மேலும் அறிய

Crime: அதிர்ச்சி... 3 வயது குழந்தை கொடூர கொலை.. தாயின் கள்ளக்காதலன் கைது

சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் மாநகர் குகை பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (26) என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சண்முகப்பிரியா (25) இவர்களுக்கு வெற்றிவேல் (6), வெற்றிமாறன் (3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சண்முகப்பிரியாவுக்கும் பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்ட நிலையில் சண்முகப்பிரியா தனது இரண்டு குழந்தைகளுடன் கணவரை விட்டுவிட்டு தமிழரசன் உடன் குடும்பம் நடத்தி வருகிறார்.  

இதனிடையே மது போதையில் இருந்த தமிழரசன் மற்றும் சண்முகப்பிரியா இருவரும் சேர்ந்து மூன்று வயது சிறுவன் வெற்றிமாறன் அழுததால் ஆத்திரத்தில் இருந்த தமிழரசன் சிறுவனை கண்மூடித்தனமாக கொடூரமான முறையில் தாக்கியதாக மற்றொரு சிறுவனான வெற்றிவேல் கூறினார். இதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் உறவினர்கள் புகாரை அடுத்து தமிழரசன் மற்றும் சண்முகப்பிரியா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தமிழரசன் குழந்தையை தாக்கியது உறுதி செய்யப்பட நிலையில் உடனடியாக கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து, இன்றைய தினம் சிகிச்சையில் இருந்த மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உயிரிழந்தது. இதனால் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது குழந்தையின் தாயார் சண்முக பிரியாவிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர். 

இதனிடையே இது குறித்து பசுபதியின் சகோதரி கூறுகையில், எனது சகோதரன் பசுபதி மற்றும் சண்முகப்பிரியா திருமணம் செய்து கொண்டு அவ்வப்போது குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இருவரும் பிரிந்த நிலையில் பசுபதியின் இரண்டாவது மகன் வெற்றிமாறனை கடுமையாக தாக்கி தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருந்துள்ளார். பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளது. எனவே முதல் குழந்தையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார். 

இதுகுறித்து ஆறு வயது சிறுவன் வெற்றிவேல் கூறுகையில், எனது அப்பா தமிழ் எனது தம்பியை அடித்தார் என மழலை வார்த்தையில் பேசியது அருகில் இருந்தவர்களை கண்கலங்க செய்தது.

மூன்று வயது சிறுவனை தாயின் கள்ளக்காதலர் கொடூரமாக தாக்கி உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
Embed widget