மேலும் அறிய

‛12 சதவீதம் லஞ்சம் கொடு... சாலை டெண்டரை எடு’ நெடுஞ்சாலைத்துறை லஞ்ச அதிகாரி கைது!

லஞ்ச ஒழிப்பு காவல்துறை வருவதை அறிந்த உடன் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத பணம் ரூ.81 ஆயிரத்தை ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்துள்ள ராணிப்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு உதவி கோட்ட பொறியாளராக சேலம் அயோத்தியாபட்டினம் இப்பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் தம்மம்பட்டி டூ தெடாவூர் சாலை விரிவாக்க பணிக்காக ரூ.7 கோடி மதிப்பீட்டு டெண்டர் விடப்பட்டது. இதனை சுந்தர்ராஜன் என்பவர் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்த நிலையில் ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்ய ஒப்பந்த தொகையிலிருந்து சுமார் 12 சதவீதம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். 

‛12 சதவீதம் லஞ்சம் கொடு... சாலை டெண்டரை எடு’ நெடுஞ்சாலைத்துறை லஞ்ச அதிகாரி கைது!

முதற்கட்டமாக சேலம் கோட்ட பொறியாளருக்கு 0.5 சதவீதம் கமிஷன் வழங்க வேண்டும் என்று கூறி, அதற்காக ரூ.3.53 லட்சத்தை கொண்டுவந்து கொடுக்குமாறு சந்திரசேகர் கூறியுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் சுந்தர்ராஜன் இதுகுறித்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் நேற்று பணத்தை எடுத்துக்கொண்டு ஆத்தூரில் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு சுந்தரராஜன் சென்றார். அங்கு அலுவலகத்தில் இருந்த சந்திரசேகரிடம் பணத்தை கொடுத்துள்ளார். அதனை சந்திரசேகர் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவலர்கள் உதவி பொறியாளர் சந்திரசேகர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து கணக்கில் வராத ரூ.3.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையிலான குழுவினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பணத்தை உயரதிகாரியாக சேலம் கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் என்பவருக்கும் கொடுப்பதற்காகவே கொண்டுவர சொன்னதாக சந்திரசேகரன் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சேலம் இரும்பாலை சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தச் சென்றனர். 

‛12 சதவீதம் லஞ்சம் கொடு... சாலை டெண்டரை எடு’ நெடுஞ்சாலைத்துறை லஞ்ச அதிகாரி கைது!

அப்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வருவதை அறிந்த உடன் அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத பணம் ரூ.81 ஆயிரத்தை ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளனர். ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையில் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத ரூ.81 ஆயிரத்தை ஜன்னல் வழியாக வீசியது தெரியவந்தது. இதையடுத்து அந்தப் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைப்பற்றினார். மேலும் அங்கிருந்த முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து சேலம் குரங்குச்சாவடி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கிருந்தும் கணக்கில் வராத பணம், முக்கிய ஆவணங்கள், லேப்டாப், பென் டிரைவ் மற்றும் சொத்து ஆவணங்கள் போன்றவற்றை கைப்பற்றியதாக தகவல் கிடைத்துள்ளது.

தலைப்பு செய்திகள்

சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கட்டிட தொழிலாளி மனைவியுடன் கள்ளக் காதல்...டீ மாஸ்டர் முகத்தை சிதைத்த கணவன் , ஆட்டோ டிரைவர்
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
கரண்டியால் சூடு , எலும்பு முறிவு !! சொந்த குழந்தைகளை கொடூரமாக சித்ரவதை செய்த தம்பதி
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!
உங்கள் வீட்டில் இந்த குடிநீர் இணைப்பு இருக்கா? உடனே துண்டித்துவிடுங்கள்.. இல்லைனா போலீஸ் வரும்!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Nissan Tekton Review: மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
மாஸா களமிறங்கியிருக்குற நிசானோட புதிய டெக்டான வாங்குறது ஒர்த்தா.? இதோ ஃபர்ஸ்ட் லுக் ரிவ்யூவ்
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
இனி சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் மூன்றாம் மொழி கட்டாயம்: வெளியான புதிய அறிவிப்பு
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
Embed widget