மேலும் அறிய

உயிருடன் இருக்கும் கணவர்.. மனைவி செய்த தில்லாலங்கடி வேலை - வசமா சிக்கியது எப்படி?

கணவர் பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை கணவர்தான் எனக்கூறி இறப்பு சான்றிதழ் பெற்றது அம்பலம்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ரேவதி. இவர், கடந்த 24.10.2024ம் தேதி இடைப்பாடி காவல்நிலையத்தில் தனது கணவர் விஜயகுமாரை காணவில்லை என புகார் தெரிவித்தார். இதன் பேரில், போலீசார் காணவில்லை என வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் கடந்த 2.11.2024ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் பவானி காவல்நிலையத்தில் சென்று ரேவதி, அடையாளம் தெரியாத நபர் புகைப்படத்தில் இருப்பது தனது கணவர் விஜயகுமார் என தெரிவித்தார். அதன் பேரில், பவானி போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு, அடையாளம் தெரியாத சடலத்தின் பிரேத பரிசோதனை சான்றினை வழங்கியுள்ளனர்.

உயிருடன் இருக்கும் கணவர்.. மனைவி செய்த தில்லாலங்கடி வேலை - வசமா சிக்கியது எப்படி?

இந்த பிரேத பரிசோதனை சான்றிதழை வைத்து ரேவதி இறப்பு சான்று பெற்றுள்ளார். தொடர்ந்து இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில், வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பரவேஸ் சுபையர் விசாரித்ததில், இறப்பு சான்றிதழ் பெறப்பட்ட விஜயகுமார் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று மாலை இடைப்பாடி தாலுகா அலுவலகத்திற்கு விஜயகுமார் மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகிய இருவரையும் நேரில் வரவழைத்து தாசில்தார் வைத்தியலிங்கம் விசாரணை நடத்தினார். 

மேலும், கணவன் உயிருடன் இருக்கும்போதே இறப்பு சான்றிதழ் பெற்று அதனை வைத்து வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து நூதன மோசடியில் ஈடுபட்ட ரேவதி மீது இடைப்பாடி போலீசில் விஏஓ புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து ரேவதியை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிருடன் இருக்கும் கணவர்.. மனைவி செய்த தில்லாலங்கடி வேலை - வசமா சிக்கியது எப்படி?

இதுகுறித்து போலீசார் கூறுகையில், விஜயகுமார் - ரேவதி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மலேசியாவில் பணியாற்றி வந்த விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். மேலும், பல்வேறு இடங்களில் கடன் வாங்கி செலவு செய்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்த விஜயகுமார் கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டார். இதனைத்தொடர்ந்து அவரை காணவில்லை என ரேவதி கொடுத்த புகாரின் பேரில், விசாரித்து வந்த நிலையில், பவானி பகுதியில் சடலமாக கிடந்தது தனது கணவன் தான் என தெரிவித்து சான்றிதழ் வாங்கியுள்ளார். விஜயகுமாருக்கு சொந்தமான சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றும் வகையில், அவர் உயிரோடு இருக்கும்போதே இறந்து விட்டதாக சித்தரித்து யாருக்கும் தெரியாமல் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். இதன்பேரில், வருவாய்த்துறையினர் நேரில் சென்று விசாரித்தபோது தான் விஜயகுமார் உயிரோடு இருப்பது தெரியவந்தது. வாரிசு சான்று கேட்டு ரேவதி விண்ணபித்தது குறித்து விஜயகுமாருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அவரை நேரில் அழைத்து விசாரித்ததில் ரேவதியின் திட்டம் அம்பலமானது. இதன் பேரில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
திருமண வீட்டில் பயங்கரம் ! முகமூடி கும்பல் புகுந்து அரிவாள் வெட்டு - தென்காசியில் பரபரப்பு
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
5 மாச ப்ளான், குடும்பத்தினர் 4 பேரை கொன்று எரித்த 17 வயது சிறுவன் - லைட்டா பிசிறு தட்டி சிக்கியது எப்படி?
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
சென்னை ; ஐடி பெண் ஊழியருக்கு ஆபாச படம் காட்டிய நபர் - Kavalan App-ஆல் அம்பலமான உண்மை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
”வள்ளூவருக்கு காவி பெயிண்ட்.. கொள்கை எதிரியை கேள்வி கேட்க ஏன் தயக்கம்..” முதல்வர் விஜயை விமர்சித்த உதயநிதி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
சேலம் எப்போதும் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டை: வாக்காளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
’’காசு வாங்கிட்டு எந்த சாமியும் சேவை செய்யச்சொல்லல’’- அனிதா ராதாகிருஷ்ணனுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி!
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
CUET UG Exam: நீட் தேர்வை தொடர்ந்து க்யூட் தேர்விலும் குளறுபடி; எதிர்பாராத பிரச்சினையால் தேர்வை மாற்றிய என்டிஏ 
Anitha Radhakrishnan: ”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”கோயிலில் ஆய்வு செய்வதா?” அமைச்சரின் சாதியை குறிப்பிட்டு அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
”PR பில்டப்-லாம் போதும் CM சார்” விஜயால் திமுகவுடன் கைகோர்த்த அதிமுக - தவெக மீது அட்டாக்
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
CM Vijay: அரசு ஊழியர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்; ஜூன் 1 முதல் ஃபேஸ் ஐடி/ பயோமெட்ரிக் கட்டாயம்!
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
TET: ஆசிரியர்கள் டெட் தேர்வு தேர்ச்சிக்கு அவகாசம் நீட்டிப்பு; தமிழக அரசு உடனே நிரந்தரத் தீர்வு காணுமா?
Embed widget