் - சேலத்தில் பயங்கரம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்கள் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
TN BJP Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம்; விவசாயிகளுக்கு ரூ.19 ஆயிரம்- வாக்குறுதிகளை அள்ளி வீசிய தமிழக பாஜக
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
’’இபிஎஸ்ஸை தரம் தாழ்ந்து விமர்சிக்கும் முதல்வர் ஸ்டாலின்; எங்களையும் பேச வச்சிடாதீங்க’’- அன்புமணி
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
USA Iran War: உரிமைய ஏத்துக்கங்க, இல்லைன்னா சண்டைக்கு வாங்க” - ஈரான் ”ஆபத்தானது” என சீனா வார்னிங்
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
Tata EV Car Offers: மின்சார கார்களுக்கு கோடைத் தள்ளுபடி! டாடாவின் எந்த EV காருக்கு எவ்ளோ ஆஃபர்?
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
CBSE 10th Result: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - டிஜிலாக்கரில் மார்க்‌ஷீட் டவுன்லோட் செய்வது எப்படி? APAAR ஐடி
Mahindra Thar Price Hike: தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
தார் SUV பிரியர்களுக்கு அதிர்ச்சி.! மீண்டும் விலையை உயர்த்திய மஹிந்திரா; அதுக்காக இவ்வளவா.?
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Annamalai: திமுக ஆட்சியில் 39,999 போக்சோ வழக்குகள்! தரவுகளை ரிலீஸ் செய்த அண்ணாமலை!
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
Anbumani: திமுகவுக்கு வன்னியர்கள், பட்டியலினத்தவர், முஸ்லிம்கள் வெறும் வாக்கு வங்கி மட்டும்தான்; சாடிய அன்புமணி
Embed widget