மேலும் அறிய

Crime:சேலம் மத்திய சிறையில் கைதி ஆசனவாயில் பதுக்கி வைத்திருந்த செல்போன், கஞ்சா பறிமுதல்.

கடந்த மாதத்தில் மட்டும் சேலம் மத்திய சிறைச்சாலையில் ஆறு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சேலம் மத்திய சிறை அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை வாரத்தில் 5 நாட்கள் உறவினர்கள் சந்திக்க வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. விசாரணை கைதிகளை 3 நாட்களும், தண்டனை கைதிகளை 2 நாட்களும் பார்க்க முடியும். அப்போது அவர்களுக்கு தேவையான பழங்கள், பிஸ்கெட்டுகளை உறவினர்கள் வழங்குவார்கள்.

அதேநேரத்தில் முன்பு கைதிகளை உறவினர்கள் சிறைக்குள் பார்த்தாலும் 5 அடி தூரத்தில் கம்பி வலைக்கு பின்னால் நின்று தான் பார்க்க முடியும். அதுவும் கைதிகள் பேசுவது உறவினர்களுக்கும், உறவினர்கள் பேசுவது கைதிகளுக்கும் கேட்காது. மனு பார்க்கும் இடத்தில் ஒரே சத்தமாக இருக்கும். இந்ததுயரத்தை போக்கும் வகையில் இன்டர்காம் வசதி செய்து கொடுக்கப்பட்டது. மனு பார்க்கும் இடத்தில் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டே இன்டர்காம் மூலம் தெளிவாக பேசலாம். அதே போல வீடியோகால் மூலமும் குடும்பத்தினருடன் பேசும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

Crime:சேலம் மத்திய சிறையில் கைதி ஆசனவாயில் பதுக்கி வைத்திருந்த செல்போன், கஞ்சா பறிமுதல்.

இத்தனை வசதியையும் தாண்டி கைதிகள் ரகசியமாக செல்போன் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதிகாரிகளுக்கு தெரியாமல் இல்லை. சமீப காலமாக சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டு சிறைக்கு வரும் கைதிகள் ஆசன வாய் வழியாக செல்போனை கடத்தி வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அதுபோன்ற சம்பவம் 10 நாட்களில் மூன்றாவது முறையாக சேலம் மத்திய சிறையில் நடந்துள்ளது. கடந்த 24 ஆம் தேதி காலை 6 மணியளவில் குமரகுரு என்ற கைதியின் நடவடிக்கை வித்தியாசமாக இருந்துள்ளது. இதனால் சிறை வார்டன்கள் அவரை கண்காணித்தனர். அவர் காலை தூக்கி தூக்கி வித்தியாசமாக நடந்தார். அவரை தூக்கிகொண்டு சென்ற வார்டன்கள் ஜெயிலர் அறையில் வைத்து விசாரித்தனர். அப்போது அவர், ஆசனவாயில் செல்போனை வைத்திருப்பதாக தெரிவித்தார். இது குறித்து ஜெயிலர் மதிவாணனுக்கு தகவல் தெரிவித்து அவர் வரவழைக்கப்பட்டார். அவர் முன்னிலையில் உள்ளே இருந்த செல்போனை எடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கழிவறைக்கு தூக்கிச் சென்று எடுக்க வைத்தனர். முக்கால் மணி நேரத்திற்கு பிறகு கேரிபேக்கில் சுற்றப்பட்ட சிறிய செல்போன் ஒன்று வெளியே வந்தது.

Crime:சேலம் மத்திய சிறையில் கைதி ஆசனவாயில் பதுக்கி வைத்திருந்த செல்போன், கஞ்சா பறிமுதல்.

இந்த செல்போனை பத்திரமாக எடுத்து கழுவினர் தொடர் விசாரணையில் மதுரையை சேர்ந்த கொலை வழக்கு கைதி தன்னிடம் கொடுத்ததாகவும், அதனை பத்திரமாக ஆசனவாயில் வைக்குமாறு கூறியதாக அதிகாரிகளிடம் கைதி குமரகுரு தெரிவித்தார். இதையடுத்து கொலை வழக்கு கைதியை அதிகாரி ஒருவர் ரகசியமாக விசாரித்தார், இவ்வாறு செல்போன் பறிமுதல் செய்யப்படும்போது, அதனை கொடுத்தவருக்கும் தண்டனையாக ஒருமாதம் தனியறையில் அடைக்கப்படுவது வழக்கம். உறவினர்களையும் பார்க்க அனுமதி கிடையாது. இது சிறை விதியில் உள்ளது. ஆனால் கைதி குமரகுருவை மட்டும் தனியறையில் வைத்த அதிகாரிகள், கொலை வழக்கு கைதிக்கு தண்டனை ஏதும் வழங்கவில்லை. 

இதே போன்ற சம்பவம் கடந்த மே மாதம் 27 ஆம் தேதி மீண்டும் சேலம் மத்திய சிறையில் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரவீன் என்ற வழிப்பறிக்கை நடக்க முடியாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சிறை காவலர்கள் அவரை பிடித்து விசாரித்தபோது தன் ஆசனவாயில் செல்போனை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதை எடுத்து அவரை கழிவறைக்கு தூக்கிச் சென்ற சிறை காவலர்கள் அவரிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி கவரின் சுற்றி வைத்திருந்த செல்போனை மீட்டனர். இதனை இன்னொரு கைதியான ராஜ்குமார் கொடுத்ததாக விசாரணையில் பிரவீன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரிடம் சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கடந்த மாதத்தில் மட்டும் சேலம் மத்திய சிறைச்சாலையில் ஆறு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று சிறை சோதனைக் குழுவினர் ஒன்றாவது பிளாக்கில் உள்ள கைதிகளிடம் சோதனை நடத்தினர். இதில் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற கைதி. ஆசனவாயில் பதுக்கி வைத்திருந்த ஒரு செல்போன், இரண்டு பேட்டரி, ஒரு சிம்கார்டு மற்றும் ஒரு கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த காவலர்கள், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சேலம் மத்திய சிறையில் தொடர்ச்சியாக கைதிகளின் ஆசனவாயிலில் செல்போன் பதுக்கிய சம்பவம் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Nikita Audio: ”முதல்வரே மன்னிப்பு கேட்கிறார் அஜித் அம்மா மன்னிச்சிடுங்க..” தலைமறைவான நிகிதாவின் புதிய ஆடியோ!
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
Chess Champion Gukesh: ”செஸ் விளையாட்டே பிடிக்கல” கார்ல்சனை புலம்பவிட்ட குகேஷ்.. பட்டம் வென்று அசத்தல்
IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
IND Vs ENG 2nd Test: சொதப்பிடாதிங்கடா பாய்ஸ்.. டார்கெட் 500 வருமா? இங்கிலாந்தை வீழ்த்துமா கில்லின் படை?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
EB Bill: கரண்ட் பில் கன்னா பின்னான்னு வருதா? எங்க தப்பு நடக்குது? மின்சார யூனிட் அளவு, கட்டணத்தை சரிபார்ப்பது எப்படி?
Coimbatore Power Shutdown: கோவை மக்களுக்கு ஷாக்.. இன்றைய(05-07-25) மின் தடை எங்கெல்லாம் தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மக்களுக்கு ஷாக்.. இன்றைய(05-07-25) மின் தடை எங்கெல்லாம் தெரியுமா?
Mahindra XEV 9e BE 6: பிரச்னை ஓவர், ரூ.4 லட்சம் மிச்சம் - XEV 9e, BE 6 பேக் 2-வில் 79KWh பேட்டரி, விலை தெரியுமா?
Mahindra XEV 9e BE 6: பிரச்னை ஓவர், ரூ.4 லட்சம் மிச்சம் - XEV 9e, BE 6 பேக் 2-வில் 79KWh பேட்டரி, விலை தெரியுமா?
Chennai Power Shutdown:  சனிக்கிழமை கூடவா? சென்னையில்  50 இடங்களில் இன்று(05.07.25) பவர் கட் முழு விவரம்
Chennai Power Shutdown: சனிக்கிழமை கூடவா? சென்னையில் 50 இடங்களில் இன்று(05.07.25) பவர் கட் முழு விவரம்
Modi Awarded in Trinidad: பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
Embed widget