மேலும் அறிய

Watch video: நெல்லையில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை; 4 வது கடையில் சிசிடிவிவை பார்த்ததும் தெறித்து ஓடிய கொள்ளையன்..!

3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையன் 4 வது கடையில் பூட்டை உடைக்க முயற்சி செய்கிறார். அப்போது அருகே இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் பூட்டை உடைக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் மக்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் உதவியுடன் காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர்.  மக்கள் கண்ணில் இருந்து தப்பினாலும் மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமராவின் கண்ணில் இருந்து தவறு செய்பவர்கள் தப்புவது கடினம். இருப்பினும் அதனை மறந்தும், சேதப்படுத்தியும் பலர் தொடர்  கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பின்னர் காவல்துறையினரால் பிடிபட்டு கம்பி எண்ணி வருகின்றனர்.


Watch video: நெல்லையில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை; 4 வது கடையில் சிசிடிவிவை பார்த்ததும் தெறித்து ஓடிய கொள்ளையன்..!

இந்த சூழலில் நெல்லை சந்திப்பு அருகே உடையார்பட்டி பகுதியில் தொடர்ச்சியாக அடுத்ததடுத்த 3 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அங்குள்ள கோழிக்கறி விற்பனை செய்யும் கடை மற்றும் டயர் விற்பனை செய்யும் கடைகள் என 3 கடைகளில் நேற்று இரவு மர்ம நபர் கடப்பாறை மூலம் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளார். குறிப்பாக சிறிய கடைகள் என்பதால் அந்த கடைகளில் உள்ள  கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் கடைகளை திறக்க கடைக்காரர்கள் வந்த போது அடுத்தடுத்த கடைகளில் உள்ள கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதோடு அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

 

அப்போது அங்குள்ள கேமரா ஒன்றில் பதிவான காட்சிகளை கைப்பற்றியதில் அதில் மர்ம நபர் ஒருவர் கையில் கடப்பாறை கம்பியுடன் ஆமை போல் கடை முன்பு சென்று சுற்றி பார்த்துவிட்டு கையில் இருந்த கடப்பாறையால் பூட்டை உடைப்பது தெரிய வந்தது. குறிப்பாக 3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையன் 4வது கடை முன்பு நின்று கடப்பாறையால் பூட்டை உடைக்க முயற்சி செய்கிறார். அப்போது அருகே இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் பூட்டை உடைக்கும் முயற்சியை விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இந்த காட்சிகளை வைத்து  நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை போன மதிப்பு தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
3 வயது பிஞ்சுவைக் கொன்று பாத்ரூம் நாடகமாடிய தாயும் கள்ளக்காதலனையும் குண்டாஸில் தூக்கிய எஸ்.பி - மயிலாடுதுறையில்பரபரப்பு
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Chengalpattu metro rail : அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
அடி தூள்.! செங்கல்பட்டு வரை மெட்ரோ ரயில்.. எதிர்பார்த்த மக்களுக்கு அசத்தல் அறிவிப்பு வந்தாச்சு
Thirumavalavan:
Thirumavalavan: "தர்மேந்திர பிரதான் பாவம்.." திருமாவளவன் திடீரென ஏன் அப்படி பேசினார்?
Embed widget