மேலும் அறிய

Crime: 2 குழந்தைகளை கொலை செய்த தந்தை; கள்ளக்காதலியிடம் போலீசார் விசாரணை - வெளிவரும் அதிர்ச்சி தகவல்

தகாத உறவுக்காதலி என கூறப்படும் பெண்ணை பிடித்து நெய்வேலியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவரோ, அசோக்குமாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி உள்ளார்.

சேலம்: கெங்கவல்லி அருகே 2 குழந்தைகளை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்த நிலையில், மனைவிக்கும், இன்னொரு குழந்தைக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நெய்வேலியில் உள்ள அவரது கள்ளக்காதலியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சி காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு விஜயதாரணி, அருள்பிரகாஷினி, அருள்பிரகாசம் ஆகிய குழந்தைகள் இருந்தனர். அசோக்குமார் நெய்வேலியில் தங்கியிருந்து சரக்கு ஆட்டோ ஓட்டிவந்தார். அங்கேயே தங்கியிருந்தால் அப்பகுதியை சேர்ந்த பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மனைவி தவமணி, கணவரை கண்டித்துள்ளார். அதே நேரத்தில் மனைவி தவமணி மீதும் கணவர் அசோக்குமாருக்கு சந்தேகம் வந்தது. இது தொடர்பாக கணவன் மனைவியிடயே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் மகள் விஜயதாரணி, மகன் அருள்பிரகாசம் ஆகியோரை தந்தை அசோக் குமார் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். மனைவி தவமணி, இன்னொரு மகள் அருள்பிரகாஷினி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. இவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக நினைத்த அசோக்குமார், அவரது தலையில் தனக்கு தானே வெட்டிக்கொண்டார். வீட்டிலிருந்த சற்று தூரத்தில் காயத்துடன் கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர். அப்போது வேறு ஒருவர் வெட்டிக்கொன்று விட்டதாக கூறி நாடகமாடும் வகையில் தலையில் அவருக்கு தானே வெட்டி கொண்டது தெரியவந்தது.

இதில் பலத்தகாயத்துடன் மனைவி தவமணி, மகள் அருள்பிரகாஷினி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் தலையில் காயத்துடன் அசோக்குமாரும் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல்நலம் தேறிய நிலையில், கெங்கவல்லி காவல்துறையினர் கடந்த வியாழக்கிழமை அவரை கைது செய்தானர். இதையடுத்து ஆத்தூர் அரசு மருத்துவமனை டாக்டரிடம் அசோக் குமாரை அழைத்து சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்குமாறு கூறினார். இதையடுத்து மீண்டும் அசோக்குமாரை போலீசார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அசோக்குமாரின் தகாத உறவுக்காதலி என கூறப்படும் பெண்ணை பிடித்து நெய்வேலியில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவரோ, அசோக்குமாருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறி உள்ளார். தொடர் விசாரணை நடந்து வருகிறது. அதே நேரத்தில் சிகிச்சை பெற்று வரும் தவமணி கண் விழித்து பேசினால்தான் நடந்தது என்ன? என்ற முழு விவரமும் தெரியவரும்.

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Embed widget