மேலும் அறிய

சட்டமன்ற தேர்தல் 2026

(Source:  Poll of Polls)

காட்டுக்குள் மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர்.! பறிபோன இரு உயிர்! சேலத்தில் சோகம்!

சேலம் அருகே காட்டுக்குள் மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர். கணவர் மீது மல்லூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பூபதி (25). இவரது மனைவி பார்வதி (36). கணவன் மனைவி இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு கஜேந்திரன் (3), பூமிகா (2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே மீண்டும் பார்வதி 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து கணவன், மனைவி இருவரும் கர்ப்பமாக இருப்பதை குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தெரியாமல் மறைத்து வந்துள்ளனர். 

காட்டுக்குள் மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர்.! பறிபோன இரு உயிர்! சேலத்தில் சோகம்!

இந்தநிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இருவரும் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் துர்கை அம்மன் கோவில் அருகில் உள்ள கரடு பகுதிக்கு வந்து உள்ளனர். அப்போது பார்வதிக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டு அங்கேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை இறந்து பிறந்ததை கண்ட கணவன்-மனைவி இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தை பிறந்ததை குடும்பத்தினரிடம் சொல்ல முடியாது என்பதால் இறந்துபோன குழந்தையை அங்கேயே புதைத்து விடலாம் என அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து பூபதி துர்க்கை அம்மன் கோவில் பின்புறம் ஒரு காட்டில் குழியைத் தோண்டி அதில் குழந்தையை புதைத்துள்ளார். இதனையடுத்து பார்வதி தனக்கு உடல்நிலை மிகவும் முடியவில்லை, தாகமாக உள்ளது? ஏதாவது குடிக்க வாங்கி வாருங்கள் என பூபதியிடம் கூறியுள்ளார். உடனடியாக பூபதி கடை பகுதிக்கு வந்து தண்ணீர் வாங்கிக் கொண்டு சென்று பார்வதிக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து சிறிது நேரத்தில் பார்வதியும் அங்கேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார். 

காட்டுக்குள் மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவர்.! பறிபோன இரு உயிர்! சேலத்தில் சோகம்!

இதனை கண்ட பூபதி திகைத்துப் போய் செய்வதறியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மல்லூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பார்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பூபதி புதைத்த குழந்தையின் உடலையும் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதை தொடர்ந்து பூபதியின் மீது கொலைக் குற்றம் ஆகாத, மரணம் விளைவிக்கும் குற்றத்தைப் புரிதல் மற்றும் பிறக்கும்போது அல்லது பிறந்த பின் மரணித்த குழந்தையை இரகசியமாகப் புதைத்தல் ஆகிய இரண்டு பிரிவு கீழ் வழக்குபதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். காட்டுக்குள் மனைவிக்குப் பிரசவம் பார்த்த கணவரால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பாத்திரம் தேய்க்க சொன்னதால் தற்கொலையா? - மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்; ஆங்கில ஆசிரியர் மீது பாயும் பாலியல் குற்றச்சாட்டு!
பாத்திரம் தேய்க்க சொன்னதால் தற்கொலையா? - மாணவியின் மரணத்தில் நீடிக்கும் மர்மம்; ஆங்கில ஆசிரியர் மீது பாயும் பாலியல் குற்றச்சாட்டு!
”காதலனோடு செட்டில் ஆகணும்” ரூ.45 லட்சத்தை சுருட்ட தத்தெடுத்து வளர்த்த தாயை கொன்ற 17 வயது மகள்
”காதலனோடு செட்டில் ஆகணும்” ரூ.45 லட்சத்தை சுருட்ட தத்தெடுத்து வளர்த்த தாயை கொன்ற 17 வயது மகள்
" தினமும் குடிச்சா உன் பொண்டாட்டி எப்படி வருவா " கேள்வி கேட்ட முதியவருக்கு நேர்ந்த கொடூரம்
ஸ்ரீபெரும்புதூரில் சோகம்: மூடி இல்லாத செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
ஸ்ரீபெரும்புதூரில் சோகம்: மூடி இல்லாத செப்டிக் டேங்கில் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kara Movie Review: தனுஷின் தோல்விக் கரையை நீக்கியதா ”கர” - விக்னேஷ் ராஜாவின் த்ரில்லர் படத்தின் விமர்சனம்
Kara Movie Review: தனுஷின் தோல்விக் கரையை நீக்கியதா ”கர” - விக்னேஷ் ராஜாவின் த்ரில்லர் படத்தின் விமர்சனம்
ICSE, ISC Result 2026: வெளியான தேர்வு முடிவுகள்; ஐசிஎஸ்இ, ஐஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை பார்ப்பது எப்படி?
ICSE, ISC Result 2026: வெளியான தேர்வு முடிவுகள்; ஐசிஎஸ்இ, ஐஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை பார்ப்பது எப்படி?
CBSE 12th Result 2026: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்போ? விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி? சர்ச்சைக்கு சிபிஎஸ்இ முற்றுப்புள்ளி!
CBSE 12th Result 2026: 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு எப்போ? விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி? சர்ச்சைக்கு சிபிஎஸ்இ முற்றுப்புள்ளி!
”காதலனோடு செட்டில் ஆகணும்” ரூ.45 லட்சத்தை சுருட்ட தத்தெடுத்து வளர்த்த தாயை கொன்ற 17 வயது மகள்
”காதலனோடு செட்டில் ஆகணும்” ரூ.45 லட்சத்தை சுருட்ட தத்தெடுத்து வளர்த்த தாயை கொன்ற 17 வயது மகள்
GOLD RATE TODAY : இன்றும் குறைந்ததா தங்கம், வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? விலை நிலவரம் இதோ...
இன்றும் குறைந்ததா தங்கம், வெள்ளி விலை.! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்டா.? விலை நிலவரம் இதோ...
Tamilnadu Round Up: விஜய் ஆலோசனை, எடப்பாடி சவால், வைகையில் இறங்கும் கள்ளழகர்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: விஜய் ஆலோசனை, எடப்பாடி சவால், வைகையில் இறங்கும் கள்ளழகர்- தமிழ்நாட்டில் இதுவரை
Exit Poll: இளசுங்க ஓகே..! அப்பா-அம்மா, மாமா-அத்தைகளை கவராத விஜய் - சாதி, சமூக வாக்குகளில் தவெக வின்னா?
Exit Poll: இளசுங்க ஓகே..! அப்பா-அம்மா, மாமா-அத்தைகளை கவராத விஜய் - சாதி, சமூக வாக்குகளில் தவெக வின்னா?
Exit Polls 2026: தமிழகத்தில் திமுக+, கேரளாவில் காங்., அசாமில் பாஜக - மே.வங்கம் யாருக்கு? கருத்து கணிப்புகள்
Exit Polls 2026: தமிழகத்தில் திமுக+, கேரளாவில் காங்., அசாமில் பாஜக - மே.வங்கம் யாருக்கு? கருத்து கணிப்புகள்
Embed widget