மேலும் அறிய

Watch video: நெல்லையில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை; 4 வது கடையில் சிசிடிவிவை பார்த்ததும் தெறித்து ஓடிய கொள்ளையன்..!

3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையன் 4 வது கடையில் பூட்டை உடைக்க முயற்சி செய்கிறார். அப்போது அருகே இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் பூட்டை உடைக்கும் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாவட்டத்தில் மக்கள் கூடும் முக்கிய இடங்கள் மற்றும் மக்கள் வசிக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் உதவியுடன் காவல்துறையினர் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளனர்.  மக்கள் கண்ணில் இருந்து தப்பினாலும் மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமராவின் கண்ணில் இருந்து தவறு செய்பவர்கள் தப்புவது கடினம். இருப்பினும் அதனை மறந்தும், சேதப்படுத்தியும் பலர் தொடர்  கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பின்னர் காவல்துறையினரால் பிடிபட்டு கம்பி எண்ணி வருகின்றனர்.


Watch video: நெல்லையில் அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை; 4 வது கடையில் சிசிடிவிவை பார்த்ததும் தெறித்து ஓடிய கொள்ளையன்..!

இந்த சூழலில் நெல்லை சந்திப்பு அருகே உடையார்பட்டி பகுதியில் தொடர்ச்சியாக அடுத்ததடுத்த 3 கடைகளில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அங்குள்ள கோழிக்கறி விற்பனை செய்யும் கடை மற்றும் டயர் விற்பனை செய்யும் கடைகள் என 3 கடைகளில் நேற்று இரவு மர்ம நபர் கடப்பாறை மூலம் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடித்துள்ளார். குறிப்பாக சிறிய கடைகள் என்பதால் அந்த கடைகளில் உள்ள  கல்லாவில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் கடைகளை திறக்க கடைக்காரர்கள் வந்த போது அடுத்தடுத்த கடைகளில் உள்ள கதவுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த  காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதோடு அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

 

அப்போது அங்குள்ள கேமரா ஒன்றில் பதிவான காட்சிகளை கைப்பற்றியதில் அதில் மர்ம நபர் ஒருவர் கையில் கடப்பாறை கம்பியுடன் ஆமை போல் கடை முன்பு சென்று சுற்றி பார்த்துவிட்டு கையில் இருந்த கடப்பாறையால் பூட்டை உடைப்பது தெரிய வந்தது. குறிப்பாக 3 கடைகளில் பூட்டை உடைத்த கொள்ளையன் 4வது கடை முன்பு நின்று கடப்பாறையால் பூட்டை உடைக்க முயற்சி செய்கிறார். அப்போது அருகே இருந்த சிசிடிவி கேமராவை பார்த்தவுடன் பூட்டை உடைக்கும் முயற்சியை விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். இந்த காட்சிகளை வைத்து  நெல்லை சந்திப்பு குற்றப்பிரிவு காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளை போன மதிப்பு தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் அடுத்தடுத்து மூன்று கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget